5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  கிராமப்புறங்களில் வாழும் மக்கள் யார்?

அ) உழைப்பாளர்

ஆ) உழவர்

இ) தொழிலாளர்

ஈ) ஏழையர்

அ) உழைப்பாளர்

2.  உழைப்பாளி மக்கள் வேலை செய்யும்போது என்ன செய்வர்?

அ) ஆடுவர்

ஆ) பாடுவர்

இ) ஓடுவர்

ஈ) தேடுவர்

ஆ) பாடுவர்

3.  நாட்டுப்புறங்களில் பாடும் பாடல்களை எவ்வாறு அழைப்பர்?

அ) நாடோடிப் பாடல்கள்

ஆ) கிராமத்தான் பாடல்கள்

இ) நாட்டுப்புறப் பாடல்கள்

ஈ) பாட்டாளி பாடல்கள்

இ) நாட்டுப்புறப் பாடல்கள்

4.  செவிவழி வரும் பாடல்களை எவ்வாறு அழைப்பர்?

அ) எழுதாக் கிளவி

ஆ) எழுதாப் பாடல்

இ) நாட்டுப் பாடல்

ஈ) வீட்டுப் பாடல்

அ) எழுதாக் கிளவி

5.  பாமர மக்கள் பாடுவதால் அமைந்தப் பாடல்களின் பெயர் என்ன?

அ) நாடோடிப் பாடல்

ஆ) நாட்டார் பாடல்

இ) பாமரர் பாடல்கள்

ஈ) படியாதார் பாடல்

இ) பாமரர் பாடல்கள்

6.  நாட்டுப்புறப் பாடல்களில் நமது பாடப்பகுதி

அ) தாலாட்டுப் பாடல்

ஆ) ஒப்பாரிப் பாடல்

இ) கும்மிப் பாடல்

ஈ) கோலாட்டப் பாடல்

அ) தாலாட்டுப் பாடல்

7.  நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியவர் யார்?

அ) படித்த மக்கள்

ஆ) பாமர மக்கள்

இ) புலவர்

ஈ) கவிஞர்

ஆ) பாமர மக்கள்

8.  வாங்கி வந்த பால்பசுவின் வாலின் நிறம் என்ன?

அ) தங்க நிறம்

ஆ) வெள்ளி நிறம்

இ) வெள்ளை நிறம்

ஈ) கறுப்பு நிறம்

அ) தங்க நிறம்

9.  தாய் வீட்டுச் சீதனமாக வாங்கி வந்தது எது?

அ) கன்று

ஆ) காளை

இ) பால்பசு

ஈ) குதிரை

இ) பால்பசு

10.  அணை கயிறும், பிடிகயிறும் எதனால் செய்யப்பெற்றவை?

அ) வெள்ளி

ஆ) பொன்

இ) இரும்பு

ஈ) ஈயம்

ஆ) பொன்