4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  சிலேடை என்பது எத்தனைப் பொருள் தருவது?

சிலேடை என்பது இருபொருள் தருவதாகும்.

2.  இரட்டுற மொழிதல் என்பதன் வேறுபெயர் என்ன?

இரட்டுற மொழிதல் என்பதன் வேறு பெயர் சிலேடை என்பதாகும்.

3.  தொட்டிக்கலை என்பது எவ்வாறு மருவியது?

தொட்டிக்கலை என்பது திரிந்து ‘கலைசை’ என மருவியது.

4.  தொட்டிக்கலை எந்த நாட்டில் உள்ளது?

தொட்டிக்கலை தொண்டை நாட்டில் உள்ளது.

5.  கலைசைச் சிலேடையின் ஆசிரியர் யார்?

கலைசைச் சிலேடையின் ஆசிரியர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்.

6.  தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் பிறந்த ஊர் எது?

தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் பிறந்த ஊர் காட்டுமன்னார்கோயில்.

7.  ‘கா’ என்பதற்கு என்ன பொருள்?

‘கா’ என்பதற்குச் சோலை என்று பொருள்.

8.  ‘அலர்’ என்றால் என்ன?

‘அலர்’ என்றால் மலர் என்று பொருள்.

9.  தாரகாசுரனின் மூன்று புதல்வர்கள் யாவர்?

தாரகாசுரனின் மூன்று புதல்வர்கள் தாரகாட்சன், கமலாட்சன், ஒத்தன்மாலி ஆவர்.

10.  சிவன் அசுரர்களின் என்னென்னக் கோட்டைகளை அழித்தான்?

சிவன் அசுரர்களின், பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று கோட்டைகளை அழித்தான்.