முகப்பு |
தலைவி |
3. குறிஞ்சி |
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; |
||
நீரினும் ஆர் அளவின்றே- சாரல் |
||
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, |
||
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - தேவகுலத்தார் |
4. நெய்தல் |
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே; |
||
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, |
||
அமைதற்கு அமைந்த நம் காதலர் |
||
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - காமஞ்சேர் குளத்தார் |
5. நெய்தல் |
அதுகொல், தோழி! காம நோயே?- |
||
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, |
||
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், |
||
மெல்லம் புலம்பன் பிரிந்தென, |
||
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார் |
6. நெய்தல் |
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து, |
||
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று, |
||
நனந்தலை உலகமும் துஞ்சும்; |
||
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார் |
11. பாலை |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி, |
||
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே |
||
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது, |
||
குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
||
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர் |
||
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
||
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே. |
உரை | |
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார் |
12. பாலை |
எறும்பி அளையின் குறும் பல் சுனைய |
||
உலைக்கல் அன்ன பாறை ஏறி, |
||
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் |
||
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே; |
||
அது மற்று அவலம் கொள்ளாது, |
||
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார் |
13. குறிஞ்சி |
மாசு அறக் கழீஇய யானை போலப் |
||
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் |
||
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் |
||
நோய் தந்தனனே - தோழி!- |
||
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. |
உரை | |
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர் |
20. பாலை |
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், |
||
உரவோர் உரவோர் ஆக! |
||
மடவம் ஆக, மடந்தை, நாமே! |
உரை | |
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன் |
21. முல்லை |
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு, |
||
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் |
||
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் |
||
கானம், 'கார்' எனக் கூறினும், |
||
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. |
உரை | |
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு |
24. முல்லை |
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர் |
||
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ? |
||
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து |
||
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் |
||
குழைய, கொடியோர் நாவே, |
||
காதலர் அகல, கல்லென்றவ்வே. | உரை | |
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர் |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
27. பாலை |
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, |
||
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு, |
||
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, |
||
பசலை உணீஇயர் வேண்டும்- |
||
திதலை அல்குல் என் மாமைக் கவினே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார் |
28. பாலை |
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? |
||
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு, |
||
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?- |
||
அலமரல் அசைவளி அலைப்ப, என் |
||
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார் |
30. பாலை |
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல், |
||
பொய்வலாளன் மெய் உற மரீஇய |
||
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து, |
||
அமளி தைவந்தனனே; குவளை |
||
வண்டு படு மலரின் சாஅய்த்' |
||
தமியென்; மன்ற அளியென் யானே! | உரை | |
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி |
31. மருதம் |
மள்ளர் குழீஇய விழவினானும், |
||
மகளிர் தழீஇய துணங்கையானும், |
||
யாண்டும் காணேன், மாண் தக்கோனை; |
||
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக் |
||
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த |
||
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. | உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி |
33. மருதம் |
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்; |
||
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? |
||
இரந்தூண் நிரம்பா மேனியொடு |
||
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. | உரை | |
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன் |
35. மருதம் |
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
||
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
||
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
||
நுண் உறை அழிதுளி தலைஇய |
||
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
36. குறிஞ்சி |
துறுகல் அயலது மாணை மாக் கொடி |
||
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், |
||
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என, |
||
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் |
||
தாவா வஞ்சினம் உரைத்தது |
||
நோயோ-தோழி!-நின் வயினானே? | உரை | |
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர் |
38. குறிஞ்சி |
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
||
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
||
குன்ற நாடன் கேண்மை என்றும் |
||
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
||
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
||
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |
39. பாலை |
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென, |
||
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் |
||
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம் |
||
முலையிடை முனிநர் சென்ற ஆறே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார் |
41. பாலை |
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, |
||
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
||
புலப்பில் போலப் புல்லென்று |
||
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே. | உரை | |
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார் |
43. பாலை |
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே; |
||
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே: |
||
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், |
||
நல்அராக் கதுவியாங்கு, என் |
||
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார் |
46. மருதம் |
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன |
||
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ |
||
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து |
||
எருவின் நுண் தாது குடைவன ஆடி, |
||
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன். |
49. நெய்தல் |
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து |
||
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! |
||
இம்மை மாறி மறுமை ஆயினும். |
||
நீ ஆகியர் எம் கணவனை; |
||
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. | உரை | |
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார் |
50. மருதம் |
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் |
||
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் |
||
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து |
||
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் |
||
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. | உரை | |
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார் |
54. குறிஞ்சி |
யானே ஈண்டையேனே; என் நலனே, |
||
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் |
||
கான யானை கை விடு பசுங் கழை |
||
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் |
||
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார் |
57. நெய்தல் |
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன |
||
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
||
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, |
||
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, |
||
இருவேம் ஆகிய உலகத்து, |
||
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
60. குறிஞ்சி |
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் |
||
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன், |
||
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, |
||
சுட்டுபு நக்கியாங்கு, காதலர் |
||
நல்கார் நயவார் ஆயினும், |
||
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. | உரை | |
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர் |
64. முல்லை |
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, |
||
புன் தலை மன்றம் நோக்கி, மாலை |
||
மடக் கண் குழவி அலம்வந்தன்ன |
||
நோயேம் ஆகுதல் அறிந்தும், |
||
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே. | உரை | |
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை |
65. முல்லை |
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன் |
||
இன்புறு துணையொடு மறுவந்து உகள, |
||
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்- |
||
வாராது உறையுநர் வரல் நசைஇ |
||
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார் |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? | உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
68. குறிஞ்சி |
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் |
||
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் |
||
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் |
||
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. | உரை | |
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை |
75. மருதம் |
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- |
||
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! |
||
வெண் கோட்டு யானை சோணை படியும் |
||
பொன் மலி பாடலி பெறீஇயர்!- |
||
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? | உரை | |
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார் |
76. குறிஞ்சி |
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
||
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
||
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
||
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
||
தண் வரல் வாடை தூக்கும் |
||
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. | உரை | |
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார் |
77. பாலை |
அம்ம வாழி, தோழி!-யாவதும், |
||
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து |
||
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை |
||
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் |
||
அரிய கானம் சென்றோர்க்கு |
||
எளிய ஆகிய தட மென் தோளே. | உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
79. பாலை |
கான யானை தோல் நயந்து உண்ட |
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
||
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே. | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |
82. குறிஞ்சி |
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, |
||
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்; |
||
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் |
||
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் |
||
கொழுங் கொடி அவரை பூக்கும் |
||
அரும் பனி அற்சிரம் வாராதோரே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன் |
86. குறிஞ்சி |
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண் |
||
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி, |
||
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து, |
||
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து, |
||
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் |
||
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. | உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - வெண்கொற்றன் |
87. குறிஞ்சி |
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் |
||
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும் |
||
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; |
||
பசைஇப் பசந்தன்று, நுதலே; |
||
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே. | உரை | |
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர் |
91. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி |
||
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் |
||
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின், |
||
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! |
||
ஓவாது ஈயும் மாரி வண் கை, |
||
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி |
||
கொன் முனை இரவு ஊர் போலச் |
||
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே! | உரை | |
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர |
92. நெய்தல் |
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து- |
||
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை, |
||
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த |
||
பிள்ளை உள்வாய்ச் செரீஇய |
||
இரை கொண்டமையின், விரையுமால் செலவே. | உரை | |
93. மருதம் |
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய், |
||
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு |
||
அன்னையும் அத்தனும் அல்லரோ? |
||
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே? | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார் |
96. குறிஞ்சி |
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு |
||
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது |
||
நகை என உணரேன்ஆயின், |
||
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே, | உரை | |
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை |
97. நெய்தல் |
யானே ஈண்டையேனே; என் நலனே |
||
ஆனா நோயொடு கானலஃதே. |
||
துறைவன் தம் ஊரானே; |
||
மறை அலர் ஆகி மன்றத்தஃதே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி |
98. முல்லை |
'இன்னள் ஆயினள் நன்னுதல்' என்று, அவர்த் |
||
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே, |
||
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை |
||
நீர் வார் பைம் புதற் கலித்த |
||
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோக்குளமுற்றன் |
102. நெய்தல் |
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது |
||
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி |
||
வான் தோய்வற்றே, காமம்; |
||
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே. | உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார் |
103 நெய்தல் |
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், |
||
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய், |
||
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் |
||
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் |
||
வாரார் போல்வர், நம் காதலர்; |
||
வாழேன் போல்வல்-தோழி!-யானே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன் |
104. பாலை |
அம்ம வாழி, தோழி! காதலர், |
||
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, |
||
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் |
||
பனி படு நாளே, பிரிந்தனர்; |
||
பிரியும் நாளும் பல ஆகுபவே! | உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார். |
105. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் |
||
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் |
||
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் |
||
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் |
||
சூர் மலை நாடன் கேண்மை |
||
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே. | உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர் |
106. குறிஞ்சி |
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் |
||
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் |
||
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் |
||
வந்தன்று-வாழி, தோழி!-நாமும் |
||
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு, |
||
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே. | உரை | |
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர் |
107. மருதம் |
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன |
||
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!- |
||
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் |
||
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, |
||
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர் |
||
யாணர் ஊரனொடு வதிந்த |
||
ஏம இன் துயில் எடுப்பியோயே! | உரை | |
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார். |
108. முல்லை |
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் |
||
கறவை கன்றுவயின் படர, புறவில் |
||
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் |
||
செவ் வான் செவ்வி கொண்டன்று; |
||
உய்யேன் போல்வல்-தோழி!-யானே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன் |
110. முல்லை |
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு |
||
யார் ஆகியரோ-தோழி!-நீர |
||
நீலப் பைம் போது உளரி, புதல |
||
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி, |
||
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த |
||
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று |
||
இன்னாது எறிதரும் வாடையொடு |
||
என் ஆயினள்கொல் என்னாதோரே? | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார் |
112. குறிஞ்சி |
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்; |
||
எள் அற விடினே, உள்ளது நாணே; |
||
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ |
||
நாருடை ஒசியல் அற்றே- |
||
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார் |
118. நெய்தல் |
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய |
||
நள்ளென வந்த நார் இல் மாலை, |
||
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர், |
||
'வருவீர் உளீரோ?' எனவும், |
||
வாரார்-தோழி!-நம் காதலோரே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார் |
121. குறிஞ்சி |
மெய்யே, வாழி?-தோழி-சாரல் |
||
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை |
||
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற |
||
கோட்டொடு போகியாங்கு, நாடன் |
||
தான் குறி வாயாத் தப்பற்குத் |
||
தாம் பசந்தன, என் தட மென் தோளே. | உரை | |
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ |
122. நெய்தல் |
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன |
||
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே |
||
வந்தன்று, வாழியோ, மாலை! |
||
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே! | உரை | |
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார் |
125.நெய்தல் |
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, |
||
உளெனே வாழி-தோழி!-சாரல் |
||
தழை அணி அல்குல் மகளிருள்ளும் |
||
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் |
||
பறை வலம் தப்பிய பைதல் நாரை |
||
திரை தோய் வாங்கு சினை இருக்கும் |
||
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே, | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன். |
126. முல்லை |
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் |
||
இவணும் வாரார்; எவணரோ?' என, |
||
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் |
||
தொகு முகை இலங்கு எயிறு ஆக |
||
நகுமே-தோழி!-நறுந் தண் காரே. | உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி |
133. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை |
||
கிளி குறைத்து உண்ட கூழை இருவி |
||
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என் |
||
உரம் செத்தும் உளெனே-தோழி!-என் |
||
நலம் புதிது உண்ட புலம்பினானே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன் |
134. குறிஞ்சி |
அம்ம வாழி-தோழி!-நம்மொடு |
||
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- |
||
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் |
||
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் |
||
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, |
||
நிலம் கொள் பாம்பின், இழிதரும் |
||
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன் |
140. பாலை |
வேதின வெரிநின் ஓதி முது போத்து, |
||
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் |
||
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து, |
||
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் |
||
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை. |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
||
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
||
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. | உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |
145. குறிஞ்சி |
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி- |
||
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, |
||
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள் |
||
துஞ்சாது உறைநரொடு உசாவாத் |
||
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே. | உரை | |
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி |
148. முல்லை |
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த |
||
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் |
||
காசின் அன்ன போது ஈன் கொன்றை |
||
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும், |
||
'கார் அன்று' என்றிஆயின், |
||
கனவோ மற்று இது? வினவுவல் யானே. | உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார். |
149. பாலை |
அளிதோ தானே-நாணே நம்மொடு |
||
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, |
||
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை |
||
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, |
||
தாங்கும் அளவைத் தாங்கி, |
||
காமம் நெரிதரக் கைந் நில்லாதே. | உரை | |
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
150. குறிஞ்சி |
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி |
||
வான மீனின் வயின்வயின் இமைக்கும் |
||
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம் |
||
உள்ளின், உள் நோய் மல்கும்; |
||
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்! | உரை | |
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார் |
152. குறிஞ்சி |
யாவதும் அறிகிலர், கழறுவோரே- |
||
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து |
||
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே? |
||
யாமைப் பார்ப்பின் அன்ன |
||
காமம், காதலர் கையற விடினே, | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார் |
153. குறிஞ்சி |
குன்றக் கூகை குழறினும், முன்றிற் |
||
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |
154. பாலை |
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின் |
||
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, |
||
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, |
||
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை |
||
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் |
||
தயங்க இருந்து, புலம்பக் கூஉம் |
||
அருஞ் சுர வைப்பின் கானம் |
||
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன் |
155. முல்லை |
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் |
||
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப் |
||
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று |
||
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி |
||
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு, |
||
மாலை நனி விருந்து அயர்மார் |
||
தேர் வரும்' என்னும் உரை வாராதே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன் |
157. மருதம் |
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர் |
||
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்- |
||
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் |
||
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே. | உரை | |
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
158. குறிஞ்சி |
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் |
||
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் |
||
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! |
||
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை |
||
இமயமும் துளக்கும் பண்பினை; |
||
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே? | உரை | |
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார். |
160. குறிஞ்சி |
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் |
||
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, |
||
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் |
||
கையற நரலும் நள்ளென் யாமத்துப் |
||
பெருந் தண் வாடையும் வாரார்; |
||
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன். |
161. குறிஞ்சி |
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, |
||
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப் |
||
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, |
||
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ! |
||
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை |
||
ஆரம் நாறும் மார்பினன் |
||
மாரி யானையின் வந்து நின்றனனே? | உரை | |
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர் |
163.நெய்தல் |
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் |
||
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன |
||
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. |
||
வெள் வீத் தாழை திரை அலை |
||
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? | உரை | |
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன் |
169. மருதம் |
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் |
||
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் |
||
நும்மொடு நக்க வால் வெள் எயிறே: |
||
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல |
||
எமக்கும் பெரும் புலவு ஆகி, |
||
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. | உரை | |
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார். |
170. குறிஞ்சி |
பலரும் கூறுக, அஃது அறியாதோரே- |
||
அருவி தந்த நாட் குரல் எருவை |
||
கயம் நாடு யானை கவளம் மாந்தும் |
||
மலை கெழு நாடன் கேண்மை |
||
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே, | உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார் |
171. மருதம் |
காண் இனி வாழி-தோழி-யாணர்க் |
||
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட |
||
மீன் வலை மாப் பட்டாஅங்கு, |
||
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே? | உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார் |
172. நெய்தல் |
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல் |
||
பழுமரம் படரும் பையுள் மாலை, |
||
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் |
||
தமியர் ஆக இனியர்கொல்லோ? |
||
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த |
||
உலை வாங்கு மிதி தோல் போலத் |
||
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே. | உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார் |
174. பாலை |
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் |
||
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி |
||
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் |
||
அத்தம் அரிய என்னார், நத்துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப் |
||
பொருளே மன்ற பொருளே; |
||
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. | உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி |
175. நெய்தல் |
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி, |
||
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, |
||
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் |
||
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு |
||
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று, |
||
பிறர்பிறர் அறியக் கூறல் |
||
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே? | உரை |
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன். |
176. குறிஞ்சி |
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்; |
||
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என் |
||
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, |
||
வரை முதிர் தேனின் போகியோனே- |
||
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ? |
||
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த |
||
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே. | உரை | |
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
181. குறிஞ்சி |
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை |
||
இன்னர் என்னும் இன்னாக் கிளவி- |
||
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் |
||
உழவன் யாத்த குழவியின் அகலாது, |
||
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் |
||
திரு மனைப் பல் கடம் பூண்ட |
||
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே? | உரை | |
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார் |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. | உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
185. குறிஞ்சி |
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, |
||
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, |
||
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச் |
||
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப் |
||
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, |
||
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் |
||
கல்மிசைக் கவியும் நாடற்கு, என் |
||
நல் மா மேனி அழி படர் நிலையே? | உரை | |
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
186. முல்லை |
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த |
||
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி |
||
எயிறு என முகையும் நாடற்குத் |
||
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே, | உரை | |
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி. |
187. குறிஞ்சி |
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி |
||
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, |
||
பெரு வரை நீழல் உகளும் நாடன் |
||
கல்லினும் வலியன்-தோழி!- |
||
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. | உரை | |
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |
188. முல்லை |
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு |
||
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்- |
||
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்- |
||
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
190. முல்லை |
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
||
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர் |
||
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி |
||
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய |
||
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், |
||
நல் ஏறு இயங்குதொறு இயம்பும் |
||
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன். |
191. முல்லை |
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?- |
||
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம் |
||
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத் |
||
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய |
||
ஏதிலாளர் இவண் வரின், 'போதின் |
||
பொம்மல் ஓதியும் புனையல்; |
||
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
192. பாலை |
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என, |
||
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!- |
||
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் |
||
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை |
||
நறுந் தாது கொழுதும் பொழுதும், |
||
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
193. முல்லை |
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன |
||
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, |
||
தட்டைப் பறையின், கறங்கும் நாடன் |
||
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் |
||
மணந்தனன்மன் எம் தோளே; |
||
இன்றும், முல்லை முகை நாறும்மே. | உரை | |
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார் |
194. முல்லை |
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர |
||
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் |
||
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; |
||
ஏதில கலந்த இரண்டற்கு என் |
||
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? | உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார். |
195. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் |
||
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை, |
||
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்? |
||
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ- |
||
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் |
||
செய்வுறு பாவை அன்ன என் |
||
மெய் பிறிதாகுதல் அறியாதோரே! | உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன். |
197. நெய்தல் |
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக |
||
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை |
||
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய |
||
கூதிர் உருவின் கூற்றம் |
||
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே? | உரை | |
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார். |
200. நெய்தல் |
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் |
||
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து, |
||
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!- |
||
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே- |
||
கால மாரி மாலை மா மலை |
||
இன் இசை உருமினம் முரலும் |
||
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே. | உரை | |
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார். |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! | உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
202. மருதம் |
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! |
||
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் |
||
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு, |
||
இனிய செய்த நம் காதலர் |
||
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே! | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லை |
203. மருதம் |
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்; |
||
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; |
||
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும், |
||
கடவுள் நண்ணிய பாலோர் போல, |
||
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப் |
||
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே. | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நெடும்பல்லியத்தன் |
205. நெய்தல் |
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க |
||
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, |
||
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, |
||
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப, |
||
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; |
||
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என் |
||
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே? | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன் |
207. பாலை |
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று, |
||
அத்த ஓமை அம் கவட்டு இருந்த |
||
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் |
||
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, |
||
நல் அடி பொறிப்பத் தாஅய்ச் |
||
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன். |
208. குறிஞ்சி |
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் |
||
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை |
||
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், |
||
நின்று கொய மலரும் நாடனொடு |
||
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே, | உரை | |
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
216. பாலை |
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை |
||
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே; |
||
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும் |
||
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே; |
||
'அன்னள் அளியள்' என்னாது, மா மழை |
||
இன்னும் பெய்யும்; முழங்கி |
||
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே | உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன |
218.பாலை |
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் |
||
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்; |
||
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; |
||
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!- |
||
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று |
||
இமைப்பு வரை அமையா நம் வயின் |
||
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன் |
219. நெய்தல் |
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர் |
||
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே; |
||
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே; |
||
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே, |
||
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத் |
||
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு |
||
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே. | உரை | |
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார். |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. | உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
221. முல்லை |
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன; |
||
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, |
||
பாலொடு வந்து கூழொடு பெயரும் |
||
ஆடுடை இடைமகன் சென்னிச் |
||
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. | உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன் |
223. குறிஞ்சி |
'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் |
||
செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண் |
||
நல்லோர் நல்ல பலவால் தில்ல; |
||
தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை |
||
ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி, |
||
அன்னை ஓம்பிய ஆய் நலம் |
||
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே. | உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன் |
224. பாலை |
கவலை யாத்த அவல நீள் இடைச் |
||
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா |
||
நோயினும் நோய் ஆகின்றே-கூவற் |
||
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட |
||
உயர்திணை ஊமன் போலத் |
||
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே. | உரை | |
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன் |
226. நெய்தல் |
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
||
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
||
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
||
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
||
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
||
குருகு என மலரும் பெருந் துறை |
||
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |
228. நெய்தல் |
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, |
||
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் |
||
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், |
||
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து |
||
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், |
||
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. | உரை | |
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |
231. மருதம் |
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; |
||
சேரி வரினும் ஆர முயங்கார்; |
||
ஏதிலாளர் சுடலை போலக் |
||
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, |
||
நல் அறிவு இழந்த காமம் |
||
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே. | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
234. முல்லை |
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
||
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
||
மாலை என்மனார், மயங்கியோரே: |
||
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
||
பெரும் புலர் விடியலும் மாலை; |
||
பகலும் மாலை-துணை இலோர்க்கே. | உரை | |
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
239. குறிஞ்சி |
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; |
||
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச் |
||
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் |
||
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி |
||
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் |
||
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. | உரை | |
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன் |
240. முல்லை |
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
||
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
||
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
||
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
||
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
||
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
||
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி. |
241. குறிஞ்சி |
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம் |
||
கெழுதகைமையின் அழுதன-தோழி!- |
||
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் |
||
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, |
||
ஏறாது இட்ட ஏமப் பூசல் |
||
விண் தோய் விடரகத்து இயம்பும் |
||
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
243. நெய்தல் |
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் |
||
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை |
||
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே. | உரை | |
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன் |
244. குறிஞ்சி |
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
||
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல் |
||
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!- |
||
ஓரி முருங்கப் பீலி சாய |
||
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் |
||
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ |
245. நெய்தல் |
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் |
||
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே- |
||
வாள் போல் வாய கொழு மடல் தாழை |
||
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் |
||
மெல்லம் புலம்பன் கொடுமை |
||
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மாலை மாறன் |
246. நெய்தல் |
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, |
||
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர் |
||
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு, |
||
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் |
||
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் |
||
இளையரும் மடவரும் உளரே; |
||
அலையாத் தாயரொடு நற்பாலோரே. | உரை | |
சிறைப்புறம். - கபிலர் |
249. குறிஞ்சி |
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, |
||
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, |
||
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் |
||
குன்றம் நோக்கினென்-தோழி!- |
||
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? | உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
252. குறிஞ்சி |
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த |
||
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் |
||
வருவதோர் காலை, இன் முகம் திரியாது, |
||
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி, |
||
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு |
||
துனியல் வாழி-தோழி!-சான்றோர் |
||
புகழும் முன்னர் நாணுப; |
||
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே? | உரை | |
தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன் |
254. பாலை |
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, |
||
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் |
||
தலை அலர் வந்தன; வாரா-தோழி!- |
||
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; |
||
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்- |
||
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் |
||
எய்தினரால்' என, வரூஉம் தூதே. | உரை | |
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான் |
257. குறிஞ்சி |
வேரும் முதலும் கோடும் ஒராங்குத் |
||
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் |
||
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின் |
||
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்; |
||
அகலினும் அகலாதாகி |
||
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே. | உரை | |
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன் |
261. குறிஞ்சி |
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய |
||
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள், |
||
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான், |
||
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும் |
||
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் |
||
துஞ்சா வாழி-தோழி!-காவலர் |
||
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என் |
||
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே. | உரை | |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
264.குறிஞ்சி |
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, |
||
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, |
||
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு |
||
நயந்தனன் கொண்ட கேண்மை |
||
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே. | உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர் |
266. பாலை |
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று |
||
இன்னா இரவின் இன் துணை ஆகிய |
||
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ- |
||
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் |
||
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?- | உரை | |
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |
269. நெய்தல் |
சேயாறு சென்று, துனைபரி அசாவாது, |
||
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல- |
||
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் |
||
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் |
||
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
||
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், |
||
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, |
||
'இனி வரின் எளியள்' என்னும் தூதே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார் |
271. மருதம் |
அருவி அன்ன பரு உறை சிதறி |
||
யர்றுநிறை பகரும் நாடனைத் தேறி, |
||
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது |
||
தவப் பல் நாள் தோள் மயங்கி, |
||
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே, | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார் |
273. பாலை |
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் |
||
பெருங் காடு உளரும் அசைவளி போல, |
||
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! |
||
நொந்தனஆயின், கண்டது மொழிவல்; |
||
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு |
||
அறியாது ஏறிய மடவோன் போல, |
||
ஏமாந்தன்று, இவ் உலகம்; |
||
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே. | உரை | |
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார் |
278. பாலை |
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
||
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
||
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
||
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
||
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
||
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
||
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |
279. முல்லை |
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
||
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
||
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
||
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
||
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
||
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
||
இரும் பல் குன்றம் போகி, |
||
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? | உரை | |
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
281. பாலை |
வெண் மணற் பொதுளிய |
||
பைங் கால் கருக்கின் |
||
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு, |
||
அத்த வேம்பின் அமலை வான் பூச் |
||
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
||
குன்று தலைமணந்த கானம் |
||
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே? | உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன் |
283. பாலை |
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்; |
||
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச் |
||
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் |
||
சென்றனர் வாழி-தோழி-என்றும் |
||
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர் |
||
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த |
||
படு முடைப் பருந்து பார்த்திருக்கும் |
||
நெடு மூதிடைய நீர் இல் ஆறே. | உரை | |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல் |
284. குறிஞ்சி |
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப, |
||
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் |
||
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன் |
||
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும், |
||
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?- |
||
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி |
||
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் |
||
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே. | உரை | |
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன் |
285. பாலை |
வைகா வைகல் வைகவும் வாரார்; |
||
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்; |
||
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர் |
||
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ் |
||
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு |
||
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் |
||
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. | உரை | |
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன் |
288. குறிஞ்சி |
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து |
||
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன் |
||
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற |
||
இன்னாமையினும், இனிதோ- |
||
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே? | உரை | |
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர் |
289. முல்லை |
வளர்பிறை போல வழிவழிப் பெருகி, |
||
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு |
||
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய், |
||
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும், |
||
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே; |
||
பட்ட மாரி படாஅக்கண்ணும், |
||
அவர் திறத்து இரங்கும் நம்மினும், |
||
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
'காலம் கண்டு வேறுபட்டாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், 'கொடியர்' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்'என்று, தலைமகள் சொல்லியது |
290. நெய்தல் |
'காமம் தாங்குமதி' என்போர்தாம் அஃது |
||
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்? |
||
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின், |
||
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் |
||
கல் பொரு சிறு நுரை போல, |
||
மெல்லமெல்ல இல்லாகுதுமே. | உரை | |
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார். |
293. மருதம் |
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப் |
||
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய் |
||
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் |
||
ஆதி அருமன் மூதூர் அன்ன, |
||
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை |
||
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப, |
||
வருமே சேயிழை, அந்தில் |
||
கொழுநற் காணிய; அளியேன் யானே! | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன் |
296. நெய்தல் |
அம்ம வாழி-தோழி!-புன்னை |
||
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
||
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
||
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
||
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
||
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள் |
||
இன்னள் ஆகத் துறத்தல் |
||
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே. | உரை | |
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |
296. நெய்தல் |
அம்ம வாழி-தோழி!-புன்னை |
||
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
||
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
||
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
||
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
||
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள் |
||
இன்னள் ஆகத் துறத்தல் |
||
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே. | உரை | |
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |
299. நெய்தல் |
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப் |
||
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், |
||
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல், |
||
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் |
||
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் |
||
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன் |
||
மணப்பின் மாண்நலம் எய்தி, |
||
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே? | உரை | |
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி |
301. குறிஞ்சி |
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் |
||
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் |
||
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் |
||
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், |
||
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் |
||
வாராதுஆயினும், வருவது போலச் |
||
செவிமுதல் இசைக்கும் அரவமொடு |
||
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. | உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன் |
302. குறிஞ்சி |
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே? |
||
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப் |
||
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; |
||
அன்னோ! இன்னும், நல் மலை நாடன், |
||
'பிரியா நண்பினர் இருவரும்' என்னும் |
||
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன் |
||
துஞ்சு ஊர் யாமத்தானும், என் |
||
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே. | உரை | |
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார் |
304. நெய்தல் |
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
||
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
||
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
||
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
||
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
||
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
||
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
||
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |
305. மருதம் |
கண் தர வந்த காம ஒள் எரி |
||
என்பு உற நலியினும், அவரொடு பேணிச் |
||
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே |
||
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; |
||
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் |
||
குப்பைக் கோழித் தனிப் போர் போல, |
||
விளிவாங்கு விளியின் அல்லது, |
||
களைவோர் இலை-யான் உற்ற நோயே. | உரை | |
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார். |
306. நெய்தல் |
'மெல்லிய, இனிய, மேவரு தகுந, |
||
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ, |
||
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் |
||
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் |
||
வண்டு வீழ்பு அயரும் கானல்- |
||
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? | உரை | |
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
307. பாலை |
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, |
||
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, |
||
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ, |
||
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன் |
||
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, |
||
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, |
||
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து, |
||
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் |
||
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே? | உரை | |
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன் |
310. நெய்தல் |
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; |
||
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், |
||
நம்மே போலும் மம்மர்த்து ஆகி, |
||
எல்லை கழியப் புல்லென்றன்றே; |
||
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை |
||
தண்ணிய கமழும் ஞாழல் |
||
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. | உரை | |
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன் |
31. மருதம் |
மள்ளர் குழீஇய விழவினானும், |
||
மகளிர் தழீஇய துணங்கையானும், |
||
யாண்டும் காணேன், மாண் தக்கோனை; |
||
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக் |
||
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த |
||
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. | உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி |
313. நெய்தல் |
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை |
||
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, |
||
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு |
||
யாத்தேம்; யாத்தன்று நட்பே; |
||
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, 'அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட |
314. முல்லை |
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் |
||
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, |
||
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும், |
||
வாரார் வாழி!-தோழி!-வரூஉம் |
||
இன் உறல் இள முலை ஞெமுங்க- |
||
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே. | உரை |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன் |
315. குறிஞ்சி |
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு |
||
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன் |
||
ஞாயிறு அனையன்-தோழி!- |
||
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே. | உரை | |
வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன் |
316. நெய்தல் |
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், |
||
நோய் மலி வருத்தம் அன்னை அறியின், |
||
உளெனோ வாழி-தோழி!-விளியாது, |
||
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை |
||
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, |
||
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி |
||
ஓங்கு வரல் விரிதிரை களையும் |
||
துறைவன் சொல்லோ பிற ஆயினவே? | உரை | |
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன் |
318. நெய்தல் |
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், |
||
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், |
||
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் |
||
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று |
||
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் |
||
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள் |
||
பிழையா வஞ்சினம் செய்த |
||
களவனும், கடவனும், புணைவனும், தானே. | உரை | |
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
319. முல்லை |
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து, |
||
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், |
||
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, |
||
மை அணி மருங்கின் மலையகம் சேரவும், |
||
மாலை வந்தன்று, மாரி மா மழை; |
||
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் |
||
இன்னும் வாரார்ஆயின், |
||
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே | உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன் |
320. நெய்தல் |
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் |
||
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, |
||
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன், |
||
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் |
||
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் |
||
புன்னைஅம் சேரி இவ் ஊர் |
||
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. | உரை | |
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன் |
322. குறிஞ்சி |
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி |
||
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, |
||
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென, |
||
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து, |
||
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, |
||
மருவின் இனியவும் உளவோ? |
||
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே. | உரை | |
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன் |
325. நெய்தல் |
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம் |
||
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று |
||
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ! |
||
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
||
கருங் கால் வெண் குருகு மேயும் |
||
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார் |
326. நெய்தல் |
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர் |
||
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த |
||
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!- |
||
ஒரு நாள் துறைவன் துறப்பின், |
||
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே, | உரை | |
சிறைப்புறம். |
327. குறிஞ்சி |
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் |
||
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த |
||
குன்ற நாடன்தன்னினும், நன்றும் |
||
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி! |
||
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச் |
||
சாயலள்; அளியள்' என்னாய், |
||
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே. | உரை | |
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
329. பாலை |
கான இருப்பை வேனில் வெண் பூ |
||
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, |
||
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் |
||
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, |
||
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, |
||
தெள் நீர் நிகர்மலர் புரையும் |
||
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார் |
330. மருதம் |
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் |
||
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட |
||
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் |
||
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ |
||
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியன் |
334. நெய்தல் |
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு |
||
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப, |
||
பனி புலந்து உறையும் பல் பூங் கானல் |
||
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் |
||
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று |
||
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே? | உரை | |
'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார் |
340. நெய்தல் |
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, |
||
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி, |
||
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை, |
||
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல் |
||
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் |
||
பெயர்தரப் பெயர்தந்தாங்கு, |
||
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே. | உரை | |
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன் |
341. நெய்தல் |
பல் வீ படரிய பசு நனை குரவம் |
||
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் |
||
சினை இனிது ஆகிய காலையும், காதலர் |
||
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக் |
||
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என, |
||
வலியா நெஞ்சம் வலிப்ப, |
||
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே. | உரை | |
'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன் |
344. முல்லை |
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் |
||
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் |
||
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு |
||
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் |
||
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, |
||
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, |
||
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் |
||
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன் |
349. நெய்தல் |
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, |
||
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் |
||
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் |
||
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்; |
||
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
||
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின், |
||
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? | உரை | |
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன். |
352. பாலை |
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன |
||
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை |
||
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, |
||
பகல் உறை முது மரம் புலம்பப் போகும் |
||
சிறு புன் மாலை உண்மை |
||
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே. | உரை | |
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
360. குறிஞ்சி |
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து |
||
அறியான் ஆகுதல் அன்னை காணிய, |
||
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் |
||
சிலம்பின் சிலம்பும் சோலை |
||
இலங்கு மலை நாடன் இரவினானே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |
361. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு |
||
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை |
||
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு |
||
காலை வந்த முழுமுதற் காந்தள் |
||
மெல் இலை குழைய முயங்கலும், |
||
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே. | உரை | |
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர் |
368. மருதம் |
மெல்லியலோயே! மெல்லியலோயே! |
||
நல் நாண் நீத்த பழி தீர் மாமை |
||
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், |
||
சொல்ல கிற்றா மெல்லியலோயே! |
||
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, |
||
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து |
||
இடிகரைப் பெரு மரம் போல, |
||
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. | உரை | |
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர் |
377. குறிஞ்சி |
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய, |
||
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும், |
||
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே- |
||
அறிதற்கு அமையா நாடனொடு |
||
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன் |
385. குறிஞ்சி |
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, |
||
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ |
||
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் |
||
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் |
||
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
||
அன்றை அன்ன நட்பினன்; |
||
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர் |
386. நெய்தல் |
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் |
||
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே, |
||
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் |
||
மாலையோ அறிவேன்மன்னே; மாலை |
||
நிலம் பரந்தன்ன புன்கணொடு |
||
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார் |
387. முல்லை |
எல்லை கழிய, முல்லை மலர, |
||
கதிர் சினம் தணிந்த கையறு மாலை, |
||
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின், |
||
எவன்கொல் வாழி?-தோழி!- |
||
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார் |
391. முல்லை |
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் |
||
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், |
||
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, |
||
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; |
||
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் |
||
கையற வந்த பையுள் மாலை, |
||
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை |
||
தாஅம்நீர் நனந்தலை புலம்பக் |
||
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! | உரை | |
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார் |
395. பாலை |
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே, |
||
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்; |
||
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; |
||
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக் |
||
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; |
||
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் |
||
அளிதோதானே நாணே- |
||
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே! | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது. |
399. மருதம் |
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க |
||
பாசி அற்றே பசலை-காதலர் |
||
தொடுவுழித் தொடுவுழி நீங்கி, |
||
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பரணர் |
401. நெய்தல் |
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
||
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
||
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
||
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
||
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
||
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் | உரை | |