இரட்டுற மொழிதல்
பாடல் கருத்து
Theme of the Poem
முதல் பகுதி
● பாவலர் ஆவலுடன் காவலரைச் சூழும் கலசை.
● ஆறுகால் உடைய வண்டினம் கா அலரைச் சூழும் கலசை - என்று பொருள் கொள்ள வேண்டும்.
● பாவலர் | - பாக்கள் இயற்றும் புலவர் |
● ஆவலுடன் | - பரிசில் பெறும் விருப்புடன் |
● காவலரை | - நாடாளும் மன்னவனை |
● சூழும் | - சுற்றி (இருக்கப்பெறும்) இருக்கும் |
● ஆறுகால் வண்டினம் | - ஆறு கால்களையுடைய வண்டுக் கூட்டம் |
● கா அலரை | - கா-சோலை (அலர் - மலர்கள்) -சோலையில் மலர்ந்துள்ள மலர்களை |
● சூழும் | - தேன் உண்ண மொய்க்கும் |
● கலைசை | - தொட்டிக்கலை என்னும் ஊர் |
பாவில் வல்ல புலவர்கள் பரிசில் பெறும் விருப்பத்தோடு மன்னனைச் சுற்றித் திரியும் தொட்டிக்கலை என்னும் ஊர்.
வண்டினங்கள் பல கூட்டமாகச் சோலையில் மலர்ந்துள்ள மலர்களின் தேனை உண்ண மொய்க்கும் தொட்டிக்கலை என்னும் ஊர்.
இரண்டாம் பகுதி
● அரிவை அம்புஆகத் தான்
● அரிவை அம் பாகத்தான்
அரிவை - திருமாலை
பொருள் : அரிவை அம்பு ஆக தான் - திருமாலைக் கூர்மையான அம்பாகக் கொண்டு
பொருள் : அரிவை - சிவபெருமான் மனைவி உமாதேவி.
அம் - அழகிய,
பாகத்தான் - சரிபாதியாக இடப்பாகத்தில் கொண்ட சிவன்
தன் மனைவி உமாதேவியை தன் உடம்பில் இடப்பாகத்தில் சரிபாதியாகக் கொண்ட சிவன், திருமாலைக் கூர்மையான அம்பாகக் கொண்டு மூன்று அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பால் ஆகிய கோட்டைகளை அழித்தவன் (சிவபெருமான்) என்பது பொருள்.
▪ அரிவையம்பாகத்தான் வரலாறு:
கைலாய மலையில் சிவபெருமானும் பார்வதியும் ஒரே இடத்தில் இருந்தபோது பிருங்கி என்னும் முனிவர் வண்டின் வடிவங்கொண்டு சிவபெருமானை மட்டும் வலம் வந்தார். இதனைக் கண்ட பார்வதி இறைவனிடம் வரம்பெற்று இை்வனின் இடப்பாகத்தைத் தனக்குப் பெற்றாள்.
▪ அரண், ஒருமூன்று எய்தோன் வரலாறு
அசுரன் ஆகிய தாரகாசுரனின் புதல்வர்கள் தாரகாட்சன், கமலாட்சன், ஒத்தன்மாலி ஆகிய மூவரும் சிவபெருமானிடம் வரம்பெற்று பொன், வெள்ளி, இரும்பு இவற்றால் ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைக் கட்டி வாழ்ந்தனர். இவர்கள் தேவர்களையும், மக்களையும் வறுத்தினர். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அக்கோட்டைகளை அழிக்கச் சிவன் பூமியைத் தாராகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும், திருமாலைக் கூர்மையான அம்பாகவும் கொண்டு எய்ய முயன்றபோது சிரித்த சிவனின் சிரிப்பில் தோன்றிய தீப்பொறிகளால் அசுரர் மூவரும் தங்கள் கோட்டைகளுடன் அழிக்கப்பெற்றனர்.