முரசு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. முரசு என்றப் பாடலை எழுதியவர் --------- ஆவார்.
முரசு என்றப் பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.
2. பாரதியாரின் தந்தையார் ---------- என்பவர்.
பாரதியாரின் தந்தையார் சின்னச்சாமி என்பவர்.
3. பாரதியார் --------- அன்று பிறந்தார்.
பாரதியார் 11-12-1882 அன்று பிறந்தார்.
4. ----------- என்பது பாரதியாரின் துணைவியார் பெயராகும்.
செல்லம்மாள் என்பது பாரதியாரின் துணைவியார் பெயராகும்.
5. இலக்குமியம்மாள் பாரதியாரின் ---------- ஆவார்.
இலக்குமியம்மாள் பாரதியாரின் தாய் ஆவார்.
6. பாரதியார் ---------- இதழில் பணிபுரிந்தார்.
பாரதியார் சுதேசமித்திரன் இதழில் பணிபுரிந்தார்.
7. விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றதால் ---------- என அழைக்கப்பட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றதால் தேசிய கவி என அழைக்கப்பட்டார்
8. உலகைக் காக்கும் இறைவன் பெண்ணுக்கு ---------- வைத்தான்.
உலகைக் காக்கும் இறைவன் பெண்ணுக்கு அறிவு வைத்தான்.
9. சில ---------- பெண்கள் அறிவைக் கெடுக்கின்றனர்.
சில மூடர் பெண்கள் அறிவைக் கெடுக்கின்றனர்.
10. பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் --------- அகலும்.
பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் அறியாமை அகலும்.