நாட்டுப்புறப் பாடல்
பாடல் கருத்து
Theme of the Poem

தன் குழந்தையைத் தூங்க வைக்க தாய் தாலாட்டுப் பாடுகின்றாள். அதன் மூலம் தன் தாய்வீட்டுச் சீதனமான பால்பசுவின் பெருமையைப் பாடுகிறாள். வாங்கி வந்த பால்கறக்கும் பசுவின் வாலும், கொம்பும் தங்க நிறமானவை. அணைத்தும், பிடித்தும் பால் கறப்பதற்குப் பயன்படுத்தும் கயிறுகளும் பொன்னால் செய்யப்பட்டவையாகும்.