முகப்பு |
தலைவி |
1. குறிஞ்சி |
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; |
||
என்றும் என் தோள் பிரிபு அறியலரே' |
||
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் |
||
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, |
||
5 |
புரைய மன்ற, புரையோர் கேண்மை; |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் |
||
தம் இன்று அமையா நம் நயந்தருளி, |
||
நறு நுதல் பசத்தல் அஞ்சிச் |
||
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! |
உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்
|
14. பாலை |
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
||
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
||
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
||
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
||
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
||
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
||
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
||
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
||
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. |
உரை | |
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
17. குறிஞ்சி |
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
||
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
||
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
||
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
||
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
||
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
||
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
||
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
||
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. |
உரை | |
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|
20. மருதம் |
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி, |
||
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் |
||
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் |
||
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, |
||
5 |
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், |
|
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி, |
||
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல் |
||
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; |
||
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை, |
||
10 |
பழம் பிணி வைகிய தோள் இணைக் |
|
குழைந்த கோதை, கொடி முயங்கலளே. |
உரை | |
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
24. பாலை |
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு |
||
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், |
||
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, |
||
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் |
||
5 |
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
|
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!- |
||
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; |
||
செயல்படு மனத்தர் செய்பொருட்கு |
||
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. |
உரை | |
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்
|
31. நெய்தல் |
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
||
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
||
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
||
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
||
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
||
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
||
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
||
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
||
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
||
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. |
உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
38. நெய்தல் |
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, |
||
பாட்டம் பொய்யாது பரதவர் பகர, |
||
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் |
||
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு |
||
5 |
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
|
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க் |
||
கழி சூழ் படப்பைக் காண்டவாயில், |
||
ஒலி காவோலை முள் மிடை வேலி, |
||
பெண்ணை இவரும் ஆங்கண் |
||
10 |
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. |
உரை |
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்
|
51. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
||
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
||
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
||
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
||
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
||
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
||
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
||
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? |
உரை | |
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
54. நெய்தல் |
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ, |
||
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை |
||
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து- |
||
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி: |
||
5 |
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; |
|
அது நீ அறியின், அன்புமார் உடையை; |
||
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை |
||
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர் |
||
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் |
||
10 |
தெண் திரை மணிப் புறம் தைவரும் |
|
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே! |
உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்
|
56. பாலை |
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ |
||
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, |
||
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, |
||
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் |
||
5 |
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
|
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ |
||
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, |
||
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, |
||
'ஏதிலாட்டி இவள்' எனப் |
||
10 |
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே |
உரை |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
|
64. குறிஞ்சி |
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக! |
||
அன்னவாக இனையல்-தோழி!-யாம் |
||
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்? |
||
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் |
||
5 |
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் |
|
வறனுற்று ஆர முருக்கி, பையென |
||
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என் |
||
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென, |
||
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர் |
||
10 |
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது |
|
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம் |
||
காமம் படர் அட வருந்திய |
||
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே! |
உரை | |
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்
|
66. பாலை |
மிளகு பெய்தனைய சுவைய புன் காய் |
||
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட |
||
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன் |
||
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி, |
||
5 |
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், |
|
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும், |
||
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ- |
||
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், |
||
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், |
||
10 |
மாண் நலம் கையறக் கலுழும் என் |
|
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே? |
உரை | |
மனை மருட்சி.-இனிசந்த நாகனார்
|
69. முல்லை |
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
||
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
||
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
||
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
||
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
||
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
||
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
||
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
||
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
||
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! |
உரை | |
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|
70. மருதம் |
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! |
||
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன |
||
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! |
||
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, |
||
5 |
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, |
|
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ- |
||
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் |
||
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் |
||
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே! |
உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்
|
73. பாலை |
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன |
||
மாணா விரல வல் வாய்ப் பேஎய் |
||
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய, |
||
மன்றம் போழும் புன்கண் மாலை, |
||
5 |
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் |
|
செல்ப என்ப தாமே-செவ் அரி |
||
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் |
||
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் |
||
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் |
||
10 |
நுதற் கவின் அழிக்கும் பசலையும், |
|
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! |
உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
84. பாலை |
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும், |
||
திதலை அல்குலும் பல பாராட்டி, |
||
நெருநலும் இவணர் மன்னே! இன்றே, |
||
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் |
||
5 |
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், |
|
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற |
||
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன |
||
உவர் எழு களரி ஓமை அம் காட்டு, |
||
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் |
||
10 |
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின் |
|
இரந்தோர் மாற்றல் ஆற்றா |
||
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.
|
87. நெய்தல் |
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
||
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
||
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
||
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
||
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
||
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
||
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
||
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. |
உரை | |
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|
94. நெய்தல் |
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், |
||
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; |
||
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- |
||
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ |
||
5 |
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் |
|
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் |
||
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின் |
||
ஆர்வம் உடையர் ஆகி, |
||
மார்பு அணங்குறுநரை அறியாதோனே! |
உரை | |
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
|
96. நெய்தல் |
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய், |
||
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, |
||
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, |
||
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி, |
||
5 |
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
|
துவரினர் அருளிய துறையே; அதுவே, |
||
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் |
||
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, |
||
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு |
||
10 |
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, |
|
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்
|
97. முல்லை |
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
||
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
||
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
||
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
||
5 |
அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
||
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என |
||
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
||
தண்டலை உழவர் தனி மட மகளே. |
உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|
102. குறிஞ்சி |
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி! |
||
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு, |
||
நின் குறை முடித்த பின்றை, என் குறை |
||
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்; |
||
5 |
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, |
|
நின் கிளை மருங்கின், சேறிஆயின், |
||
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக் |
||
கானக் குறவர் மட மகள் |
||
ஏனல் காவல் ஆயினள் எனவே. |
உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்
|
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? |
உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
107. பாலை |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
||
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
||
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
||
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
||
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
||
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
||
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
||
ஆனாக் கௌவை மலைந்த |
||
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|
109. பாலை |
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின் |
||
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, |
||
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என, |
||
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி |
||
5 |
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென |
|
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், |
||
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, |
||
உச்சிக் கட்டிய கூழை ஆவின் |
||
நிலை என, ஒருவேன் ஆகி |
||
10 |
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! |
உரை |
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்
|
116. குறிஞ்சி |
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
||
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; |
||
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
||
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
||
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
||
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
||
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
||
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
||
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
||
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! |
உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|
117. நெய்தல் |
பெருங் கடல் முழங்க, கானல் மலர, |
||
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, |
||
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் |
||
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர, |
||
5 |
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் |
|
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க, |
||
புலம்பொடு வந்த புன்கண் மாலை |
||
அன்னர் உன்னார் கழியின், பல் நாள் |
||
வாழலென்-வாழி, தோழி!-என்கண் |
||
10 |
பிணி பிறிதாகக் கூறுவர்; |
|
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே. |
உரை | |
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்
|
118. பாலை |
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
||
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
||
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
||
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
||
5 |
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
||
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
||
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
||
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
||
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! |
உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
128. குறிஞ்சி |
'பகல் எரி சுடரின் மேனி சாயவும், |
||
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் |
||
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான் |
||
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், |
||
5 |
அது கண்டிசினால் யானே' என்று, நனி |
|
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல் |
||
ஏனல் காவலினிடை உற்று ஒருவன், |
||
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் |
||
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு |
||
10 |
அஃதே நினைந்த நெஞ்சமொடு |
|
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே. |
உரை | |
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா
|
130. நெய்தல் |
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண் |
||
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப, |
||
கோலின் எறிந்து காலைத் தோன்றிய |
||
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் |
||
5 |
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? |
|
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்; |
||
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் |
||
வாடிய வரியும் நோக்கி, நீடாது, |
||
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று |
||
10 |
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் |
|
வையக வரையளவு இறந்த, |
||
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்
|
133. குறிஞ்சி |
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே |
||
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே; |
||
நுதலும் பசலை பாயின்று-திதலைச் |
||
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் |
||
5 |
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று, |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற, |
||
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்- |
||
காமுறு தோழி!-காதல்அம் கிளவி, |
||
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த |
||
10 |
தோய் மடற் சில் நீர் போல, |
|
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே. |
உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்
|
144. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி |
||
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, |
||
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் |
||
பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
||
5 |
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப் |
|
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, |
||
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் |
||
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, |
||
விரவு மலர் பொறித்த தோளர் |
||
10 |
இரவின் வருதல் அறியாதேற்கே. |
உரை |
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
153. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர் |
||
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும் |
||
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி |
||
5 |
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, |
|
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து, |
||
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர் |
||
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி, |
||
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் |
||
10 |
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.-தனிமகனார்
|
156. குறிஞ்சி |
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம் |
||
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும், |
||
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!- |
||
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள் |
||
5 |
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், |
|
பகல் வந்தீமோ, பல் படர் அகல! |
||
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி |
||
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்; |
||
பாடு இமிழ் விடர் முகை முழங்க, |
||
10 |
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. |
உரை |
இரவுக்குறி மறுத்தது.-கண்ணங் கொற்றனார்
|
174. பாலை |
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன |
||
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் |
||
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், |
||
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் |
||
5 |
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
|
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து |
||
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!- |
||
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; |
||
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
||
10 |
மல்லல் மார்பு மடுத்தனன் |
|
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? |
உரை | |
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
|
177. பாலை |
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப, |
||
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு |
||
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்; |
||
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட, |
||
5 |
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் |
|
பீலி சூட்டி மணி அணிபவ்வே; |
||
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே |
||
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து, |
||
எழுது எழில் உண்கண் பாவை |
||
10 |
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. |
உரை |
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
|
187. நெய்தல் |
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, |
||
பல் பூங் கானலும் அல்கின்றன்றே; |
||
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, |
||
5 |
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
|
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு |
||
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட |
||
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், |
||
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு |
||
10 |
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? |
உரை |
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்
|
193. பாலை |
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் |
||
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, |
||
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், |
||
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! |
||
5 |
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
|
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் |
||
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, |
||
யாரும் இல் ஒரு சிறை இருந்து, |
||
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
|
196. நெய்தல் |
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை, |
||
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின், |
||
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்! |
||
சால்பும் செம்மையும் உடையை ஆதலின், |
||
5 |
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், |
|
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்! |
||
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய், |
||
சிறுகுபு சிறுகுபு செரீஇ, |
||
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே? |
உரை | |
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
199. நெய்தல் |
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
||
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
||
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
||
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
||
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
||
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
||
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
||
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
||
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! |
உரை | |
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|
217. குறிஞ்சி |
இசை பட வாழ்பவர் செல்வம் போலக் |
||
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம், |
||
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது |
||
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி, |
||
5 |
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் |
|
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து |
||
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு |
||
புலம்பு சேண் அகல நீக்கி, |
||
புலவி உணர்த்தல் வன்மையானே. |
உரை | |
தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.
|
218. நெய்தல் |
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; |
||
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; |
||
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் |
||
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; |
||
5 |
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் |
|
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய |
||
பராரை வேம்பின் படு சினை இருந்த |
||
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; |
||
ஆனா நோய் அட வருந்தி, இன்னும் |
||
10 |
தமியேன் கேட்குவென் கொல்லோ, |
|
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? |
உரை | |
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்
|
219. நெய்தல் |
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் |
||
பழ நலம் இழந்து பசலை பாய, |
||
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம் |
||
புலவேன் வாழி-தோழி!-சிறு கால் |
||
5 |
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் |
|
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் |
||
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் |
||
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் |
||
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- |
||
10 |
தானே யானே புணர்ந்தமாறே. |
உரை |
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்
|
224. பாலை |
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை, |
||
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக் |
||
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே; |
||
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச் |
||
5 |
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் |
|
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின் |
||
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து, |
||
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக் |
||
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி |
||
10 |
வில் மூசு கவலை விலங்கிய |
|
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே? |
உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
225. குறிஞ்சி |
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் |
||
பொருத யானை வெண் கோடு கடுப்ப, |
||
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை, |
||
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன |
||
5 |
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை |
|
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத் |
||
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் |
||
பயந்து எழு பருவரல் தீர, |
||
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே? |
உரை | |
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்
|
226. பாலை |
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்; |
||
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப் |
||
பொன்னும் கொள்ளார், மன்னர்-நன்னுதல்!- |
||
நாம் தம் உண்மையின் உளமே; அதனால் |
||
5 |
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, |
|
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய, |
||
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும் |
||
இன்ன நிலைமைத்து என்ப; |
||
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-கணி புன்குன்றனார்
|
236. குறிஞ்சி |
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும் |
||
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- |
||
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென |
||
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என, |
||
5 |
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு |
|
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல் |
||
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து |
||
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென |
||
வியல் அறை மூழ்கிய வளி என் |
||
10 |
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. |
உரை |
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி குட்டுவன்
|
238. முல்லை |
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் |
||
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, |
||
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், |
||
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய |
||
5 |
பருவம் செய்த கருவி மா மழை! |
|
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல் |
||
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் |
||
உர உரும் உரறும் நீரின், பரந்த |
||
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட |
||
10 |
கனியா நெஞ்சத்தானும், |
|
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. |
உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
|
240. பாலை |
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- |
||
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள் |
||
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி, |
||
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் |
||
5 |
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், |
|
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில், |
||
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, |
||
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் |
||
யானை இன நிரை வௌவும் |
||
10 |
கானம் திண்ணிய மலை போன்றிசினே. |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்
|
241. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப் |
||
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய |
||
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற, |
||
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின், |
||
5 |
வேழ வெண் பூ விரிவன பலவுடன், |
|
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய, |
||
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு |
||
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய, |
||
எல்லை போகிய பொழுதின் எல் உற, |
||
10 |
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, |
|
பல் இதழ் உண்கண் கலுழ, |
||
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே? |
உரை | |
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்
|
243. பாலை |
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய |
||
துறுகல் அயல தூ மணல் அடைகரை, |
||
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் |
||
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், |
||
5 |
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
|
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என, |
||
கையறத் துறப்போர்க் கழறுவ போல, |
||
மெய் உற இருந்து மேவர நுவல, |
||
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் |
||
10 |
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
|
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
|
244. குறிஞ்சி |
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல், |
||
கூதிர்க் கூதளத்து அலரி நாறும் |
||
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் |
||
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் |
||
5 |
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- |
|
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய் |
||
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- |
||
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!- |
||
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த |
||
10 |
செயலை அம் தளிர் அன்ன, என் |
|
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே. |
உரை | |
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்
|
249. நெய்தல் |
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை |
||
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், |
||
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் |
||
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, |
||
5 |
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
|
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, |
||
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் |
||
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், |
||
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, |
||
10 |
அம்பல் மூதூர் அலர் எழ, |
|
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? |
உரை | |
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்
|
255. குறிஞ்சி |
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; |
||
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, |
||
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; |
||
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை |
||
5 |
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
|
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் |
||
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- |
||
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
||
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், |
||
10 |
திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
|
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! |
உரை | |
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்
|
260. மருதம் |
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
||
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
||
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
||
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
||
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
||
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
||
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
||
முகை அவிழ் கோதை வாட்டிய |
||
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! |
உரை |
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|
272. நெய்தல் |
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், |
||
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த |
||
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, |
||
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, |
||
5 |
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் |
|
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன் |
||
நல்காமையின், நசை பழுதாக, |
||
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய் |
||
அம்பல் மூதூர் அலர்ந்து, |
||
10 |
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. |
உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
|
275. நெய்தல் |
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் |
||
காணார் முதலொடு போந்தென, பூவே |
||
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் |
||
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, |
||
5 |
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் |
|
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு |
||
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, |
||
அறனிலாளன் புகழ, எற் |
||
பெறினும், வல்லேன்மன்-தோழி!-யானே. |
உரை | |
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.-அம்மூவனார்
|
277. பாலை |
கொடியை; வாழி-தும்பி!- இந் நோய் |
||
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென; |
||
மெய்யே கருமை அன்றியும், செவ்வன் |
||
அறிவும் கரிதோ-அறனிலோய்!-நினக்கே? |
||
5 |
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை |
|
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய |
||
தாறு படு பீரம் ஊதி, வேறுபட |
||
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்: |
||
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன் |
||
10 |
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், |
|
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு |
||
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.-தும்பி சேர் கீரனார்
|
280. மருதம் |
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின் |
||
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் |
||
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் |
||
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை |
||
5 |
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்- |
|
பழன யாமைப் பாசடைப் புறத்து, |
||
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், |
||
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என் |
||
நல் மனை நனி விருந்து அயரும் |
||
10 |
கைதூவு இன்மையின் எய்தாமாறே. |
உரை |
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்
|
281. பாலை |
மாசு இல் மரத்த பலி உண் காக்கை |
||
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, |
||
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
||
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் |
||
5 |
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
|
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, |
||
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், |
||
தாம் நம் உழையராகவும், நாம் நம் |
||
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, |
||
10 |
துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
|
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே. |
உரை | |
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்
|
287. நெய்தல் |
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த; |
||
நல் எயிலுடையோர் உடையம்' என்னும் |
||
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப் |
||
5 |
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், |
|
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், |
||
காமம் பெருமையின், வந்த ஞான்றை- |
||
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் |
||
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும், |
||
10 |
'தேர் மணித் தெள் இசைகொல்?' என, |
|
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
|
289. முல்லை |
அம்ம வாழி, தோழி!-காதலர், |
||
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய |
||
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம் |
||
நளி கடல் முகந்து, செறிதக இருளி, |
||
5 |
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, |
|
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை, |
||
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய |
||
பெரு மர ஒடியல் போல, |
||
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே. |
உரை | |
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
|
296. பாலை |
என் ஆவதுகொல்? தோழி!-மன்னர் |
||
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த |
||
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப, |
||
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் |
||
5 |
ஏ கல் மீமிசை மேதக மலரும், |
|
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும், |
||
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் |
||
செல்ப என்ப, காதலர்: |
||
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே. |
உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.- குதிரைத் தறியனார்
|
302. பாலை |
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த |
||
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் |
||
காடு கவின் பூத்தஆயினும், நன்றும் |
||
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் |
||
5 |
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
|
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு, |
||
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு |
||
வெளிறு இல் காழ வேலம் நீடிய |
||
பழங்கண் முது நெறி மறைக்கும், |
||
10 |
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? |
உரை |
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
303. நெய்தல் |
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
||
நள்ளென, |
||
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
||
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
||
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
||
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
||
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது |
||
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
||
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
||
கடு முரண் எறி சுறா வழங்கும் |
||
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. |
உரை | |
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
304. குறிஞ்சி |
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, |
||
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, |
||
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் |
||
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் |
||
5 |
புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
|
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் |
||
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், |
||
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், |
||
இன்பமும் துன்பமும் உடைத்தே, |
||
10 |
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. |
உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்
|
309. குறிஞ்சி |
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், |
||
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, |
||
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின் |
||
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக் |
||
5 |
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
|
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே |
||
விழுமமாக அறியுநர் இன்று' என, |
||
கூறுவைமன்னோ, நீயே; |
||
தேறுவன்மன் யான், அவருடை நட்பே. |
உரை | |
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்
|
314. பாலை |
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; |
||
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; |
||
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி |
||
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், |
||
5 |
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் |
|
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் |
||
கழிவதாக, கங்குல்' என்று |
||
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- |
||
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி |
||
10 |
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் |
|
புன் புறா வீழ் பெடைப் பயிரும் |
||
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே! |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்
|
327. நெய்தல் |
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், |
||
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் |
||
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!- |
||
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர் |
||
5 |
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, |
|
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய |
||
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ் |
||
புன்னை ஓங்கிய கானற் |
||
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்
|
332. குறிஞ்சி |
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- |
||
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு, |
||
நாளும்நாள் உடன் கவவவும், தோளே |
||
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண் |
||
5 |
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, |
|
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி |
||
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி, |
||
தலைநாள் அன்ன பேணலன், பல நாள், |
||
ஆர் இருள் வருதல் காண்பேற்கு, |
||
10 |
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
|
335. நெய்தல் |
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் |
||
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; |
||
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் |
||
பல் பூங் கானல் முள் இலைத் தாழை |
||
5 |
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
|
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு |
||
மை இரும் பனைமிசைப் பைதல உயவும் |
||
அன்றிலும் என்புற நரலும்; அன்றி, |
||
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் |
||
10 |
யாமம் உய்யாமை நின்றன்று; |
|
காமம் பெரிதே; களைஞரோ இலரே! |
உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
|
338. நெய்தல் |
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; |
||
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் |
||
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; |
||
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; |
||
5 |
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள |
||
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, |
||
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய |
||
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, |
||
10 |
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
|
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் |
||
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? |
உரை | |
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
340. மருதம் |
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! |
உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
343. பாலை |
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
|
348. நெய்தல் |
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, |
||
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே; |
||
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி, |
||
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; |
||
5 |
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் |
|
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே; |
||
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு |
||
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே: |
||
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? |
||
10 |
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? |
உரை |
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.-வெள்ளி வீதியார்
|
350. மருதம் |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
||
பழனப் பல் புள் இரிய, கழனி |
||
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் |
||
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் |
||
5 |
தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
|
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் |
||
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை |
||
சாடிய சாந்தினை; வாடிய கோதையை; |
||
ஆசு இல் கலம் தழீஇயற்று; |
||
10 |
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! |
உரை |
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.-பரணர்
|
358. நெய்தல் |
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
||
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
||
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
||
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
||
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
||
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
||
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
||
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
||
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
||
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. |
உரை | |
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|
364. முல்லை |
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் |
||
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி, |
||
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க, |
||
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப, |
||
5 |
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் |
|
வாழலென் வாழி-தோழி!-ஊழின் |
||
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின் |
||
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப, |
||
பல் ஆ தந்த கல்லாக் கோவலர் |
||
10 |
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, |
|
உயிர் செலத் துனைதரும் மாலை, |
||
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே. |
உரை | |
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
|
369. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, |
||
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, |
||
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை |
||
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை |
||
5 |
இன்றும் வருவது ஆயின், நன்றும் |
|
அறியேன் வாழி-தோழி!-அறியேன், |
||
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, |
||
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் |
||
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் |
||
10 |
சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
|
நிறை அடு காமம் நீந்துமாறே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
381. முல்லை |
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் |
||
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்; |
||
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை |
||
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல, |
||
5 |
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை |
|
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல் |
||
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி, |
||
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க, |
||
தேர் வீசு இருக்கை போல, |
||
10 |
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. |
உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்
|
389. குறிஞ்சி |
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் |
||
தேம் படு நெடு வரை மணியின் மானும்; |
||
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்- |
||
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை |
||
5 |
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, |
|
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் |
||
காவல் நீ' என்றோளே; சேவலொடு |
||
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் |
||
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல |
||
10 |
நன் பொன் இமைக்கும் நாடனொடு |
|
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே. |
உரை | |
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
390. மருதம் |
வாளை வாளின் பிறழ, நாளும் |
||
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் |
||
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த |
||
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை |
||
5 |
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, |
|
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ; |
||
யாணர் ஊரன் காணுநன்ஆயின், |
||
வரையாமைஓ அரிதே; வரையின், |
||
வரைபோல் யானை, வாய்மொழி முடியன் |
||
10 |
வரை வேய் புரையும் நல் தோள் |
|
அளிய-தோழி!-தொலையுந பலவே. |
உரை | |
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்
|
397. பாலை |
தோளும் அழியும், நாளும் சென்றென; |
||
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் |
||
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து |
||
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; |
||
5 |
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; |
|
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ |
||
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின் |
||
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின், |
||
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது.-அம்மூவனார்
|