முகப்பு |
குறிஞ்சி |
1. குறிஞ்சி |
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த |
||
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை, |
||
கழல் தொடி, சேஎய் குன்றம் |
||
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. | உரை | |
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார் |
2. குறிஞ்சி |
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! |
||
காமம் செப்பாது, கண்டது மொழிமோ: |
||
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், |
||
செறி எயிற்று, அரிவை கூந்தலின் |
||
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக |
3. குறிஞ்சி |
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; |
||
நீரினும் ஆர் அளவின்றே- சாரல் |
||
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, |
||
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. | உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - தேவகுலத்தார் |
13. குறிஞ்சி |
மாசு அறக் கழீஇய யானை போலப் |
||
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் |
||
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் |
||
நோய் தந்தனனே - தோழி!- |
||
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. | உரை | |
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர் |
14. குறிஞ்சி |
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த |
||
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப் |
||
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு |
||
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில், |
||
'நல்லோள் கணவன் இவன்' எனப் |
||
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே. | உரை | |
'மடன்மா கூறும் இடனுமார் உண்டே' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். 'மடலேறுவல்' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர் |
17. குறிஞ்சி |
மா என மடலும் ஊர்ப; பூ எனக் |
||
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப; |
||
மறுகின் ஆர்க்கவும் படுப; |
||
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே. | உரை | |
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார் |
18. குறிஞ்சி |
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
||
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
||
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
||
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
||
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! | உரை | |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |
23. குறிஞ்சி |
அகவன்மகளே! அகவன்மகளே! |
||
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல் |
||
அகவன்மகளே! பாடுக பாட்டே; |
||
இன்னும், பாடுக, பாட்டே-அவர் |
||
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே. | உரை | |
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார் |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. | உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
29. குறிஞ்சி |
நல் உரை இகந்து, புல் உரை தாஅய், |
||
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல |
||
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, |
||
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும் |
||
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு |
||
மகவுடை மந்தி போல |
||
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார் |
32. குறிஞ்சி |
காலையும், பகலும், கையறு மாலையும், |
||
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் |
||
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்: |
||
மா என மடலொடு மறுகில் தோன்றித் |
||
தெற்றெனத் தூற்றலும் பழியே; |
||
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே. | உரை | |
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார் |
36. குறிஞ்சி |
துறுகல் அயலது மாணை மாக் கொடி |
||
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், |
||
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என, |
||
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் |
||
தாவா வஞ்சினம் உரைத்தது |
||
நோயோ-தோழி!-நின் வயினானே? | உரை | |
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர் |
38. குறிஞ்சி |
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
||
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
||
குன்ற நாடன் கேண்மை என்றும் |
||
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
||
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
||
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |
40. குறிஞ்சி |
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? |
||
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? |
||
யானும் நீயும் எவ் வழி அறிதும்? |
||
செம் புலப் பெயல் நீர் போல |
||
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. | உரை | |
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், 'பிரிவர்' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார் |
42. குறிஞ்சி |
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக் |
||
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி |
||
விடரகத்து இயம்பும் நாட!- எம் |
||
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே? | உரை | |
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர் |
47. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் |
||
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை |
||
எல்லி வருநர் களவிற்கு |
||
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! | உரை | |
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா |
52. குறிஞ்சி |
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் |
||
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, |
||
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், |
||
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை! |
||
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே? | உரை | |
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார் |
54. குறிஞ்சி |
யானே ஈண்டையேனே; என் நலனே, |
||
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் |
||
கான யானை கை விடு பசுங் கழை |
||
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் |
||
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார் |
58. குறிஞ்சி |
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக |
||
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; |
||
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் |
||
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் |
||
வெண்ணெய் உணங்கல் போலப் |
||
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! | உரை | |
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார் |
60. குறிஞ்சி |
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் |
||
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன், |
||
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, |
||
நல்கார் நயவார் ஆயினும், |
||
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. | உரை | |
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. | உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
68. குறிஞ்சி |
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் |
||
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் |
||
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் |
||
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. | உரை | |
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை |
69. குறிஞ்சி |
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென, |
||
கைம்மை உய்யாக் காமர் மந்தி |
||
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி, |
||
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் |
||
சாரல் நாட! நடு நாள் |
||
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே! | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன் |
70. குறிஞ்சி |
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் |
||
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; |
||
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; |
||
சில மெல்லியவே கிளவி; |
||
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே. | உரை | |
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார் |
72. குறிஞ்சி |
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து |
||
எல்லாரும் அறிய நோய் செய்தனவே- |
||
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் |
||
பரீஇ வித்திய ஏனல் |
||
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! | உரை | |
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார் |
73. குறிஞ்சி |
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ; |
||
அழியல் வாழி-தோழி!-நன்னன் |
||
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய |
||
ஒன்றுமொழிக் கோசர் போல, |
||
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. | உரை | |
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர் |
74. குறிஞ்சி |
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, |
||
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் |
||
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் |
||
வேனில் ஆனேறு போலச் |
||
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. | உரை | |
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார் |
76. குறிஞ்சி |
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
||
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
||
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
||
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
||
தண் வரல் வாடை தூக்கும் |
||
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. | உரை | |
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார் |
78. குறிஞ்சி |
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி |
||
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி, |
||
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!- |
||
நோதக்கன்றே-காமம் யாவதும் |
||
நன்று என உணரார்மாட்டும் |
||
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே. | உரை | |
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார் |
81. குறிஞ்சி |
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, |
||
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் |
||
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; |
||
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- |
||
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் |
||
கடலும் கானலும் தோன்றும் |
||
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. | உரை | |
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன் |
82. குறிஞ்சி |
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, |
||
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்; |
||
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் |
||
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் |
||
கொழுங் கொடி அவரை பூக்கும் |
||
அரும் பனி அற்சிரம் வாராதோரே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன் |
83. குறிஞ்சி |
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் |
||
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- |
||
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் |
||
தீம் பழம் தூங்கும் பலவின் |
||
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே! | உரை | |
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன் |
8. மருதம் |
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
||
பழன வாளை கதூஉம் ஊரன் |
||
எம் இல் பெருமொழி கூறி, தம் இல், |
||
கையும் காலும் தூக்கத் தூக்கும் |
||
ஆடிப் பாவை போல, |
||
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. | உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
6. நெய்தல் |
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து, |
||
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று, |
||
நனந்தலை உலகமும் துஞ்சும்; |
||
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார் |
87. குறிஞ்சி |
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் |
||
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும் |
||
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; |
||
பசைஇப் பசந்தன்று, நுதலே; |
||
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே. | உரை | |
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர் |
88. குறிஞ்சி |
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், |
||
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் |
||
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், |
||
நடு நாள் வருதலும் வரூஉம்; |
||
வடு நாணலமே-தோழி!-நாமே. | உரை | |
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன் |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
95. குறிஞ்சி |
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி |
||
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற் |
||
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள் |
||
நீர் ஓரன்ன சாயல் |
||
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே. | உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
96. குறிஞ்சி |
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு |
||
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது |
||
நகை என உணரேன்ஆயின், |
||
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே, | உரை | |
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. | உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
101. குறிஞ்சி |
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும், |
||
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், |
||
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே- |
||
மாண் வரி அல்குல், குறுமகள் |
||
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன் |
105. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் |
||
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் |
||
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் |
||
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் |
||
சூர் மலை நாடன் கேண்மை |
||
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே. | உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர் |
106. குறிஞ்சி |
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் |
||
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் |
||
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் |
||
வந்தன்று-வாழி, தோழி!-நாமும் |
||
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு, |
||
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே. | உரை | |
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர் |
111. குறிஞ்சி |
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன், |
||
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும், |
||
அது என உணரும்ஆயின், ஆயிடைக் |
||
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன |
||
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன் |
||
வல்லே வருக-தோழி!-நம் |
||
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே! | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன். |
112. குறிஞ்சி |
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்; |
||
எள் அற விடினே, உள்ளது நாணே; |
||
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ |
||
நாருடை ஒசியல் அற்றே- |
||
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார் |
115. குறிஞ்சி |
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே? |
||
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு, |
||
புலவி தீர அளிமதி-இலை கவர்பு, |
||
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல், |
||
மென்நடை மரையா துஞ்சும் |
||
நன் மலை நாட!-நின் அலது இலளே. | உரை | |
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர் |
116. குறிஞ்சி |
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல், |
||
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை |
||
நுண் மணல் அறல் வார்ந்தன்ன, |
||
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே. | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது - இளங்கீரன். |
119. குறிஞ்சி |
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை |
||
கான யானை அணங்கியா அங்கு- |
||
இளையள், முளை வாள் எயிற்றள், |
||
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே. | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார் |
120. குறிஞ்சி |
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு, |
||
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி |
||
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு |
||
அரியள் ஆகுதல் அறியாதோயே. | உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர் |
121. குறிஞ்சி |
மெய்யே, வாழி?-தோழி-சாரல் |
||
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை |
||
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற |
||
கோட்டொடு போகியாங்கு, நாடன் |
||
தான் குறி வாயாத் தப்பற்குத் |
||
தாம் பசந்தன, என் தட மென் தோளே. | உரை | |
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ |
129. குறிஞ்சி |
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! |
||
புலவர் தோழ! கேளாய் அத்தை; |
||
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் |
||
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக் |
||
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் |
||
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே. | உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
132. குறிஞ்சி |
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; |
||
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- |
||
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க் |
||
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி |
||
தாய் காண் விருப்பின் அன்ன, |
||
சாஅய் நோக்கினள்-மாஅயோளே, | உரை | |
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார் |
133. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை |
||
கிளி குறைத்து உண்ட கூழை இருவி |
||
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என் |
||
உரம் செத்தும் உளெனே-தோழி!-என் |
||
நலம் புதிது உண்ட புலம்பினானே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன் |
134. குறிஞ்சி |
அம்ம வாழி-தோழி!-நம்மொடு |
||
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- |
||
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் |
||
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் |
||
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, |
||
நிலம் கொள் பாம்பின், இழிதரும் |
||
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன் |
136. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் |
||
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை |
||
குளகு மென்று ஆள் மதம் போலப் |
||
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. | உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
||
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
||
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. | உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |
142. குறிஞ்சி |
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
||
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
||
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
||
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
||
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |
143. குறிஞ்சி |
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்; |
||
பழியும் அஞ்சும், பய மலை நாடன்; |
||
நில்லாமையே நிலையிற்று ஆகலின், |
||
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் |
||
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் |
||
தங்குதற்கு உரியது அன்று, நின் |
||
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். |
146. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப் |
||
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?- |
||
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர், |
||
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு |
||
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே. | உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார். |
150. குறிஞ்சி |
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி |
||
வான மீனின் வயின்வயின் இமைக்கும் |
||
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம் |
||
உள்ளின், உள் நோய் மல்கும்; |
||
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்! | உரை | |
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார் |
152. குறிஞ்சி |
யாவதும் அறிகிலர், கழறுவோரே- |
||
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து |
||
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே? |
||
யாமைப் பார்ப்பின் அன்ன |
||
காமம், காதலர் கையற விடினே, | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார் |
153. குறிஞ்சி |
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |
156. குறிஞ்சி |
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! |
||
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து |
||
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் |
||
படிவ உண்டிப் பார்ப்பன மகனே! |
||
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் |
||
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் |
||
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே. | உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் |
158. குறிஞ்சி |
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் |
||
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் |
||
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! |
||
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை |
||
இமயமும் துளக்கும் பண்பினை; |
||
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே? | உரை | |
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார். |
159. குறிஞ்சி |
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா |
||
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, |
||
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக் |
||
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின; |
||
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும் |
||
அவல நெஞ்சமொடு உசாவாக் |
||
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன். |
160. குறிஞ்சி |
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் |
||
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, |
||
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் |
||
கையற நரலும் நள்ளென் யாமத்துப் |
||
பெருந் தண் வாடையும் வாரார்; |
||
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன். |
161. குறிஞ்சி |
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, |
||
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப் |
||
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, |
||
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ! |
||
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை |
||
ஆரம் நாறும் மார்பினன் |
||
மாரி யானையின் வந்து நின்றனனே? | உரை | |
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர் |
165. குறிஞ்சி |
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, |
||
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை- |
||
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம் |
||
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள் |
||
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. | உரை | |
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர். |
170. குறிஞ்சி |
பலரும் கூறுக, அஃது அறியாதோரே- |
||
அருவி தந்த நாட் குரல் எருவை |
||
கயம் நாடு யானை கவளம் மாந்தும் |
||
மலை கெழு நாடன் கேண்மை |
||
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே, | உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார் |
173. குறிஞ்சி |
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த |
||
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப் |
||
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு, |
||
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப, |
||
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று, |
||
அவள் பழி நுவலும், இவ் ஊர்; |
||
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே. | உரை | |
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன் |
176. குறிஞ்சி |
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்; |
||
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என் |
||
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, |
||
வரை முதிர் தேனின் போகியோனே- |
||
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ? |
||
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த |
||
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே. | உரை | |
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி |
179. குறிஞ்சி |
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, |
||
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; |
||
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே; |
||
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த |
||
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் |
||
பேதை யானை சுவைத்த |
||
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே. | உரை | |
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன் |
182. குறிஞ்சி |
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல் |
||
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி, |
||
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, |
||
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி, |
||
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ- |
||
கலிழ் கவின் அசைநடைப் பேதை |
||
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே? | உரை | |
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன் |
185. குறிஞ்சி |
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, |
||
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, |
||
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச் |
||
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப் |
||
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, |
||
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் |
||
கல்மிசைக் கவியும் நாடற்கு, என் |
||
நல் மா மேனி அழி படர் நிலையே? | உரை | |
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
187. குறிஞ்சி |
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி |
||
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, |
||
பெரு வரை நீழல் உகளும் நாடன் |
||
கல்லினும் வலியன்-தோழி!- |
||
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. | உரை | |
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. | உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
199. குறிஞ்சி |
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று |
||
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க் |
||
கை வள் ஓரி கானம் தீண்டி |
||
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் |
||
மை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
||
இன்றை அன்ன நட்பின் இந் நோய் |
||
இறு முறை என ஒன்று இன்றி, |
||
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர் |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! | உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
204. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், |
||
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல் |
||
மூதா தைவந்தாங்கு, |
||
விருந்தே காமம்-பெரும்தோளோயே! | உரை | |
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன் |
206. குறிஞ்சி |
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி |
||
அன்ன இனியோள் குணனும், இன்ன |
||
இன்னா அரும் படர் செய்யும்ஆயின், |
||
உடன் உறைவு அரிதே காமம்: |
||
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே! | உரை | |
208. குறிஞ்சி |
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் |
||
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை |
||
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், |
||
நின்று கொய மலரும் நாடனொடு |
||
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே, | உரை | |
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
214. குறிஞ்சி |
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய |
||
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் |
||
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி |
||
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச் |
||
செயலை முழுமுதல் ஒழிய, அயலது |
||
அரலை மாலை சூட்டி, |
||
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார் |
217. குறிஞ்சி |
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; |
||
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்; |
||
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என |
||
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, |
||
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற; |
||
ஐதேய் கம்ம யானே; |
||
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே. | உரை | |
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார் |
222. குறிஞ்சி |
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; |
||
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; |
||
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், |
||
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட |
||
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் |
||
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் |
||
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. | உரை | |
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார் |
223. குறிஞ்சி |
'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் |
||
செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண் |
||
நல்லோர் நல்ல பலவால் தில்ல; |
||
தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை |
||
ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி, |
||
அன்னை ஓம்பிய ஆய் நலம் |
||
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே. | உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன் |
225. குறிஞ்சி |
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் |
||
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! |
||
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் |
||
வீறு பெற்று மறந்த மன்னன் போல, |
||
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் |
||
கலி மயிற் கலாவத்தன்ன இவள் |
||
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
239. குறிஞ்சி |
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; |
||
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச் |
||
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் |
||
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி |
||
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் |
||
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. | உரை | |
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன் |
241. குறிஞ்சி |
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம் |
||
கெழுதகைமையின் அழுதன-தோழி!- |
||
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் |
||
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, |
||
ஏறாது இட்ட ஏமப் பூசல் |
||
விண் தோய் விடரகத்து இயம்பும் |
||
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
244. குறிஞ்சி |
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
||
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல் |
||
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!- |
||
ஓரி முருங்கப் பீலி சாய |
||
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் |
||
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ |
247. குறிஞ்சி |
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்; |
||
திறவோர் செய்வினை அறவது ஆகும்; |
||
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என |
||
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை |
||
வீயா மென் சினை வீ உக, யானை |
||
ஆர் துயில் இயம்பும் நாடன் |
||
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே. | உரை | |
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன். |
249. குறிஞ்சி |
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, |
||
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, |
||
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் |
||
குன்றம் நோக்கினென்-தோழி!- |
||
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? | உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
252. குறிஞ்சி |
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த |
||
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் |
||
வருவதோர் காலை, இன் முகம் திரியாது, |
||
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி, |
||
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு |
||
துனியல் வாழி-தோழி!-சான்றோர் |
||
புகழும் முன்னர் நாணுப; |
||
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே? | உரை | |
தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன் |
257. குறிஞ்சி |
வேரும் முதலும் கோடும் ஒராங்குத் |
||
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் |
||
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின் |
||
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்; |
||
அகலினும் அகலாதாகி |
||
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே. | உரை | |
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன் |
259. குறிஞ்சி |
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, |
||
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் |
||
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், |
||
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! |
||
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், |
||
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் |
||
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? |
||
நெஞ்சம் நன்றே, நின் வயினானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர். |
261. குறிஞ்சி |
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய |
||
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள், |
||
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான், |
||
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும் |
||
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் |
||
துஞ்சா வாழி-தோழி!-காவலர் |
||
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என் |
||
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே. | உரை | |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
263. குறிஞ்சி |
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ, |
||
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க, |
||
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா |
||
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி, |
||
'பேஎய்க் கொளீஇயள்' இவள் எனப்படுதல் |
||
நோதக்கன்றே-தோழி!-மால் வரை |
||
மழை விளையாடும் நாடனைப் |
||
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே. | உரை | |
'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?'எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன் |
264.குறிஞ்சி |
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, |
||
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, |
||
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு |
||
நயந்தனன் கொண்ட கேண்மை |
||
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே. | உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர் |
265. குறிஞ்சி |
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
||
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
||
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
||
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
||
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
||
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
||
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
||
தான் நாணினன், இஃது ஆகாவாறே. | உரை | |
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |
'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்; |
||
'வருவிரோ? என வினவலும் வினவாம்; |
||
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின் |
||
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு |
||
நடு நாள் என்னார், வந்து, |
||
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன் |
272. குறிஞ்சி |
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட |
||
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த |
||
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த |
||
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர் |
||
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் |
||
குருதியொடு பறித்த செங் கோல் வாளி |
||
மாறு கொண்டன்ன உண்கண், |
||
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே! | உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன் |
276. குறிஞ்சி |
பணைத் தோட் குறுமகள் |
||
பாவை தையும், |
||
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள் |
||
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய |
||
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார், |
||
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து |
||
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்? |
||
பெரிதும் பேதை மன்ற- |
||
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே! | உரை | |
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கூழிக் கொற்றன் |
280. குறிஞ்சி |
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என் |
||
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் |
||
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம் |
||
ஒரு நாள் புணரப் புணரின், |
||
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே. | உரை | |
கழற்றெதிர்மறை -நக்கீரர் |
284. குறிஞ்சி |
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப, |
||
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் |
||
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன் |
||
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும், |
||
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?- |
||
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி |
||
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் |
||
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே. | உரை | |
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன் |
286. குறிஞ்சி |
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று |
||
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில் |
||
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல், |
||
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி |
||
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. | உரை | |
இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.- எயிற்றியனார் |
288. குறிஞ்சி |
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து |
||
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன் |
||
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற |
||
இன்னாமையினும், இனிதோ- |
||
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே? | உரை | |
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர் |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. | உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
292.குறிஞ்சி |
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை |
||
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு |
||
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை |
||
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், |
||
பெண் கொலை புரிந்த நன்னன் போல, |
||
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!- |
||
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென, |
||
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே. | உரை | |
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர் |
297. குறிஞ்சி |
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர் |
||
வை வார் வாளி விறற் பகை பேணார், |
||
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர் |
||
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் |
||
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி, |
||
புணர்ந்து உடன் போதல் பொருள்' என, |
||
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே. | உரை | |
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன். |
298. குறிஞ்சி |
சேரி சேர மெல்ல வந்துவந்து, |
||
அரிது வாய்விட்டு இனிய கூறி, |
||
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் |
||
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!- |
||
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை |
||
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர் |
||
மடப் பிடிப் பரிசில் மானப் |
||
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே. | உரை | |
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர் |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |
301. குறிஞ்சி |
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் |
||
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் |
||
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் |
||
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், |
||
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் |
||
வாராதுஆயினும், வருவது போலச் |
||
செவிமுதல் இசைக்கும் அரவமொடு |
||
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. | உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன் |
302. குறிஞ்சி |
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே? |
||
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப் |
||
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; |
||
அன்னோ! இன்னும், நல் மலை நாடன், |
||
'பிரியா நண்பினர் இருவரும்' என்னும் |
||
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன் |
||
துஞ்சு ஊர் யாமத்தானும், என் |
||
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே. | உரை | |
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார் |
308. குறிஞ்சி |
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய |
||
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, |
||
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் |
||
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, |
||
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் |
||
மா மலைநாடன் கேண்மை |
||
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. | உரை | |
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன் |
312. குறிஞ்சி |
இரண்டு அறி கள்வி நம் காதலோளே: |
||
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் |
||
முள்ளூர்க் கானம் நாற வந்து, |
||
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; |
||
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, |
||
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, |
||
அமரா முகத்தள் ஆகித் |
||
தமர் ஓரன்னள், வைகறையானே. | உரை | |
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர் |
315. குறிஞ்சி |
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு |
||
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன் |
||
ஞாயிறு அனையன்-தோழி!- |
||
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே. | உரை | |
வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன் |
317. குறிஞ்சி |
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு |
||
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது |
||
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, |
||
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் |
||
வட புல வாடைக்கு அழி மழை |
||
தென் புலம் படரும் தண் பனி நாளே? | உரை | |
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன் |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. | உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
322. குறிஞ்சி |
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி |
||
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, |
||
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென, |
||
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து, |
||
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, |
||
மருவின் இனியவும் உளவோ? |
||
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே. | உரை | |
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன் |
327. குறிஞ்சி |
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் |
||
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த |
||
குன்ற நாடன்தன்னினும், நன்றும் |
||
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி! |
||
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச் |
||
சாயலள்; அளியள்' என்னாய், |
||
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே. | உரை | |
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
333. குறிஞ்சி |
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் |
||
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை |
||
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு |
||
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் |
||
பணிக் குறை வருத்தம் வீட, |
||
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? | உரை | |
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன் |
335. குறிஞ்சி |
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் |
||
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச் |
||
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து, |
||
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் |
||
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல் |
||
வல் விற் கானவர் தங்கைப் |
||
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே. | உரை | |
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன் |
336. குறிஞ்சி |
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, |
||
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- |
||
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் |
||
கடு மா நெடுந் தேர் நேமி போகிய |
||
இருங் கழி நெய்தல் போல, |
||
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே, | உரை | |
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன் |
337. குறிஞ்சி |
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே |
||
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே; |
||
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின; |
||
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என |
||
யான் தன் அறிவல்; தான் அறியலளே; |
||
யாங்கு ஆகுவள்கொல் தானே- |
||
பெரு முது செல்வர் ஒரு மட மகளே? | உரை | |
தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை |
339. குறிஞ்சி |
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை |
||
உறை அறு மையின் போகி, சாரல் |
||
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் |
||
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் |
||
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க் |
||
குவளை உண்கண் கலுழப் |
||
பசலை ஆகா ஊங்கலங்கடையே. | உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார் |
342. குறிஞ்சி |
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் |
||
காவல் மறந்த கானவன், ஞாங்கர், |
||
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் |
||
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் |
||
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, |
||
நயந்தோர் புன்கண் தீர்க்கும் |
||
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? | உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் |
346. குறிஞ்சி |
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
||
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
||
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
||
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
||
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
||
காலை வந்து, மாலைப் பொழுதில் |
||
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
||
சொல்லவும் ஆகாது அஃகியோனே. | உரை | |
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
353. குறிஞ்சி |
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக, |
||
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, |
||
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; |
||
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில், |
||
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல் |
||
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ, |
||
அன்னை முயங்கத் துயில் இன்னாதே. | உரை | |
பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது கவல் அறிந்து, பின்னும் 'பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்', என்று, ப |
355. குறிஞ்சி |
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; |
||
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; |
||
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; |
||
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் |
||
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- |
||
வேங்கை கமழும் எம் சிறுகுடி |
||
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. | உரை | |
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர் |
357. குறிஞ்சி |
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் |
||
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், |
||
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, |
||
நல்ல என்னும் சொல்லை மன்னிய- |
||
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் |
||
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை |
||
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் |
||
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. | உரை | |
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர் |
360. குறிஞ்சி |
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து |
||
அறியான் ஆகுதல் அன்னை காணிய, |
||
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் |
||
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
சிலம்பின் சிலம்பும் சோலை |
||
இலங்கு மலை நாடன் இரவினானே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |
361. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு |
||
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை |
||
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு |
||
காலை வந்த முழுமுதற் காந்தள் |
||
மெல் இலை குழைய முயங்கலும், |
||
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே. | உரை | |
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர் |
362. குறிஞ்சி |
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! |
||
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்; |
||
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, |
||
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி, |
||
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய |
||
விண் தோய் மா மலைச் சிலம்பன் |
||
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே? | உரை | |
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது. - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் |
365. குறிஞ்சி |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே- |
||
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி |
||
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் |
||
மருங்கில் கொண்ட பலவின் |
||
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே. | உரை | |
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி |
366. குறிஞ்சி |
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின் |
||
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?- |
||
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப் |
||
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த |
||
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு, |
||
ஒழுகு கண்ணள் ஆகி, |
||
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே. | உரை | |
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன் |
371. குறிஞ்சி |
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும், |
||
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி |
||
அருவியின் விளைக்கும் நாடனொடு, |
||
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே. | உரை | |
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன் |
373. குறிஞ்சி |
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
||
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
||
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
||
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
||
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
||
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
||
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
||
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |
374. குறிஞ்சி |
எந்தையும் யாயும் உணரக் காட்டி |
||
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், |
||
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப, |
||
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே- |
||
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ, |
||
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த |
||
கூடினும் மயங்கிய மையல் ஊரே. | உரை | |
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார் |
375. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-இன்று அவர் |
||
வாரார் ஆயினோ நன்றே-சாரல் |
||
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து |
||
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை |
||
பானாள் யாமத்தும் கறங்கும். |
||
யாமம் காவலர் அவியாமாறே. | உரை | |
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது. |
377. குறிஞ்சி |
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய, |
||
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும், |
||
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே- |
||
அறிதற்கு அமையா நாடனொடு |
||
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன் |
379. பாலை |
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப் |
||
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு, |
||
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன், |
||
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி! |
||
எம்மில் வருகுவை நீ' எனப் |
||
பொம்மல் ஓதி நீவியோனே? | உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது. |
385. குறிஞ்சி |
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, |
||
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ |
||
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் |
||
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் |
||
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
||
அன்றை அன்ன நட்பினன்; |
||
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர் |
389. குறிஞ்சி |
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக |
||
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை- |
||
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் |
||
'நன்றோ மகனே?' என்றனென்; |
||
'நன்றே போலும்' என்று உரைத்தோனே. | உரை | |
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன் |
392. குறிஞ்சி |
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- |
||
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு |
||
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், |
||
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் |
||
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை |
||
தமரின் தீராள் என்மோ-அரசர் |
||
நிரை செலல் நுண் தோல் போலப் |
||
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! | உரை | |
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார் |
394. குறிஞ்சி |
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி |
||
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற |
||
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, |
||
முன் நாள் இனியது ஆகி, பின் நாள் |
||
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, |
||
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார் |