4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  திருக்கடையூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

அ) நாகை

ஆ) திருவாரூர்

இ) தஞ்சை

ஈ) திருச்சி

அ) நாகை

2.  அன்னை அபிராமி குடிகொண்ட ஊர் எது?

அ) பூம்புகார்

ஆ) நாகை

இ) காரைக்கால்

ஈ) திருக்கடையூர்

ஈ) திருக்கடையூர்

3.  அபிராமிப் பட்டரின் இயற்பெயர் என்ன?

அ) நாகராசன்

ஆ) சீனிவாசன்

இ) சுப்பிரமணியன்

ஈ) வேலாயுதன்

இ) சுப்பிரமணியன்

4.  திருக்கடையூரில் குடிகொண்ட தெய்வம் எது?

அ) பத்திரகாளி

ஆ) காளி

இ) கருமாரி

ஈ) அபிராமி

ஈ) அபிராமி

5.  செய்யுளில் அந்தாதி என்பது

அ) காசு, மலர், நாள், பிறப்பு என்பதில் முடிவது

ஆ) ஒரு பாடலின் முடிவை அடுத்தப் பாடலின் தொடக்கமாகக் கொள்வது

இ) ஈற்றடிக்கு முதலடியில் முச்சீர் கொண்டது

ஈ) கலிப்பாவில் அமைவது

ஆ) ஒரு பாடலின் முடிவை அடுத்தப் பாடலின் தொடக்கமாகக் கொள்வது

6.  அபிராமிப் பட்டர் அபிராமி மீது பாடியது

அ) பிள்ளைத் தமிழ்

ஆ) உலா

இ) அந்தாதி

ஈ) சிந்து

இ) அந்தாதி

7.  அபிராமியின் தோற்றம் எது போன்றது?

அ) கண்

ஆ) தீ

இ) நீர்

ஈ) மின்னல்

ஈ) மின்னல்

8.  மாத்திரைப் போது என்பது என்ன?

அ) அந்திப் பொழுது

ஆ) காலைப் பொழுது

இ) இமைப் பொழுது

ஈ) இரவுப் பொழுது

இ) இமைப்பொழுது

9.  ஒவ்வொரு நாளும் வருந்தாமல் வாழ நினைக்க வேண்டியவள்

அ) அன்னை

ஆ) ஆண்டவன்

இ) அபிராமி

ஈ) கருமாரி

இ) அபிராமி

10.  அபிராமி அந்தாதியைப் பாடியவர்

அ) பாரதியார்

ஆ) அபிராமிப் பட்டர்

இ) பாவேந்தர்

ஈ) வள்ளலார்

ஆ) அபிராமிப் பட்டர்