முகப்பு |
தலைவன் |
3. பாலை |
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் |
||
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், |
||
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து, |
||
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் |
||
5 |
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் |
|
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை |
||
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய |
||
வினை முடித்தன்ன இனியோள் |
||
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? |
உரை | |
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்
|
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. |
உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
8. குறிஞ்சி |
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
||
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
||
திரு மணி புரையும் மேனி மடவோள் |
||
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
||
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
||
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
||
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
||
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! |
உரை |
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.
|
9. பாலை |
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் |
||
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, |
||
அலமரல் வருத்தம் தீர, யாழ நின் |
||
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், |
||
5 |
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
|
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, |
||
நிழல் காண்தோறும் நெடிய வைகி, |
||
மணல் காண்தோறும் வண்டல் தைஇ, |
||
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! |
||
10 |
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
|
நறுந் தண் பொழில, கானம்; |
||
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. |
உரை | |
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
16. பாலை |
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற் |
||
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச் |
||
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு |
||
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே, |
||
5 |
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் |
|
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே, |
||
விழுநீர் வியலகம் தூணிஆக |
||
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும், |
||
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண் |
||
10 |
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; |
|
எனைய ஆகுக! வாழிய பொருளே! |
உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.-சிறைக்குடி ஆந்தையார்
|
21. முல்லை |
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் |
||
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, |
||
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! |
||
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு |
||
5 |
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
|
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன |
||
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் |
||
காமரு தகைய கானவாரணம் |
||
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் |
||
10 |
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
|
நாள் இரை கவர மாட்டி, தன் |
||
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! |
உரை | |
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
22. குறிஞ்சி |
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
||
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
||
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
||
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
||
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
||
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
||
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
||
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
||
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. |
உரை | |
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
39. குறிஞ்சி |
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
||
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
||
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
||
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
||
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
||
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
||
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
||
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
||
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. |
உரை | |
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
42. முல்லை |
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள் |
||
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய |
||
பழ மழை பொழிந்த புது நீர் அவல |
||
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை |
||
5 |
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், |
|
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே |
||
இல் புக்கு அறியுநராக, மெல்லென |
||
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ, |
||
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய |
||
10 |
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ |
|
அவிழ் பூ முடியினள் கவைஇய |
||
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே. |
உரை | |
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்
|
44. குறிஞ்சி |
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி, |
||
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் |
||
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி, |
||
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய |
||
5 |
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த |
|
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் |
||
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல, |
||
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில், |
||
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய |
||
10 |
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, |
|
செல் மழை இயக்கம் காணும் |
||
நல் மலை நாடன் காதல் மகளே? |
உரை | |
இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்
|
52. பாலை |
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் |
||
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் |
||
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் |
||
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, |
||
5 |
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
|
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் |
||
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; |
||
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் |
||
மழவர் பெரு மகன் மா வள் ஓரி |
||
10 |
கை வளம் இயைவது ஆயினும், |
|
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. |
உரை | |
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்
|
59. முல்லை |
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, |
||
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, |
||
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, |
||
5 |
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து |
||
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து |
||
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை |
||
நுண் முகை அவிழ்ந்த புறவின் |
||
10 |
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. |
உரை |
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
|
62. பாலை |
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
||
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
||
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
||
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
||
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
||
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
||
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
||
உலவை ஆகிய மரத்த |
||
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? |
உரை |
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|
75. குறிஞ்சி |
நயன் இன்மையின், பயன் இது என்னாது, |
||
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, |
||
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது |
||
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது |
||
5 |
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல் |
|
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
||
பச்சூன் பெய்த பகழி போல, |
||
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் |
||
உறாஅ நோக்கம் உற்ற என் |
||
10 |
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. |
உரை |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்
|
76. பாலை |
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
||
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
||
ஆல நீழல் அசைவு நீக்கி, |
||
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
||
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
||
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
||
கானல் வார் மணல் மரீஇ, |
||
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! |
உரை | |
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. |
உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
79. பாலை |
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ, |
||
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர் |
||
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம் |
||
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப் |
||
5 |
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் |
|
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?' |
||
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்; |
||
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- |
||
அம்ம! வாழி, தோழி!- |
||
10 |
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? |
உரை |
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-கண்ணகனார்
|
80. மருதம் |
'மன்ற எருமை மலர் தலைக் காரான் |
||
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு, |
||
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் |
||
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து, |
||
5 |
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, |
|
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, |
||
தைஇத் திங்கள் தண் கயம் படியும் |
||
பெருந் தோட் குறுமகள் அல்லது, |
||
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. |
உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்
|
81. முல்லை |
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று |
||
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள், |
||
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி |
||
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப, |
||
5 |
பூண்கதில்-பாக!-நின் தேரே: பூண் தாழ் |
|
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப |
||
அழுதனள் உறையும் அம் மா அரிவை |
||
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய |
||
முறுவல் இன் நகை காண்கம்!- |
||
10 |
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. |
உரை |
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது.-அகம்பன்மாலாதனார்
|
82. குறிஞ்சி |
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த |
||
வேய் வனப்புற்ற தோளை நீயே, |
||
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி! |
||
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின் |
||
5 |
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- |
|
போகிய நாகப் போக்கு அருங் கவலை, |
||
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
||
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண, |
||
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ, |
||
10 |
கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
|
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே. |
உரை | |
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்
|
95. குறிஞ்சி |
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க, |
||
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று, |
||
அதவத் தீம் கனி அன்ன செம் முகத் |
||
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க, |
||
5 |
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, |
|
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் |
||
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; |
||
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; |
||
கொடிச்சி கையகத்ததுவே, பிறர் |
||
10 |
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. |
உரை |
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்
|
101. நெய்தல் |
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் |
||
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் |
||
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, |
||
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் |
||
5 |
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி |
|
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து, |
||
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின், |
||
மீன் எறி பரதவர் மட மகள் |
||
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே. |
உரை | |
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்
|
103. பாலை |
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
||
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
||
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
||
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
||
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
||
மாயா வேட்டம் போகிய கணவன் |
||
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
||
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
||
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. |
உரை | |
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. |
உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
106. நெய்தல் |
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்
|
113. பாலை |
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் |
||
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் |
||
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் |
||
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- |
||
5 |
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
|
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன் |
||
நெய்தல் உண்கண் பைதல் கூர, |
||
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, |
||
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் |
||
10 |
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
|
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, |
||
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! |
உரை | |
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்
|
120. மருதம் |
தட மருப்பு எருமை மட நடைக் குழவி |
||
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், |
||
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை |
||
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, |
||
5 |
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
|
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் |
||
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் |
||
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, |
||
அட்டிலோளே அம் மா அரிவை- |
||
10 |
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
|
சிறு முள் எயிறு தோன்ற |
||
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. |
உரை | |
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.-மாங்குடி கிழார்
|
126. பாலை |
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
||
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
||
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
||
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
||
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
||
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
||
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
||
இளமை கழிந்த பின்றை, வளமை |
||
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
||
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! |
உரை | |
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
137. பாலை |
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், |
||
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் |
||
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று |
||
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை |
||
5 |
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
|
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், |
||
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை |
||
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும் |
||
குன்ற வைப்பின் கானம் |
||
10 |
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! |
உரை |
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்
|
139. முல்லை |
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ, |
||
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு |
||
ஏயினை, உரைஇயரோ!-பெருங் கலி எழிலி! |
||
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு |
||
5 |
எழீஇயன்ன உறையினை! முழவின் |
|
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்- |
||
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு |
||
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர், |
||
விரவு மலர் உதிர வீசி- |
||
10 |
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! |
உரை |
தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது.-பெருங்கௌசிகனார்
|
140. குறிஞ்சி |
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த |
||
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம் |
||
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி, |
||
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப் |
||
5 |
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை |
|
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து, |
||
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி |
||
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து |
||
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம் |
||
10 |
அருந் துயர் அவலம் தீர்க்கும் |
|
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. |
உரை | |
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்
|
141. பாலை |
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், |
||
மாரி யானையின் மருங்குல் தீண்டி, |
||
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, |
||
நீடிய சடையோடு ஆடா மேனிக் |
||
5 |
குன்று உறை தவசியர் போல, பல உடன் |
|
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் |
||
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, |
||
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை |
||
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி |
||
10 |
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
|
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் |
||
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. |
உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்
|
142. முல்லை |
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், |
||
பாணி கொண்ட பல் கால் மெல் உறி |
||
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி, |
||
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் |
||
5 |
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி |
||
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் |
||
புறவினதுவே-பொய்யா யாணர், |
||
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும், |
||
10 |
முல்லை சான்ற கற்பின், |
|
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. |
உரை | |
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
146. குறிஞ்சி |
வில்லாப் பூவின் கண்ணி சூடி, |
||
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு |
||
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!- |
||
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் |
||
5 |
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, |
|
இருந்தனை சென்மோ-'வழங்குக சுடர்!' என, |
||
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
||
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் |
||
எழுதி அன்ன காண் தகு வனப்பின் |
||
10 |
ஐயள், மாயோள், அணங்கிய |
|
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே! |
உரை | |
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்
|
152. நெய்தல் |
மடலே காமம் தந்தது; அலரே |
||
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
||
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
||
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
||
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
||
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
||
கங்குலும் கையறவு தந்தன்று; |
||
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? |
உரை | |
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|
155. நெய்தல் |
'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய், |
||
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய், |
||
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்! |
||
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்: |
||
5 |
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப் |
|
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ? |
||
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ? |
||
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர் |
||
முள் எயிற்று முறுவல் திறந்தன; |
||
10 |
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. |
உரை |
இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்
|
157. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
||
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
||
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
||
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
||
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
||
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
||
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
||
அம் பூந் தாது உக்கன்ன |
||
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. |
உரை |
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|
160. குறிஞ்சி |
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும், |
||
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும், |
||
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென |
||
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை |
||
5 |
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், |
|
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி |
||
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி, |
||
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை |
||
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
||
10 |
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. |
உரை |
கழற்று எதிர்மறை.
|
161. முல்லை |
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, |
||
கண் போல் நீலம் சுனைதொறும் மலர, |
||
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், |
||
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, |
||
5 |
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
|
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் |
||
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, |
||
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் |
||
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின் |
||
10 |
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
|
புதல்வற் காட்டிப் பொய்க்கும் |
||
திதலை அல்குல் தேம் மொழியாட்கே? |
உரை | |
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
|
162. பாலை |
'மனை உறை புறவின் செங் காற் பேடைக் |
||
காமர் துணையொடு சேவல் சேர, |
||
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
||
தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின் |
||
5 |
பனி வார் உண்கண் பைதல கலுழ, |
|
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு- |
||
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் |
||
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது |
||
வேனில் இற்றித் தோயா நெடு வீழ், |
||
10 |
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
|
துஞ்சு பிடி வருடும் அத்தம் |
||
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? |
உரை | |
'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
|
166. பாலை |
பொன்னும் மணியும் போலும், யாழ நின் |
||
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்; |
||
போதும் பணையும் போலும், யாழ நின் |
||
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்: |
||
5 |
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் |
|
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை, |
||
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; |
||
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின், |
||
யாதனின் பிரிகோ?-மடந்தை!- |
||
10 |
காதல் தானும் கடலினும் பெரிதே! |
உரை |
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
|
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. |
உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. |
உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
186. பாலை |
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி, |
||
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு, |
||
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும் |
||
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை, |
||
5 |
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, |
|
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர் |
||
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில- |
||
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு |
||
காமர் பொருட் பிணி போகிய |
||
10 |
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. |
உரை |
பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.
|
190. குறிஞ்சி |
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
||
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
||
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
||
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
||
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
||
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
||
வலை மான் மழைக் கண், குறுமகள் |
||
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! |
உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
201.குறிஞ்சி |
'மலை உறை குறவன் காதல் மட மகள், |
||
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
||
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
||
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், |
||
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
||
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
||
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
||
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
||
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
||
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. |
உரை | |
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|
202. பாலை |
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு |
||
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, |
||
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு |
||
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம், |
||
5 |
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் |
|
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் |
||
மா மலை விடரகம் கவைஇ, காண்வர, |
||
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை, |
||
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் |
||
10 |
செல் சுடர் நெடுங் கொடி போல, |
|
பல் பூங் கோங்கம் அணிந்த காடே. |
உரை | |
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
204. குறிஞ்சி |
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை |
||
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ? |
||
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய |
||
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ? |
||
5 |
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் |
|
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என, |
||
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, |
||
தான் செய் குறி நிலை இனிய கூறி, |
||
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, |
||
10 |
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் |
|
கொடிச்சி செல்புறம் நோக்கி, |
||
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே? |
உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-மள்ளனார்
|
205. பாலை |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் |
||
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி |
||
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் |
||
5 |
துன் அருங் கானம் என்னாய், நீயே |
|
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, |
||
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு |
||
போயின்றுகொல்லோ தானே-படப்பைக் |
||
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் |
||
10 |
நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
|
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! |
உரை | |
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்
|
209. குறிஞ்சி |
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
||
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
||
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
||
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
||
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
||
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
||
தவிரும்காலைஆயின், என் |
||
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! |
உரை | |
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! |
உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
221. முல்லை |
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை |
||
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, |
||
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் |
||
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, |
||
5 |
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
|
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, |
||
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்: |
||
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், |
||
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, |
||
10 |
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
|
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, |
||
'வந்தீக, எந்தை!' என்னும் |
||
அம் தீம் கிளவி கேட்கம் நாமே. |
உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
242. முல்லை |
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
||
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
||
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
||
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
||
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
||
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
||
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
||
காமர் நெஞ்சமொடு அகலா, |
||
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. |
உரை |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|
250. மருதம் |
நகுகம் வாராய்-பாண!-பகுவாய் |
||
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் |
||
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன் |
||
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு |
||
5 |
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் |
|
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக, |
||
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் |
||
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து, |
||
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, |
||
10 |
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! |
உரை |
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
256. பாலை |
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, |
||
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை; |
||
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, |
||
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே; |
||
5 |
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் |
|
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ, |
||
கார் பெயல் செய்த காமர் காலை, |
||
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை |
||
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த |
||
10 |
கண் கவர் வரி நிழல் வதியும் |
|
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே. |
உரை | |
'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. -பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
262. பாலை |
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், |
||
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர, |
||
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து, |
||
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய், |
||
5 |
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் |
|
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால், |
||
குவளை நாறும் கூந்தல், தேமொழி |
||
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப, |
||
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின், |
||
10 |
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. |
உரை |
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.-பெருந்தலைச் சாத்தனார்
|
264. பாலை |
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, |
||
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, |
||
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் |
||
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் |
||
5 |
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர |
|
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே: |
||
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த |
||
ஆ பூண் தெண் மணி இயம்பும், |
||
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே. |
உரை | |
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
|
265. குறிஞ்சி |
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் |
||
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை |
||
வீளை அம்பின் வில்லோர் பெருமகன், |
||
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் |
||
5 |
பாரத்து அன்ன-ஆர மார்பின் |
|
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- |
||
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் |
||
கலி மயில் கலாவத்து அன்ன, இவள் |
||
ஒலி மென் கூந்தல் நம் வயினானே. |
உரை | |
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்
|
284. பாலை |
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் |
||
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண், |
||
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம், |
||
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்: |
||
5 |
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல் |
|
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என, |
||
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே, |
||
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை, |
||
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய |
||
10 |
தேய்புரிப் பழங் கயிறு போல, |
|
வீவதுகொல் என் வருந்திய உடம்பே? |
உரை | |
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.- தேய்புரிப் பழங்கயிற்றினார்
|
298. பாலை |
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, |
||
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் |
||
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட |
||
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
||
5 |
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
|
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள் |
||
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் |
||
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், |
||
10 |
ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
|
இரும் போது கமழும் கூந்தல், |
||
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? |
உரை | |
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
|
308. பாலை |
செல விரைவுற்ற அரவம் போற்றி, |
||
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- |
||
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், |
||
வேண்டாமையின் மென்மெல வந்து, |
||
5 |
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
|
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் |
||
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, |
||
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, |
||
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் |
||
10 |
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
|
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. |
உரை | |
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
312. பாலை |
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
||
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
||
கோடைத் திங்களும் பனிப்போள்- |
||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. |
உரை | |
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|
319. நெய்தல் |
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும் |
||
தாது உளர் கானல் தவ்வென்றன்றே; |
||
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், |
||
கூகைச் சேவல் குராலோடு ஏறி, |
||
5 |
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், |
|
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; |
||
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், |
||
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் |
||
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, |
||
10 |
மீன் கண் துஞ்சும் பொழுதும், |
|
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே? |
உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது.- வினைத்தொழில் சோகீரனார்
|
321. முல்லை |
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
||
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
||
கான முல்லைக் கய வாய் அலரி |
||
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
||
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
||
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
||
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
||
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
||
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. |
உரை |
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
322. குறிஞ்சி |
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும் |
||
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை; |
||
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து, |
||
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை, |
||
5 |
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக் |
||
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் |
||
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது, |
||
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் |
||
10 |
அணங்கு என உணரக் கூறி, வேலன் |
|
இன் இயம் கறங்கப் பாடி, |
||
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
|
324. குறிஞ்சி |
அந்தோ! தானே அளியள் தாயே; |
||
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல், |
||
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- |
||
கோடு முற்று யானை காடுடன் நிறைதர, |
||
5 |
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் |
|
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின், |
||
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி, |
||
அம் சில் ஓதி இவள் உறும் |
||
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே! |
உரை | |
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
341. குறிஞ்சி |
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின், |
||
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் |
||
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து, |
||
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக் |
||
5 |
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் |
|
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே |
||
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென, |
||
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு |
||
வேறு புல வாடை அலைப்ப, |
||
10 |
துணை இலேம், தமியேம், பாசறையேமே. |
உரை |
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
346. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
தண் கார் தலைஇய நிலம் தணி காலை, |
||
அரசு பகை நுவலும் அரு முனை இயவின், |
||
அழிந்த வேலி அம் குடிச் சீறூர் |
||
5 |
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
|
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, |
||
இன்று, நக்கனைமன் போலா-என்றும் |
||
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
||
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் |
||
10 |
கடி பதம் கமழும் கூந்தல் |
|
மட மா அரிவை தட மென் தோளே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
349. நெய்தல் |
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், |
||
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், |
||
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், |
||
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு |
||
5 |
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் |
|
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, |
||
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத |
||
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, |
||
பின்னிலை முனியா நம்வயின், |
||
10 |
என் என நினையும்கொல், பரதவர் மகளே? |
உரை |
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்
|
352. பாலை |
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய |
||
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன் |
||
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, |
||
அழல் போல் செவிய சேவல் ஆட்டி, |
||
5 |
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி |
|
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று, |
||
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, |
||
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ |
||
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய |
||
10 |
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் |
|
மாண்புடைக் குறுமகள் நீங்கி, |
||
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.-மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|
356. குறிஞ்சி |
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த |
||
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், |
||
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி |
||
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் |
||
5 |
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
|
அசைவு இல் நோன் பறை போல, செல வர |
||
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள் |
||
காதலி உழையளாக, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? |
உரை | |
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்
|
357. குறிஞ்சி |
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு |
||
என்னொடு நிலையாதுஆயினும், என்றும் |
||
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே- |
||
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், |
||
5 |
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் |
|
பீலி மஞ்ஞை ஆலும் சோலை, |
||
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை |
||
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி, |
||
நீர் அலைக் கலைஇய கண்ணிச் |
||
10 |
சாரல் நாடனொடு ஆடிய நாளே. |
உரை |
தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி
|
362. பாலை |
வினை அமை பாவையின் இயலி, நுந்தை |
||
மனை வரை இறந்து வந்தனை; ஆயின், |
||
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி |
||
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த |
||
5 |
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், |
|
நீ விளையாடுக சிறிதே; யானே, |
||
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை |
||
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, |
||
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்; |
||
10 |
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே! |
உரை |
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்
|
366. பாலை |
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் |
||
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் |
||
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் |
||
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, |
||
5 |
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
|
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த |
||
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் |
||
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, |
||
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை |
||
10 |
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
|
வட புல வாடைக்குப் பிரிவோர் |
||
மடவர் வாழி, இவ் உலகத்தானே! |
உரை | |
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
370. மருதம் |
வாராய், பாண! நகுகம்-நேரிழை |
||
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி, |
||
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் |
||
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி, |
||
5 |
'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் |
|
திதலை அல்குல் முது பெண்டு ஆகி, |
||
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என, |
||
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி, |
||
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல, |
||
10 |
முகை நாண் முறுவல் தோற்றி, |
|
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே. |
உரை | |
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்.- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
|
371. முல்லை |
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
||
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
||
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
||
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
||
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
||
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
||
குழல் தொடங்கினரே கோவலர்- |
||
தழங்கு குரல் உருமின் கங்குலானே. |
உரை | |
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|
374. முல்லை |
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின் |
||
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக் |
||
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப, |
||
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்! |
||
5 |
முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை |
|
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல், |
||
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப, |
||
விருந்து அயர் விருப்பினள் வருந்தும் |
||
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே? |
உரை | |
வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-வன் பரணர்
|
377. குறிஞ்சி |
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி, |
||
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் |
||
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி, |
||
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று, |
||
5 |
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ- |
|
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த |
||
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல, |
||
அளகம் சேர்ந்த திருநுதல் |
||
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே? |
உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.-மடல் பாடிய மாதங்கீரனார்
|
384. பாலை |
பைம் புறப் புறவின் செங் காற் சேவல் |
||
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி |
||
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட |
||
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர் |
||
5 |
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் |
|
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த |
||
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் |
||
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ: |
||
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு |
||
10 |
அருந் துயர் உழந்த காலை |
|
மருந்து எனப்படூஉம் மடவோளையே. |
உரை | |
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
388. நெய்தல் |
அம்ம வாழி, தோழி!-நன்னுதற்கு |
||
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே-நோன் புரிக் |
||
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் |
||
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, |
||
5 |
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் |
|
கடல் மீன் தந்து, கானற் குவைஇ, |
||
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, |
||
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி, |
||
பெரிய மகிழும் துறைவன் எம் |
||
10 |
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? |
உரை |
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;'மனையுள் வேறுபடாது ஆற்றினாய்' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|