4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


அபிராமி அந்தாதி நூலை எழுதியவர் அபிராமிப் பட்டர். இவர் திருக்கடையூரில் பிறந்தார். இன்றைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள பெண் தெய்வத்தின் பெயர் அபிராமி. இவர் இத்தெய்வத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும்.

இவர் இந்நூலின் எழுபத்து ஒன்றாம் (71) பாடலைப் பாடியபோது அபிராமி தெய்வம் நேரில் வந்து காட்சித் தந்ததாக ஒரு புராணக் கருத்து நிலவுகிறது.