5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

பாடல்
Poem


சுயமரியாதை உலகு

சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்

தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை

ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம் பின்னர்

ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்

பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்

பேசுசுய மரியாதை உலகுஎனப்பேர் வைப்போம்

ஈதே காண்! சமூகமே! யாம்சொன்ன வழியில்

ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.

- பாரதிதாசன்