அபிராமி அந்தாதி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. அபிராமிப் பட்டரின் இயற்பெயர் -------------.
அபிராமிப் பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
2. அன்னை அபிராமி குடிகொண்ட ஊர் ---------.
அன்னை அபிராமி குடிகொண்ட ஊர் திருக்கடையூர்.
3. திருக்கடையூர் ------------ மாவட்டத்தில் உள்ளது.
திருக்கடையூர் நாகை மாவட்டத்தில் உள்ளது.
4. தாயைத் தெய்வமாக வணங்குவது ------------- பண்பாகும்.
தாயைத் தெய்வமாக வணங்குவது தமிழ்த் திராவிடப் பண்பாகும்.
5. அந்தம் என்ற சொல்லிற்கு --------- என்று பொருள்.
அந்தம் என்ற சொல்லிற்கு முடிவு என்று பொருள்.
6. ஆதி என்பது ------------ எனப் பொருள் பெறும்.
ஆதி என்பது தொடக்கம் எனப் பொருள் பெறும்.
7. தோத்திரம் என்பது ---------- எனப் பொருள் பெறும்.
தோத்திரம் என்பது உச்சரித்து எனப் பொருள் பெறும்.
8. அபிராமி என்பது --------- கடவுளாகும்.
அபிராமி என்பது பெண் கடவுளாகும்.
9. அபிராமியின் தோற்றம் ----------- போன்றது.
அபிராமியின் தோற்றம் மின்னல் போன்றது
10. அபிராமியை மனத்தில் நினையாதவர்க்கு வீடுதோறும் ---------- எடுக்கும் நிலைவரும்.
அபிராமியை மனத்தில் நினையாதவர்க்கு வீடுதோறும் பிச்சை எடுக்கும் நிலைவரும்.