முகப்பு |
யானை (களிறு, பிடி, வேழம், கோட்டுமா, ஒருத்தல், நல்மான்) |
14. பாலை |
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
||
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
||
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
||
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
||
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
||
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
||
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
||
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
||
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. | உரை | |
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
18. பாலை |
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல |
||
வருவர் வாழி-தோழி!-மூவன் |
||
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், |
||
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் |
||
5 |
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
|
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் |
||
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, |
||
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் |
||
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, |
||
10 |
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. | உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்
|
19. நெய்தல் |
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
||
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
||
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
||
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
||
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
||
செலீஇய சேறிஆயின், இவளே |
||
வருவை ஆகிய சில் நாள் |
||
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! | உரை | |
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
36. குறிஞ்சி |
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, |
||
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, |
||
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் |
||
கல்லக வெற்பன் சொல்லின் தேறி, |
||
5 |
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, |
||
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, |
||
ஆனாக் கௌவைத்துஆக, |
||
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்
|
39. குறிஞ்சி |
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
||
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
||
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
||
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
||
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
||
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
||
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
||
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
||
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. | உரை | |
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
41. பாலை |
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த |
||
வெண் புறக் களரி விடு நீறு ஆடி, |
||
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் |
||
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் |
||
5 |
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- |
|
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, |
||
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட |
||
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி, |
||
சிறு நுண் பல் வியர் பொறித்த |
||
10 |
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. | உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்
|
43. பாலை |
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் |
||
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், |
||
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
||
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு |
||
5 |
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
|
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே |
||
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, |
||
அஞ்சல் என்ற இறை கைவிட்டென, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், |
||
10 |
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
|
ஓர் எயின் மன்னன் போல, |
||
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்
|
47. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி |
||
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, |
||
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் |
||
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென |
||
5 |
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
|
கானக நாடற்கு, 'இது என' யான் அது |
||
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து, |
||
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, |
||
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, |
||
10 |
அன்னை அயரும் முருகு நின் |
|
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்
|
51. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
||
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
||
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
||
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
||
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
||
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
||
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
||
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? | உரை | |
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
62. பாலை |
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
||
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
||
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
||
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
||
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
||
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
||
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
||
உலவை ஆகிய மரத்த |
||
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? | உரை |
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|
65. குறிஞ்சி |
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- |
||
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் |
||
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, |
||
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, |
||
5 |
புலியொடு பொருத புண் கூர் யானை |
|
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
||
விற் சுழிப்பட்ட நாமப் பூசல் |
||
உருமிடைக் கடி இடி கரையும் |
||
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே. | உரை | |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! | உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
75. குறிஞ்சி |
நயன் இன்மையின், பயன் இது என்னாது, |
||
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, |
||
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது |
||
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது |
||
5 |
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல் |
|
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
||
பச்சூன் பெய்த பகழி போல, |
||
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் |
||
உறாஅ நோக்கம் உற்ற என் |
||
10 |
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. | உரை |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்
|
85. குறிஞ்சி |
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
||
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
||
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
||
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
||
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
||
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
||
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! | உரை | |
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
89. முல்லை |
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர், |
||
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, |
||
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை |
||
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள், |
||
5 |
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் |
|
அகல் இலை அகல வீசி, அகலாது |
||
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, |
||
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு, |
||
இன்னும் வருமே-தோழி!-வாரா |
||
10 |
வன்கணாளரோடு இயைந்த |
|
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே! | உரை | |
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி
|
92. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
||
வேனில் ஓதி பாடு நடை வழலை |
||
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
||
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
||
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
||
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
||
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
||
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|
103. பாலை |
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
||
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
||
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
||
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
||
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
||
மாயா வேட்டம் போகிய கணவன் |
||
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
||
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
||
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. | உரை | |
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? | உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. | உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
107. பாலை |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
||
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
||
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
||
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
||
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
||
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
||
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
||
ஆனாக் கௌவை மலைந்த |
||
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|
108. குறிஞ்சி |
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
||
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
||
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
||
கணையர், கிணையர், கை புனை கவணர், |
||
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
||
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
||
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
||
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! | உரை | |
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? | உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|
114. குறிஞ்சி |
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும், |
||
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும், |
||
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம் |
||
வைகிக் கேட்டுப் பையாந்திசினே; |
||
5 |
அளிதோ தானே-தோழி!-அல்கல் |
|
வந்தோன்மன்ற குன்ற நாடன்; |
||
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை |
||
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்; |
||
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு |
||
10 |
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, |
|
மையல் மடப் பிடி இனைய, |
||
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே. | உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது.- தொல்கபிலர்
|
126. பாலை |
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
||
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
||
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
||
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
||
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
||
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
||
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
||
இளமை கழிந்த பின்றை, வளமை |
||
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
||
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! | உரை | |
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
137. பாலை |
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், |
||
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் |
||
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று |
||
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை |
||
5 |
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
|
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், |
||
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை |
||
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும் | ||
குன்ற வைப்பின் கானம் |
||
10 |
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! | உரை |
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்
|
141. பாலை |
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், |
||
மாரி யானையின் மருங்குல் தீண்டி, |
||
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, |
||
நீடிய சடையோடு ஆடா மேனிக் |
||
5 |
குன்று உறை தவசியர் போல, பல உடன் |
|
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் |
||
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, |
||
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை |
||
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி |
||
10 |
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
|
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் |
||
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்
|
144. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி |
||
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, |
||
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் |
||
பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
||
5 |
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப் |
|
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, |
||
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் |
||
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, |
||
விரவு மலர் பொறித்த தோளர் |
||
10 |
இரவின் வருதல் அறியாதேற்கே. | உரை |
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
148. பாலை |
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், |
||
'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம் |
||
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, |
||
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, |
||
5 |
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
|
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, |
||
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் |
||
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, |
||
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை |
||
10 |
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
|
அருஞ் சுரம் இறப்ப என்ப; |
||
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே! | உரை | |
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்
|
150. மருதம் |
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்: |
||
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, |
||
அரண் பல கடந்த முரண் கொள் தானை |
||
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு |
||
5 |
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
|
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக் |
||
கலி மா கடைஇ வந்து, எம் சேரித் |
||
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய |
||
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, |
||
10 |
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
|
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. | உரை | |
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
|
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
154. குறிஞ்சி |
கானமும் கம்மென்றன்றே; வானமும் |
||
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி, |
||
பல் குரல் எழிலி பாடு ஓவாதே; |
||
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த |
||
5 |
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை |
|
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது |
||
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!- |
||
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் |
||
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் |
||
10 |
வாரார் ஆயினோ நன்றே; சாரல் |
|
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும், |
||
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே? | உரை | |
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்
|
158. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! நம்வயின், |
||
யானோ காணேன்-அதுதான் கரந்தே, |
||
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே; |
||
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே- |
||
5 |
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி |
|
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி, |
||
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் |
||
வேங்கை முதலொடு துடைக்கும் |
||
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே. | உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
171. பாலை |
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
||
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் |
||
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி |
||
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
||
5 |
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
|
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, |
||
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க |
||
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |
||
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், |
||
10 |
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
|
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. | உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
182. குறிஞ்சி |
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; |
||
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், |
||
பாவை அன்ன நிற் புறங்காக்கும் |
||
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; |
||
5 |
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
|
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, |
||
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!- |
||
கீழும் மேலும் காப்போர் நீத்த |
||
வறுந் தலைப் பெருங் களிறு போல, |
||
10 |
தமியன் வந்தோன், பனியலை நீயே! | உரை |
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
|
186. பாலை |
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி, |
||
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு, |
||
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும் |
||
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை, |
||
5 |
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, |
|
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர் |
||
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில- |
||
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு |
||
காமர் பொருட் பிணி போகிய |
||
10 |
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. | உரை |
பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? | உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
202. பாலை |
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு |
||
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, |
||
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு |
||
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம், |
||
5 |
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் |
|
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் |
||
மா மலை விடரகம் கவைஇ, காண்வர, |
||
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை, |
||
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் |
||
10 |
செல் சுடர் நெடுங் கொடி போல, |
|
பல் பூங் கோங்கம் அணிந்த காடே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
205. பாலை |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் |
||
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி |
||
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் |
||
5 |
துன் அருங் கானம் என்னாய், நீயே |
|
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, |
||
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு |
||
போயின்றுகொல்லோ தானே-படப்பைக் |
||
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் |
||
10 |
நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
|
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! | உரை | |
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்
|
217. குறிஞ்சி |
இசை பட வாழ்பவர் செல்வம் போலக் |
||
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம், |
||
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது |
||
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி, |
||
5 |
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் |
|
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து |
||
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு |
||
புலம்பு சேண் அகல நீக்கி, |
||
புலவி உணர்த்தல் வன்மையானே. | உரை | |
தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? | உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
225. குறிஞ்சி |
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் |
||
பொருத யானை வெண் கோடு கடுப்ப, |
||
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை, |
||
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன |
||
5 |
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை |
|
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத் |
||
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் |
||
பயந்து எழு பருவரல் தீர, |
||
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே? | உரை | |
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்
|
227. நெய்தல் |
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த |
||
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே; |
||
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த |
||
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ! |
||
5 |
படு மணி யானைப் பசும்பூட் சோழர் |
|
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், |
||
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத் |
||
தேர் வழங்கு தெருவின் அன்ன, |
||
கௌவை ஆகின்றது-ஐய!-நின் அருளே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.-தேவனார்
|
228. குறிஞ்சி |
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு |
||
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர, |
||
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள், |
||
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து |
||
5 |
அருளான்கொல்லோ தானே-கானவன் |
|
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம், |
||
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ, |
||
அழுந்துபட விடரகத்து இயம்பும் |
||
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே? | உரை | |
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. | உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
237. பாலை |
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், |
||
பனி மலி கண்ணும் பண்டு போலா; |
||
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் |
||
நீத்து நீடினர் என்னும் புலவி |
||
5 |
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?-மடந்தை!- |
|
உவக்காண் தோன்றுவ, ஓங்கி-வியப்புடை |
||
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் |
||
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, |
||
உலகம் உவப்ப, ஓது அரும் |
||
10 |
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! | உரை |
தோழி உரை மாறுபட்டது.-காரிக்கண்ணனார்
|
247. குறிஞ்சி |
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
||
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, |
||
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, |
||
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் |
||
5 |
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
|
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், |
||
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் |
||
விருந்து இறைகூடிய பசலைக்கு |
||
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! | உரை | |
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.-பரணர்
|
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
253. குறிஞ்சி |
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், |
||
பள்ளி யானையின் வெய்ய உயிரினை, |
||
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து |
||
எனவ கேளாய், நினையினை, நீ நனி: |
||
5 |
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள், |
|
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, |
||
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, |
||
பலவு உறு குன்றம் போல, |
||
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. | உரை | |
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
255. குறிஞ்சி |
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; |
||
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, |
||
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; |
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை |
|
5 |
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
|
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் |
||
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- |
||
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
||
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், |
||
10 |
திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
|
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! | உரை | |
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்
|
261. குறிஞ்சி |
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு |
||
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு |
||
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம், |
||
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி, |
||
5 |
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, |
|
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் |
||
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் |
||
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை, |
||
எருவை நறும் பூ நீடிய |
||
10 |
பெரு வரைச் சிறு நெறி வருதலானே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.-சேந்தன் பூதனார்
|
273. குறிஞ்சி |
இஃது எவன்கொல்லோ- தோழி!-மெய் பரந்து |
||
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் |
||
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின் |
||
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என, |
||
5 |
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், |
|
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை |
||
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என் |
||
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் |
||
குன்ற நாடனை உள்ளுதொறும், |
||
10 |
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? | உரை |
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
|
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? | உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|
287. நெய்தல் |
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த; |
||
நல் எயிலுடையோர் உடையம்' என்னும் |
||
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப் |
||
5 |
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், |
|
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், |
||
காமம் பெருமையின், வந்த ஞான்றை- |
||
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் |
||
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும், |
||
10 |
'தேர் மணித் தெள் இசைகொல்?' என, |
|
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
|
292. குறிஞ்சி |
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த |
||
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் |
||
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், |
||
யாணர் வைப்பின், கானம் என்னாய்; |
||
5 |
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
|
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் |
||
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் |
||
கராஅம் பேணாய்; இரவரின், |
||
வாழேன்-ஐய!-மை கூர் பனியே! | உரை | |
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்
|
294. குறிஞ்சி |
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
||
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
||
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
||
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
||
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
||
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
||
சிலம்புடன் கமழும் சாரல் |
||
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! | உரை | |
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|
299. நெய்தல் |
உரு கெழு யானை உடை கோடு அன்ன, |
||
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, |
||
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது |
||
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் |
||
5 |
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: |
|
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ- |
||
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை |
||
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் |
||
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
300. மருதம் |
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
||
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
||
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
||
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
||
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
||
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
||
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
||
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
||
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
||
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. | உரை | |
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
302. பாலை |
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த |
||
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் |
||
காடு கவின் பூத்தஆயினும், நன்றும் |
||
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் |
||
5 |
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
|
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு, |
||
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு |
||
வெளிறு இல் காழ வேலம் நீடிய |
||
பழங்கண் முது நெறி மறைக்கும், |
||
10 |
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? | உரை |
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
310. மருதம் |
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
||
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
||
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
||
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
||
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
||
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
||
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
||
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? | உரை | |
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|
318. பாலை |
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம் |
||
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த |
||
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, |
||
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, |
||
5 |
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
|
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் |
||
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, |
||
என்றூழ் விடர் அகம் சிலம்ப, |
||
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
333. பாலை |
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
||
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
||
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
||
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
||
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
||
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
||
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
||
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
||
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
||
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. | உரை | |
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! | உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
344. குறிஞ்சி |
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட |
||
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் |
||
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் |
||
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!- |
||
5 |
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை |
|
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் |
||
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப, |
||
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப் |
||
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி |
||
10 |
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, |
|
செந் தினை உணங்கல் தொகுக்கும், |
||
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
|
349. நெய்தல் |
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், |
||
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், |
||
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், |
||
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு |
||
5 |
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் |
|
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, |
||
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத |
||
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, |
||
பின்னிலை முனியா நம்வயின், |
||
10 |
என் என நினையும்கொல், பரதவர் மகளே? | உரை |
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்
|
362. பாலை |
வினை அமை பாவையின் இயலி, நுந்தை |
||
மனை வரை இறந்து வந்தனை; ஆயின், |
||
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி |
||
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த |
||
5 |
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், |
|
நீ விளையாடுக சிறிதே; யானே, |
||
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை |
||
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, |
||
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்; |
||
10 |
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே! | உரை |
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
389. குறிஞ்சி |
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் |
||
தேம் படு நெடு வரை மணியின் மானும்; |
||
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்- |
||
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை |
||
5 |
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, |
|
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் |
||
காவல் நீ' என்றோளே; சேவலொடு |
||
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் |
||
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல |
||
10 |
நன் பொன் இமைக்கும் நாடனொடு |
|
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே. | உரை | |
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
393. குறிஞ்சி |
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் |
||
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, |
||
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, |
||
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், |
||
5 |
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
|
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, |
||
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் |
||
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, |
||
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, |
||
10 |
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
|
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர் |
||
புதுவர் ஆகிய வரவும், நின் |
||
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? | உரை | |
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|