திருக்குற்றாலக் குறவஞ்சி
பாடல்
Poem
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக்காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக்காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக்காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் யொரியநாடே.
- திரிகூடராசப்பக் கவிராயர்
