| அஃகேனம் - ஆய்தம் | 3 |
| அகக்கரணம் - அகக்கருவி | 43 |
| அகத்தியன் - தமிழ்க்குப் பரமாசாரியர்; 'அகத்தியம்' என்னும் பெயரால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணம் செய்தவர் | 1 |
| அகப்புறம் | 89, 107, 117, 281 |
| அகம் | 63, 89, 117, 281 |
| அகருமம் | 68 |
| அகலிலா - நீங்குதலில்லாத | 141 |
| அகலுதியேல் - நீங்குவாயானால் | 243 |
| அகாரண மிகைமொழி | 267 |
| அக்கள்வன் மகன் - அக்கள்வனாகிய மகன் | 134 |
| அங்காரன் - ஓரரசன்போலும்; 'வசைப் பட்டுக்கண்டவங்காரன்' என்றதை நோக்குக. | 195 |
| அங்கராகம் - உடம்பின் செந்நிறம் | 185 |
| அங்கியற்பொருள் | 100 |
| அகன்றலை ஊர் - பரந்த இடத்தை உடைய ஊர் | 153 |
| அங்கு நோக்கிப் படை எழுதல் | 108 |
| அங்குலியம் - மோதிரம் | 187 |
| அசலம்-அசையாப் பொருள் | 41 |
| அசுர மணம் | 282 |
| அசோக தருவின் போது கொண்டு செருவேநின்று - அசோக மரத்தின் மலரைக் கொண்டு போர் செய்தலையே எண்ணி நின்று | 186 |
| அச்சம் | 257 |
| அஞ்சாச் சிறப்பு | 115 |
| அஞ்சனக்கண் - மை உண் கண், 'மைபோன்ற கரிய கண்' என்றலுமாம் | 54 |
| அடர்ச்சிய - (அடைச்சிய என்றும் பாடம்) கூந்தலில் அடைவித்த | 134 |
| அடலழுங்கு அழல் செவ்வேல் - பகை அரசர்களுடைய வலிமையைக் கெடுத்தற்குக் காரணமானதும், பகைவர்களைக் கோபித்தலையுடையதும், போருக்குரிய செம்மையினை உடையதுமாகிய வேல். | 147 |
| அடல்திகழ் - வன்மை விளங்கும் | 187 |
| அடல் தேர் - வலிமையினை உடைய தேர் | 246 |
| அடு | 67, 82 |
| அடும்பயில் | 150 |
| அடை பொதுவாய்ப் பொருள் வேறுபட மொழிதல் | 250 |
| அடையும் பொருளும் அயல்பட மொழிதல் | 250 |
| அடை விரவிப் பொருள் வேறுபட மொழிதல் | 250 |
| அடைவு | 213, 214 |
| அடைவே | 37 |
| அட்ட - (பகைவரைக்) கொன்ற | 134 |
| அணங்கின் - தெய்வப்பெண் போன்ற இம்மங்கையின் | 193 |
| அணங்கு - தெய்வப்பெண் | 222 |
| அணங்கு உலாவு வாளி - துன்பம் அமைந்த அம்பு | 193 |
| அணி | 70 |
| அணிதங்கு - அழகு பொருந்திய | 184 |
| அணிந்த ஆரம் - அணிந்த முத்துமாலை ('அணிந்த வாரம' எனக்கொண்டு, அதில் வாரம் என்பதற்கு அன்பு என்று பொருள் கூறுதலுமாம்.) | 193 |
| அண்ணம் - மேல் வாயும் கீழ் வாயும் | 6 |
| அண்ணிய - சார்ந்த | 26 |
| அண்ணல் - பெருமையை உடையவன் | 235 |
| அதிக வசனம் - மிகை மொழி | 132 |
| அதிசக்கு வரி | 185 |
| அதிசயதி | 185 |
| அதிசய உவமை | 223 |
| அதிசயம் | 251 |
| அதிதிருதி | 186 |
| அதிபலம் | 121 |
| அதியாடி | 186 |
| அதியுத்தம் | 183 |
| அத்திகிரி - காஞ்சீபுரம், அந்தச் சக்கரம் | 163 |
| அந்தோ - இரக்கக் குறிப்பிடைச் சொல் | 159 |
| அநியமச்சிலேடை | 260, 261 |
| அநியமவுவமை | 220, 224 |
| அநிருதை | 118 |
| அநுமானம் | 121 |
| அந்தம் | 59, 101 |
| அந்தரத்து - ஆகாயத்தில் | 234 |
| அந்தி - இரவு | 235 |
| அந்நிய உவமை | 231 |
| அபூத உவமை | 220, 226 |
| அமர் - போரில் | 134 |
| அமலன் - குற்றம் அற்றவன் | 32 |
| அமுதசாகரனார் | 166 |
| அம்பலத்தாடி | 70 |
| அம்புசம் | 62 |
| அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா | 139, 143 |
| அம்போதரங்கம்-கலிப்பாவின் உறுப்புகள் ஆறனுள் ஒன்று. | 139 |
| அயம் ஆனா-அதிட்டம் கெடாத | 184 |
| அயலாதாரம் | 41, 45 |
| அயர் - சோர்வு (முதனிலைத் தொழிற்பெயர்) | 140 |
| அயர்த்தல்-மறத்தல் | 250 |
| அயல்-வேறு | 237, 252 |
| அயில்-வேல் | 185 |
| அயுத்தம் | 252 |
| அரங்கம் | 65 |
| அரங்கன் | 42 |
| அரங்கு - சபை | 125, 238 |
| அரண் | 123 |
| அரதனம் | 66 |
| அரவம் | 110 |
| அரவிந்தம் - தாமரை | 224 |
| அரவு - பாம்பு | 253 |
| அரன் | 65 |
| அராகம் - கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறனுள் ஒன்று | 131, 289 |
| அரி - சிங்கம் | 171 |
| அரிசில எந்தி - சில செவ்வரிகளை ஏந்தி | 185 |
| அரியான் | 63 |
| அருங்கல உயர்வு | 232 |
| அருண கிரணமே போல் - அருணனுடைய செந்நிறக் கதிர்களை ஒப்ப | 185 |
| அருணன்-சூரியனுடைய சாரதி | 200 |
| அருத்தாந்த நியாசம்-பிற பொருள் வைப்பு | 210 |
| அரும்பாலை | 281 |
| அருள்பாராவதம்-(அருள்பருமை ஆவதம்) அருளாகிய பெரிய மேகம். (ஆவர்த்தம் என்பது ஏழுமேகங்களில் ஒன்று;் அஃது இங்குப் பொதுவாய் மேகம் என்னும் பொருள் தந்து நின்றது. | 142 |
| அரை இருள்-நடு இரவு | 142 |
| அர்ப்பாயம் | 119 |
| அலகிட்டு - வண்ணம் அறுத்து | 167 |
| அலங்காரம் - ஆடை அணிகளாற் சிங்காரித்தல் | 191 |
| அலங்காரங்கள் - அணிகள் | 198 |
| அலங்குசினை - அசைகின்ற கிளைகள் | 142 |
| அலங்குதார் - அசைகின்ற மாலை | 147 |
| அலவன்-நண்டு | 100 |
| அலவன்-தோட்டுவரம்பூடு ஆடும்- நண்டுகள் (உழவர்களாற் களைந்தெறி யப்பட்ட பூவிதழ்களை உடைய (வயல்) வரம்புகளில் விளையாடும் | 129 |
| அவதிக்காரகம்-ஐந்தாம் வேற்றுமை. (ஒன்றினின்று ஒன்று நீங்குவது; நீக்கப் பொருள்.) | 27, 40 |
| அவநுதி | 213, 258 |
| அவயவி உருவகம் | 233, 235 |
| அவலம் | 135, 257 |
| அவலோகிதன் - ஒரு பௌத்த பெரியார் | 1 |
| அவரவர் ஆறு - அவர் அவர் முற்பிறப்பிற் செய்த வினையின் வழி | 172 |
| அவர் அறிவர் | 84 |
| அவர்கள் அறிவர்கள் | 84 |
| அவர்கள் நிற்பர்கள் | 84 |
| அவர் நிற்பர் | 84 |
| அவள் அறியும் | 84 |
| அவன் அறியும் | 84 |
| அவனி மேல் அகரியாய் - பூமியின்கண் காணுதற்கு அரிய அழகை உடையவளே | 187 |
| அவன் என்செய்க | 83 |
| அவாவின் நிலை | 118 |
| அவிநயனார் | 32, 88, 167 |
| அவிரோதச் சிலேடை | 260, 262 |
| அவிழ் - சோறு | 70 |
| அவைக்குட்டம் - சபையாகிய கடல் (குட்டம் - ஆழம், அது பண்பாகு பெயராய்க் கடலை உணர்த்தியது.) | 173 |
| அவையிற்றை | 109 |
| அவையின் அமைதி | 280 |
| அவ்வவ்-அந்த அந்த அவ்வியபாவம்-(அவ்வியயீபாவம்) முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொல் தொகை | 49 |
| அவ்விய வுருவகம் | 233, 234 |
| அழலை - தீயின் செந்நிறம், (பொருளாகு பெயர்) | 231 |
| அழற்கலி மழை - வெப்பத்தைப் பொருத்து ஒழுகும் மழை | 187 |
| அழிதொகை | 59 |
| அழியாத்தொகை | 59 |
| அழிவுபாட்டபாவம் | 252, 253 |
| அளபு- அளபெடை | 3 |
| அளநிலவு - நெருக்கமாகிய நிலவு | 186 |
| அளபெடை அனுகரணம் அலகு பெறாமைக்கு உதாரணம் ('உப்போஒ வென வுரைத்து') | 155 |
| அளப்பான் | 89 |
| அளவடி- நாற்சீர் அடி; (இது நேர் அடி எனவுங் கூறப்படும்.) | 124 |
| அளவை | 89 |
| அளி- வண்டு | 184 |
| அறநாட்டுப்பெண்டிர் (பறநாட்டுப் பெண்டிர் எனவும் பாடம்) | 133 |
| அறநெறி - தருமத்தின் வழி | 131 |
| அறன் அலது - தீவினை (கொடுமை) | 138 |
| அறி | 85 |
| அறிக்கை | 69 |
| அறிதல் | 70 |
| அறிந்தால் | 76 |
| அறியத் தகுவான் | 85 |
| அறியப்படா நின்றாள் | 85 |
| அறியப்படா நின்றான் | 85 |
| அறியப்படு | 85 |
| அறியப்படுவாள் | 85 |
| அறியப்படுவான் | 85 |
| அறியப்பட்டாள் | 85 |
| அறியப்பட்டான் | 86 |
| அறியில் | 76 |
| அறியுஞ்சாத்தன் | 74 |
| அறிவல் | 83 |
| அறிவன் | 83 |
| அறிவு | 69, 70 |
| அறுபுள்ளி | 100 |
| அறுவகைத் தொழில் | 118 |
| அறுவாய் - வெட்டுவாய் | 221 |
| அற்புதக் குறிப்பு | 121 |
| அற்புதவுவமை | 220, 224 |
| அற்று - அத்தன்மைத்து | 185 |
| அனவரதமும் - எப்பொழுதும் | 192 |
| அனாதரத் தடைமொழி | 242 |
| அனுசயத் தடைமொழி | 242, 245 |
| அனுட்டுப்பு | 184 |
| அனுபம - அனுபமனே! | 192 |
| அனுபமனன் - சோழ அரசர்களில் ஒருவன் | 219 |
| அனுமானம் | 272 |
| அன்பிலர்துறத்தல் - காதலர் அன்பிலராய்ப் (பொருள் கருதிப்) பிரிந்து செல்லுதல் | 138 |
| அன்புறுத்தல் | 118 |
| அன்மொழிப்பொருட்சிறப்புத் தொகை | 58 |
| அன்றிய மும்மை விகாரம் -- பொருந்திய மூன்று (புணர்ச்சி) விகாரங்கள்; (அவை; தோன்றல், திரிதல், கெடுதல் என்பன.) | 8 |
| அன்னோ--இரக்கக் குறிப்பிடைச் சொல் | 32 |