இரட்டுற மொழிதல்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இரட்டுற மொழிதல் என்பது ----------- ஆகும்.
இரட்டுற மொழிதல் என்பது சிலேடை ஆகும்.
2. சிலேடை -------- வகைபெறும்.
சிலேடை இரண்டு வகைபெறும்.
3. கலைசை என்பது ----------- என்னும் ஊராகும்.
கலைசை என்பது தொட்டிக்கலை என்னும் ஊராகும்.
4. தொட்டிக்கலை என்பது --------- நாட்டில் உள்ளது.
தொட்டிக்கலை என்பது தொண்டை நாட்டில் உள்ளது.
5. சுப்பிரமணிய முனிவர் ------------- ஆதீனப் புலவராய் இருந்தார்.
சுப்பிரமணிய முனிவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் இருந்தார்.
6. திருவாவடுதுறையைப் பாடிய நூல் -------------- என்பதாகும்.
திருவாவடுதுறையைப் பாடிய நூல் திருவாவடுதுறைக் கோவை என்பதாகும்.
7. வண்டினம் ----------- கால்களை உடையன.
வண்டினம் ஆறு கால்களை உடையன.
8. அரி என்பது --------- எனும் கடவுள்.
அரி என்பது திருமால் எனும் கடவுள்
9. அரிவை என்பது ----------- ஆகும்.
அரிவை என்பது உமாதேவி ஆகும்
10. சிவன் உமாதேவியை ------------ பாகத்தில் கொண்டவன்.
சிவன் உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவன்.