அபிராமி அந்தாதி
பாடல் கருத்து
Theme of the Poem
அன்னை அபிராமியின் திருப்பெயரை இடைவிடாமல் உச்சரித்து, வணங்கி மின்னலைப் போன்ற அவள் தோற்றப் பொலிவினை இமைப் பொழுதும் மனத்தில் வைத்து நினைக்காதவர், வள்ளண்மை, குலப்பெருமை, குடிப்பெருமை, கல்விச் சிறப்பு, நற்குணம் குறைந்து ஒவ்வொரு நாளும் வீடுவீடாகச் சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகமெங்கும் இரந்து நிற்பார்கள்.