4. சிற்றிலக்கியம்

கலிங்கத்துப் பரணி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர் ---------.

தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர்ஒட்டக்கூத்தர்

2.  சிற்றிலக்கியங்கள் ----------- நூல்களைக் கொண்டது.

சிற்றிலக்கியங்கள் 96 நூல்களைக் கொண்டது..

3.  தமிழில் தோன்றிய முதல் பரணி ----------.

தமிழில் தோன்றிய முதல் பரணி கலிங்கத்துப் பரணி.

4.  கலிங்கத்துப் பரணி ----------- பாடல்களைக் கொண்டது.

கலிங்கத்துப் பரணி 599 பாடல்களைக் கொண்டது.

5.  முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் ---------.

முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் சயங்கொண்டார்

6.  பரணி என்பது ------- யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.

பரணி என்பது ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.

7.  சயங்கொண்டார் பிறந்த ஊர் -------------.

சயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி

8.  தீபங்குடி ------------ நாட்டில் உள்ளது.

தீபங்குடி சோழ நாட்டில் உள்ளது.

9.  முதற்குலோத்துங்க சோழன் ---------- குலத்தில் தோன்றியவன்.

முதற்குலோத்துங்க சோழன் சாளுக்கிய குலத்தில் தோன்றியவன்.

10.  விசயதரன் என்பது ------------ வேறு பெயர்.

விசயதரன் என்பது முதற்குலோத்துங்க சோழனின் வேறு பெயர்.