5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  பாரதிதாசன் காலம் சமுதாயச் சீர்திருத்தக் காலமாகும்.

சரி

2.  பாரதிதாசன் பாடல்களில் தேசவிடுதலையே பாடுபொருளாக இருந்தது.

தவறு

3.  பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்தார்.

சரி

4.  பாரதிதாசன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

சரி

5.  பாரதிதாசன் ‘மயில்’ என்ற கவிதை ஏட்டை நடத்தினார்.

தவறு

6.  பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டப் பெற்றார்.

சரி

7.  பாரதிதாசன் பாண்டியன் பரிசு என்ற காவியம் படைத்தார்.

சரி

8.  இந்த உலகம் சண்டைச் சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

தவறு

9.  உலகம் சாதி, சமய வேறுபாடுகள் நிறைந்து காணப் பெறுகிறது.

சரி

10.  பேதமிலா உலகமே சுயமரியாதை உலகமாகும்.

சரி