இரட்டுற மொழிதல்
பாட அறிமுகம்
Introduction to Lesson
கலைசை என்று வழங்கப்பெறும் தொண்டை நாட்டிலுள்ள தொட்டிக்கலை என்னும் ஊரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது சிலேடை வெண்பாக்களால் பாடப்பெற்ற நூல் கலைசைக்கோவை ஆகும். தொட்டிக்கலை என்னும் ஊர்ப்பெயர் பின்னாளில் மருவியும் திரிந்தும் இன்று கலைசை என வழங்கப்பெறுகிறது என்பர்.