தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருப்பரங்குன்றம் தமிழிக் கல்வெட்டுக்கள்

  • திருப்பரங்குன்றம் தமிழிக் கல்வெட்டுக்கள்

    முனைவர் மா.பவானி
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை

    அமைவிடம் : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்

    எழுத்து:: சங்க காலத்தமிழ் (தமிழி) எழுத்து

    மொழி: தமிழ்

    காலம்: பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு(தோராயமாக)

    குறிப்பு :

    சங்க இலக்கியங்களில் முருகப்பிரானுடைய உறைவிடமாக்க் கருதப்பெறும் திருப்பரங்குன்றத்தில் 3 குகைகள் உள்ளன. 2 குடைவிக்கப்பெற்ற கோயில்கள் . ஒன்று இயற்கையாக அமைந்த குகையாகும் இப்பொழுது முருகப்பிரானுடைய பெருங்கோயிலாக வழிபாட்டில் திகழ்வது பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பெற்றது. இக்கோயிலில் நெடுஞ்சடையன் காலத்தில் துர்க்கைக்கும் ஜேஷ்டாதேவிக்குமாகக் கட்டப்பெற்ற கோயிலாகும். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. அவற்றில் தமிழி எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் மிகக் குறிப்பிடத்தக்க கல்வெட்டு ஒன்று உண்டு.

    கல்வெட்டுப் பாடம்

    எருக்காட்டூர் இழகுடும்பிகன் பொலாலையன்
    செய்தான் ஆய்சயன் நெடுசாதன்

    எருக்காட்டூரைச் சேர்ந்த பொலாலையன் என்பவரும் ஆய்சயன் நெடுசாதன் என்பவரும் சமணர் படுக்கை செய்து கொடுத்ததைப் பற்றியது.

    முக்கியத்துவம் :

    ஈழத்தைச் சேர்ந்த பொலாலையன் என்று எடுத்துக்கொண்டால் இவர் ஈழம் குறித்துக் கிடைக்கும் முதல் கல்வெட்டாகக் கொள்ளலாம். ஆயினும், இதை ஈழக்குடும்பத்தைச் சேர்ந்த எக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கொள்ளலாம். ‘’ஈழர்’’ என்பதற்குப் பனை மரத்திலிருந்து பதனி இறக்கும் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் பொருள் உண்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:49:54(இந்திய நேரம்)