4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?

குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்.

2.  திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய செய்யுள் நாடக நூல் எது?

திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய செய்யுள் நாடக நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி.

3.  உலாவந்த குற்றால நாதரை விரும்பியப் பெண் யார்?

உலாவந்த குற்றால நாதரை விரும்பியப் பெண் வசந்த வல்லி.

4.  ஓடிக் கொண்டே இருப்பது எது?

ஓடிக் கொண்டே இருப்பது வெள்ளப் பெருக்கு.

5.  சங்குப் பூச்சிகள் ஏன் வருந்தின?

சங்குப் பூச்சிகள் சூலுற்றிருந்ததால் வருந்தின.

6.  சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைபெறும்?

சிற்றிலக்கியங்கள் 96 வகைபெறும்.

7.  கிண்கிணி என்ற அணியை எங்கு அணிவார்கள்?

கிண்கிணி என்ற அணியை காலில் அணிவார்கள்.

8.  குற்றாலத்தில் வாழ்கின்ற மக்கள் எதனைத் தேடுகின்றனர்?

குற்றாலத்தில் வாழ்கின்ற மக்கள் நல்லறத்தையும், கீர்த்தியையும் தேடுகின்றனர்.

9.  யோகியர் எதை விரும்புவார்கள்?

யோகியர் தனித்த நிலையை விரும்புவார்கள்.

10.  பெண்களின் இடை ஏன் வாடியது?

இல்லற இன்பத்தால் பெண்களின் இடை வாடியது.