5. இக்கால இலக்கியம்

முரசு

பாடல்
Poem


முரசு

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்

காட்சிக் கெடுத்திட லாமோ?

பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்

பேதைமை யற்றிடும் காணீர்!

- பாரதியார்