முகப்பு |
நெய்தல் |
4. நெய்தல் |
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் |
||
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ, |
||
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, |
||
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, |
||
5 |
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின், |
||
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர் |
||
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
||
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் |
||
10 |
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் |
|
கருங் கால் வெண் குருகு வெரூஉம் |
||
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்
|
11. நெய்தல் |
பெய்யாது வைகிய கோதை போல |
||
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; |
||
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் |
||
வாரார் என்னும் புலவி உட்கொளல் |
||
5 |
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
|
புணரி பொருத பூ மணல் அடைகரை, |
||
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, |
||
வலவன் வள்பு ஆய்ந்து ஊர, |
||
நிலவு விரிந்தன்றால் கானலானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்
|
15. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள |
||
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! |
||
பூவின் அன்ன நலம் புதிது உண்டு, |
||
5 |
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே |
|
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி, |
||
மாசு இல் கற்பின் மடவோள் குழவி |
||
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு, |
||
சேணும் எம்மொடு வந்த |
||
10 |
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! | உரை |
வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.-அறிவுடைநம்பி
|
19. நெய்தல் |
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
||
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
||
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
||
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
||
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
||
செலீஇய சேறிஆயின், இவளே |
||
வருவை ஆகிய சில் நாள் |
||
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! | உரை | |
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
31. நெய்தல் |
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
||
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
||
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
||
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
||
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
||
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
||
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
||
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
||
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
||
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! | உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
38. நெய்தல் |
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, |
||
பாட்டம் பொய்யாது பரதவர் பகர, |
||
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் |
||
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு |
||
5 |
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
|
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க் |
||
கழி சூழ் படப்பைக் காண்டவாயில், |
||
ஒலி காவோலை முள் மிடை வேலி, |
||
பெண்ணை இவரும் ஆங்கண் |
||
10 |
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. | உரை |
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்
|
45. நெய்தல் |
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, |
||
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு |
||
மீன் எறி பரதவர் மகளே; நீயே, |
||
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் |
||
5 |
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: |
|
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, |
||
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? |
||
புலவு நாறுதும்; செல நின்றீமோ! |
||
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை |
||
10 |
நும்மொடு புரைவதோ அன்றே; |
|
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! | உரை | |
குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.
|
49. நெய்தல் |
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
||
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
||
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
||
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
||
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் |
||
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
||
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
||
முன்றில் தாழையொடு கமழும் |
||
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? | உரை |
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|
54. நெய்தல் |
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ, |
||
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை |
||
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து- |
||
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி: |
||
5 |
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; |
|
அது நீ அறியின், அன்புமார் உடையை; |
||
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை |
||
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர் |
||
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் |
||
10 |
தெண் திரை மணிப் புறம் தைவரும் |
|
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்
|
58. நெய்தல் |
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் |
||
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் |
||
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, |
||
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- |
||
5 |
வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
|
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் |
||
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, |
||
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, |
||
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை |
||
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் | ||
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்
|
63. நெய்தல் |
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
||
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
||
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
||
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
||
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
||
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
||
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
||
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
||
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|
67. நெய்தல் |
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் |
||
மால் வரை மறைய, துறை புலம்பின்றே; |
||
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு |
||
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய |
||
5 |
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
|
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் |
||
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, |
||
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, |
||
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், |
||
10 |
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர் |
|
முழவு இசைப் புணரி எழுதரும் |
||
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்
|
72. நெய்தல் |
'பேணுப பேணார் பெரியோர்' என்பது |
||
நாணு தக்கன்று அது காணுங்காலை; |
||
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் |
||
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது |
||
5 |
அழிதக்கன்றால் தானே; கொண்கன், |
|
'யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற் |
||
பிரிதல் சூழான்மன்னே; இனியே |
||
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது, |
||
அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால், |
||
10 |
'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா |
|
அஞ்சுவல்-தோழி!-என் நெஞ்சத்தானே! | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளம்போதியார்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! | உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
78. நெய்தல் |
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி |
||
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, |
||
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், |
||
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், |
||
5 |
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
|
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; |
||
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி |
||
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், |
||
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா |
||
10 |
வலவன் கோல் உற அறியா, |
|
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! | உரை | |
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்
|
87. நெய்தல் |
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
||
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
||
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
||
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
||
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
||
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
||
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
||
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|
91. நெய்தல் |
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப் |
||
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் |
||
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு |
||
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை |
||
5 |
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
|
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, |
||
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் |
||
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் |
||
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, |
||
10 |
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
|
கடு மாப் பூண்ட நெடுந் தேர் |
||
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? | உரை | |
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்
|
94. நெய்தல் |
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், |
||
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; |
||
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- |
||
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ |
||
5 |
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் |
|
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் |
||
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின் |
||
ஆர்வம் உடையர் ஆகி, |
||
மார்பு அணங்குறுநரை அறியாதோனே! | உரை | |
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
|
101. நெய்தல் |
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் |
||
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் |
||
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, |
||
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் |
||
5 |
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி |
|
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து, |
||
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின், |
||
மீன் எறி பரதவர் மட மகள் |
||
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே. | உரை | |
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்
|
106. நெய்தல் |
அறிதலும் அறிதியோ-பாக!-பெருங்கடல் |
||
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள, |
||
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது, |
||
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு |
||
5 |
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, |
|
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் |
||
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி, |
||
முறி திமிர்ந்து உதிர்த்த கையள், |
||
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? | உரை | |
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்
|
111. நெய்தல் |
அத்த இருப்பைப் பூவின் அன்ன |
||
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், |
||
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், |
||
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் |
||
5 |
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
|
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, |
||
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, |
||
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் |
||
பெருங் கழிப் பாக்கம் கல்லென |
||
10 |
வருமே-தோழி!-கொண்கன் தேரே. | உரை |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
|
117. நெய்தல் |
பெருங் கடல் முழங்க, கானல் மலர, |
||
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, |
||
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் |
||
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர, |
||
5 |
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் |
|
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க, |
||
புலம்பொடு வந்த புன்கண் மாலை |
||
அன்னர் உன்னார் கழியின், பல் நாள் |
||
வாழலென்-வாழி, தோழி!-என்கண் |
||
10 |
பிணி பிறிதாகக் கூறுவர்; |
|
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்
|
123. நெய்தல் |
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
||
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
||
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
||
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
||
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
||
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
||
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
||
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
||
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
||
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
124. நெய்தல் |
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
||
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
||
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
||
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
||
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
||
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் |
||
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
||
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
127. நெய்தல் |
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை |
||
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, |
||
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த |
||
5 |
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
|
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய |
||
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், |
||
'மெல்லம் புலம்பன் அன்றியும், |
||
செல்வாம்' என்னும், 'கானலானே'. | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்
|
130. நெய்தல் |
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண் |
||
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப, |
||
கோலின் எறிந்து காலைத் தோன்றிய |
||
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் |
||
5 |
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? |
|
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்; |
||
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் |
||
வாடிய வரியும் நோக்கி, நீடாது, |
||
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று |
||
10 |
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் |
|
வையக வரையளவு இறந்த, |
||
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்
|
131. நெய்தல் |
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், |
||
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
||
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப! |
||
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் |
||
5 |
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
|
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், |
||
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், |
||
கள் கமழ், பொறையாறு அன்ன என் |
||
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? | உரை | |
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்
|
132. நெய்தல் |
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; |
||
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் |
||
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி |
||
போர் அமை கதவப் புரை தொறும் தூவ, |
||
5 |
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் |
|
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை |
||
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை, |
||
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும் |
||
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி |
||
10 |
ஒன்று எறி பாணியின் இரட்டும்; |
|
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? | உரை | |
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
|
135. நெய்தல் |
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை |
||
மா அரை புதைத்த மணல் மலி முன்றில், |
||
வரையாத் தாரம் வரு விருந்து அயரும் |
||
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் |
||
5 |
இனிது மன்றம்ம தானே-பனி படு |
|
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, |
||
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், |
||
வால் உளைப் பொலிந்த, புரவித் |
||
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. | உரை | |
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
|
138. நெய்தல் |
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை |
||
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, |
||
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
||
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் |
||
5 |
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
|
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் |
||
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, |
||
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை |
||
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் |
||
10 |
முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
|
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. | உரை | |
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்
|
145. நெய்தல் |
இருங் கழி பொருத ஈர வெண் மணல் |
||
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி |
||
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் |
||
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை |
||
5 |
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
|
புணர்ந்தனன் போல உணரக் கூறி, |
||
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை; |
||
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் |
||
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, |
||
10 |
நள்ளென் கங்குலும், வருமரோ- |
|
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே! | உரை | |
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்
|
149. நெய்தல் |
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, |
||
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, |
||
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, |
||
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, |
||
5 |
அலந்தனென் வாழி-தோழி!-கானல் |
|
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் |
||
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, |
||
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு |
||
செலவு அயர்ந்திசினால், யானே; |
||
10 |
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! | உரை |
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
152. நெய்தல் |
மடலே காமம் தந்தது; அலரே |
||
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
||
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
||
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
||
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
||
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
||
கங்குலும் கையறவு தந்தன்று; |
||
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? | உரை | |
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|
155. நெய்தல் |
'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய், |
||
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய், |
||
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்! |
||
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்: |
||
5 |
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப் |
|
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ? |
||
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ? |
||
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர் |
||
முள் எயிற்று முறுவல் திறந்தன; |
||
10 |
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. | உரை |
இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்
|
159. நெய்தல் |
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் |
||
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை, |
||
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை, |
||
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி, |
||
5 |
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல |
|
வளி சீத்து வரித்த புன்னை முன்றில், |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய, |
||
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும், |
||
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து, |
||
10 |
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் |
|
சில் குடிப் பாக்கம் கல்லென |
||
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே! | உரை | |
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்
|
163. நெய்தல் |
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்- |
||
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு |
||
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் |
||
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப, |
||
5 |
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, |
|
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி |
||
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல் |
||
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, |
||
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் |
||
10 |
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று |
|
வைகுறு வனப்பின், தோன்றும் |
||
கைதைஅம் கானல் துறைவன் மாவே! | உரை | |
வரைவு மலிந்து சொல்லியது.
|
167. நெய்தல் |
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
||
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
||
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
||
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
||
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
||
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
||
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
||
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
||
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. | உரை | |
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
172. நெய்தல் |
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, |
||
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, |
||
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; |
||
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று, |
||
5 |
அன்னை கூறினள், புன்னையது நலனே- |
|
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; |
||
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, |
||
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் |
||
துறை கெழு கொண்க!-நீ நல்கின், |
||
10 |
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. | உரை |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.
|
175. நெய்தல் |
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் |
||
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, |
||
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய |
||
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் |
||
5 |
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை |
|
தான் அறிந்தன்றோ இலளே; பானாள் |
||
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி, |
||
சுடுவான் போல நோக்கும், |
||
அடு பால் அன்ன என் பசலை மெய்யே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
|
178. நெய்தல் |
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன |
||
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை |
||
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை |
||
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, |
||
5 |
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
|
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் |
||
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி |
||
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; |
||
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, |
||
10 |
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
|
183. நெய்தல் |
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, |
||
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, |
||
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, |
||
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, |
||
5 |
உமணர் போகலும் இன்னாதாகும்- |
|
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு |
||
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் |
||
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; |
||
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த |
||
10 |
வறு நீர் நெய்தல் போல, |
|
வாழாள் ஆதல் சூழாதோயே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
|
187. நெய்தல் |
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, |
||
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய, |
||
பல் பூங் கானலும் அல்கின்றன்றே; |
||
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, |
||
5 |
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
|
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு |
||
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட |
||
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், |
||
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு |
||
10 |
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? | உரை |
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்
|
191. நெய்தல் |
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் |
||
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த |
||
வண்டற் பாவை வன முலை முற்றத்து, |
||
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் |
||
5 |
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
|
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி, |
||
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் |
||
என் நோக்கினளே அன்னை; நாளை |
||
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், |
||
10 |
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
|
நறும் பூங் கானல் வந்து, அவர் |
||
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்
|
195. நெய்தல் |
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
||
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி, |
||
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
||
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
||
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
||
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
||
நீர் அலைத் தோற்றம் போல, |
||
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. | உரை | |
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|
196. நெய்தல் |
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை, |
||
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின், |
||
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்! |
||
சால்பும் செம்மையும் உடையை ஆதலின், |
||
5 |
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், |
|
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்! |
||
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய், |
||
சிறுகுபு சிறுகுபு செரீஇ, |
||
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே? | உரை | |
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
199. நெய்தல் |
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
||
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
||
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
||
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
||
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
||
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
||
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
||
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
||
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! | உரை | |
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|
203. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு |
||
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங் |
||
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை |
||
5 |
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, |
|
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் |
||
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை |
||
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, |
||
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் |
||
10 |
செய்த தன் தப்பல் அன்றியும், |
|
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்
|
207. நெய்தல் |
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை |
||
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
||
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, |
||
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; |
||
5 |
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
|
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், |
||
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
||
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் |
||
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், |
||
10 |
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
|
திரை எழு பௌவம் முன்னிய |
||
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. | உரை | |
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
|
211. நெய்தல் |
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல் |
||
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், |
||
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த |
||
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய |
||
5 |
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, |
|
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் |
||
துறு கடற் தலைய தோடு பொதி தாழை |
||
வண்டு படு வான் போது வெரூஉம் |
||
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? | உரை | |
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்
|
215. நெய்தல் |
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி, |
||
பகல் கெழு செல்வன் குடமலை மறைய, |
||
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை, |
||
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர, |
||
5 |
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் |
|
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப; |
||
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து, |
||
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு |
||
தங்கின் எவனோதெய்ய? செங்கால் |
||
10 |
கொடு முடி அவ் வலை பரியப் போகிய |
|
கோட் சுறாக் குறித்த முன்பொடு |
||
வேட்டம் வாயாது எமர் வாரலரே. | உரை | |
பகற் குறி வந்து மீள்வானை 'அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.-மதுரைச் சுள்ளம் போதனார்
|
218. நெய்தல் |
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; |
||
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; |
||
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் |
||
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; |
||
5 |
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் |
|
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய |
||
பராரை வேம்பின் படு சினை இருந்த |
||
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; |
||
ஆனா நோய் அட வருந்தி, இன்னும் |
||
10 |
தமியேன் கேட்குவென் கொல்லோ, |
|
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? | உரை | |
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்
|
219. நெய்தல் |
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் |
||
பழ நலம் இழந்து பசலை பாய, |
||
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம் |
||
புலவேன் வாழி-தோழி!-சிறு கால் |
||
5 |
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் |
|
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் |
||
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் |
||
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் |
||
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- |
||
10 |
தானே யானே புணர்ந்தமாறே. | உரை |
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்
|
223. நெய்தல் |
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின் |
||
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி, |
||
பகலும் வருதி, பல் பூங் கானல்; |
||
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள் |
||
5 |
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் |
|
எல்லி வம்மோ!-மெல்லம் புலம்ப! |
||
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் |
||
துறையினும் துஞ்சாக் கண்ணர் |
||
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே. | உரை | |
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.-உலோச்சனார்
|
227. நெய்தல் |
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த |
||
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே; |
||
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த |
||
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ! |
||
5 |
படு மணி யானைப் பசும்பூட் சோழர் |
|
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், |
||
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத் |
||
தேர் வழங்கு தெருவின் அன்ன, |
||
கௌவை ஆகின்றது-ஐய!-நின் அருளே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.-தேவனார்
|
231. நெய்தல் |
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் |
||
கைதொழும் மரபின் எழு மீன் போல, |
||
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, |
||
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் |
||
5 |
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும், |
|
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, |
||
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் |
||
கானல்அம் கொண்கன் தந்த |
||
காதல் நம்மொடு நீங்காமாறே. | உரை | |
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்
|
235. நெய்தல் |
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், |
||
அரவு வாள் வாய முள் இலைத் தாழை |
||
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் |
||
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் |
||
5 |
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
|
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, |
||
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!- |
||
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, |
||
படு மணிக் கலி மாக் கடைஇ, |
||
10 |
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. | உரை |
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
|
239. நெய்தல் |
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
||
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
||
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
||
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
||
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
||
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
||
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
||
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை |
||
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
||
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|
245. நெய்தல் |
நகையாகின்றே-தோழி!-'தகைய |
||
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை |
||
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, |
||
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, |
||
5 |
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
|
தெளி தீம் கிளவி! யாரையோ, என் |
||
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என, |
||
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, |
||
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் |
||
10 |
தான் அணங்குற்றமை கூறி, கானல் |
|
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, |
||
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்
|
249. நெய்தல் |
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை |
||
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், |
||
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் |
||
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, |
||
5 |
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
|
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, |
||
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் |
||
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், |
||
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, |
||
10 |
அம்பல் மூதூர் அலர் எழ, |
|
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? | உரை | |
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்
|
254. நெய்தல் |
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
||
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
||
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
||
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
||
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
||
அயினி மா இன்று அருந்த, நீலக் |
||
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
||
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
||
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
வானம் வேண்டா உழவின் எம் |
||
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே | உரை | |
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|
258. நெய்தல் |
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ |
||
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே- |
||
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் |
||
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார், |
||
5 |
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
|
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, |
||
அகல் அங்காடி அசை நிழல் குவித்த |
||
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை |
||
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் |
10 |
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் |
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்
|
263. நெய்தல் |
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின் |
|
இறை வரை நில்லா வளையும், மறையாது |
|
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு |
|
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு, |
|
5 |
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, |
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு, |
|
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் |
|
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக் |
|
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு, |
|
10 |
|
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.-இளவெயினனார்
|
267. நெய்தல் |
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண |
||
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, |
||
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் |
||
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் |
||
5 |
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
|
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், |
||
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, |
||
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; |
||
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, |
||
10 |
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
|
'இவை மகன்' என்னா அளவை, |
||
வய மான் தோன்றல் வந்து நின்றனனே. | உரை | |
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்
|
270. நெய்தல் |
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத் |
||
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து |
||
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, |
||
உருள் பொறி போல எம் முனை வருதல், |
||
5 |
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் |
|
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!- |
||
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை |
||
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் |
||
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் |
||
10 |
கூந்தல் முரற்சியின் கொடிதே; |
|
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. | உரை | |
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்
|
272. நெய்தல் |
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், |
||
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த |
||
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, |
||
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, |
||
5 |
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் |
|
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன் |
||
நல்காமையின், நசை பழுதாக, |
||
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய் |
||
அம்பல் மூதூர் அலர்ந்து, |
||
10 |
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
|
275. நெய்தல் |
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் |
||
காணார் முதலொடு போந்தென, பூவே |
||
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் |
||
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, |
||
5 |
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் |
|
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு |
||
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, |
||
அறனிலாளன் புகழ, எற் |
||
பெறினும், வல்லேன்மன்-தோழி!-யானே. | உரை | |
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.-அம்மூவனார்
|
278. நெய்தல் |
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, |
||
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, |
||
பொன்னின் அன்ன தாது படு பல் மலர் |
||
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
||
5 |
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
|
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- |
||
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி |
||
குளம்பினும் சேயிறா ஒடுங்கின; |
||
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. | உரை | |
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்
|
283. நெய்தல் |
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற |
||
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் |
||
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!- |
||
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, |
||
5 |
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை |
|
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, |
||
ஏமுற விளங்கிய சுடரினும், |
||
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே? | உரை | |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
287. நெய்தல் |
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த; |
||
நல் எயிலுடையோர் உடையம்' என்னும் |
||
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப் |
||
5 |
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், |
|
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான், |
||
காமம் பெருமையின், வந்த ஞான்றை- |
||
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் |
||
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும், |
||
10 |
'தேர் மணித் தெள் இசைகொல்?' என, |
|
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
|
291. நெய்தல் |
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் |
||
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு |
||
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் |
||
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், |
||
5 |
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
|
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!- |
||
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, |
||
எல்லித் தரீஇய இன நிரைப் |
||
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? | உரை | |
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்
|
295. நெய்தல் |
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், |
||
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் |
||
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், |
||
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, |
||
5 |
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
|
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, |
||
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் |
||
இள நலம் இற்கடை ஒழியச் |
||
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.- ஒளவையார்
|
299. நெய்தல் |
உரு கெழு யானை உடை கோடு அன்ன, |
||
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, |
||
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது |
||
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் |
||
5 |
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: |
|
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ- |
||
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை |
||
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் |
||
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
303. நெய்தல் |
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
||
நள்ளென, |
||
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
||
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
||
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
||
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
||
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது |
||
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
||
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
||
கடு முரண் எறி சுறா வழங்கும் |
||
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. | உரை | |
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
307. நெய்தல் |
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திதலை அல்குல் நலம் பாராட்டிய |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5 |
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்: |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மா அரை மறைகம் வம்மதி-பானாள், |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மெல் இணர் நறும் பொழில் காணா |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
10 |
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. | உரை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்
|
311. நெய்தல் |
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, |
||
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: |
||
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, |
||
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், |
||
5 |
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
|
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, |
||
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
||
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே: |
||
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, |
||
10 |
இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. | உரை | |
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்
|
315. நெய்தல் |
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென, |
||
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு, |
||
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி, |
||
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர் |
||
5 |
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, |
|
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ |
||
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் |
||
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும் |
||
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் |
||
10 |
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், |
|
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர், |
||
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே. | உரை | |
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்
|
319. நெய்தல் |
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும் |
||
தாது உளர் கானல் தவ்வென்றன்றே; |
||
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், |
||
கூகைச் சேவல் குராலோடு ஏறி, |
||
5 |
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், |
|
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; |
||
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், |
||
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் |
||
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, |
||
10 |
மீன் கண் துஞ்சும் பொழுதும், |
|
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே? | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது.- வினைத்தொழில் சோகீரனார்
|
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
325. பாலை |
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை |
||
இரை தேர் வேட்கையின் இரவில் போகி, |
||
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த |
||
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென |
||
5 |
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், |
|
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று-இவள் |
||
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, |
||
வீங்கு நீர் வாரக் கண்டும், |
||
தகுமோ?-பெரும!-தவிர்க நும் செலவே. | உரை | |
தோழி செலவு அழுங்குவித்தது.-மதுரைக் காருலவியங் கூத்தனார்
|
327. நெய்தல் |
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், |
||
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் |
||
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!- |
||
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர் |
||
5 |
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, |
|
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய |
||
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ் |
||
புன்னை ஓங்கிய கானற் |
||
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்
|
331. நெய்தல் |
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் |
||
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, |
||
கானல் இட்ட காவற் குப்பை, |
||
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி, |
||
5 |
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, |
|
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என |
||
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் |
||
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப! |
||
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; |
||
10 |
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் |
|
பிறர் பிறர் அறிதல் யாவது- |
||
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்
|
335. நெய்தல் |
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் |
||
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; |
||
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் |
||
பல் பூங் கானல் முள் இலைத் தாழை |
||
5 |
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
|
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு |
||
மை இரும் பனைமிசைப் பைதல உயவும் |
||
அன்றிலும் என்புற நரலும்; அன்றி, |
||
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் |
||
10 |
யாமம் உய்யாமை நின்றன்று; |
|
காமம் பெரிதே; களைஞரோ இலரே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
|
338. நெய்தல் |
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; |
||
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் |
||
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; |
||
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; |
||
5 |
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள |
||
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, |
||
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய |
||
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, |
||
10 |
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
|
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் |
||
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? | உரை | |
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
342. நெய்தல் |
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு |
||
மதில் என மதித்து வெண் தேர் ஏறி, |
||
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின் |
||
சேரி சேரா வருவோர்க்கு, என்றும் |
||
5 |
அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என, |
|
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்: |
||
யானே-எல்வளை!-யாத்த கானல் |
||
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த |
||
சென்னிச் சேவடி சேர்த்தின், |
||
10 |
'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே. | உரை |
குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொல் கேளாது விடலின், இறப்ப ஆற்றான் ஆயினான் என உணர்ந்து, ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது; தலைமக னுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்றாது தன்னுள்ளே ெ
|
345. நெய்தல் |
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் |
||
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, |
||
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், |
||
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, |
||
5 |
வெளிய விரியும் துறைவ! என்றும், |
|
அளிய பெரிய கேண்மை நும் போல், |
||
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் |
||
தேறா நெஞ்சம் கையறுபு வாட, |
||
நீடின்று விரும்பார் ஆயின், |
||
10 |
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! | உரை |
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்
|
348. நெய்தல் |
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, |
||
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே; |
||
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி, |
||
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; |
||
5 |
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் |
|
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே; |
||
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு |
||
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே: |
||
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? |
||
10 |
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? | உரை |
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.-வெள்ளி வீதியார்
|
349. நெய்தல் |
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், |
||
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், |
||
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், |
||
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு |
||
5 |
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப்
||
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, |
||
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத |
||
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, |
||
பின்னிலை முனியா நம்வயின், |
||
10 |
என் என நினையும்கொல், பரதவர் மகளே? | உரை |
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்
|
354. நெய்தல் |
தான் அது பொறுத்தல் யாவது-கானல் |
||
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை |
||
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த |
||
கானல் நண்ணிய வார் மணல் முன்றில், |
||
5 |
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை |
|
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த |
||
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், |
||
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு |
||
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் |
||
10 |
அளம் போகு ஆகுலம் கடுப்ப, |
|
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே? | உரை | |
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
358. நெய்தல் |
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
||
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
||
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
||
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
||
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
||
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
||
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
||
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
||
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
||
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. | உரை | |
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|
363. நெய்தல் |
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் |
||
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என |
||
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம் |
||
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் |
||
5 |
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு |
|
வம்மோ-தோழி!-மலி நீர்ச் சேர்ப்ப- |
||
பைந் தழை சிதைய, கோதை வாட, |
||
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு |
||
சில விளங்கு எல் வளை ஞெகிழ, |
||
10 |
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. | உரை |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத
|
369. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, |
||
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, |
||
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை |
||
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை |
||
5 |
இன்றும் வருவது ஆயின், நன்றும் |
|
அறியேன் வாழி-தோழி!-அறியேன், |
||
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, |
||
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் |
||
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் |
||
10 |
சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
|
நிறை அடு காமம் நீந்துமாறே. | உரை | |
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. | உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|
375. நெய்தல் |
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர, |
||
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் |
||
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப! |
||
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த |
||
5 |
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, |
|
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல் |
||
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை |
||
எறிவன போல வரூஉம் |
||
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
|
378. நெய்தல் |
யாமமும் நெடிய கழியும்; காமமும் |
||
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல் |
||
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய, |
||
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்; |
||
5 |
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், |
|
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் |
||
அயல் இற் பெண்டிர் பசலை பாட, |
||
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல் |
||
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, |
||
10 |
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, |
|
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு |
||
நாடாது இயைந்த நண்பினது அளவே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
|
382. நெய்தல் |
கானல் மாலைக் கழி நீர் மல்க, |
||
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த, |
||
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி, |
||
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் |
||
5 |
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, |
|
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை!- |
||
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த் |
||
தண்ணம் துறைவன் நாண, |
||
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. | உரை | |
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
|
385. நெய்தல் |
எல்லை சென்றபின், மலரும் கூம்பின; |
||
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு |
||
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி |
||
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப் |
||
5 |
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், |
|
பொழுதன்றுஆதலின், தமியை வருதி: | உரை | |
எழுது எழில் மழைக்க..............
|
388. நெய்தல் |
அம்ம வாழி, தோழி!-நன்னுதற்கு |
||
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே-நோன் புரிக் |
||
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் |
||
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, |
||
5 |
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் |
|
கடல் மீன் தந்து, கானற் குவைஇ, |
||
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, |
||
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி, |
||
பெரிய மகிழும் துறைவன் எம் |
||
10 |
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? | உரை |
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;'மனையுள் வேறுபடாது ஆற்றினாய்' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
392. நெய்தல் |
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை |
||
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, |
||
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் |
||
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் |
||
5 |
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், |
|
பெண்ணை வேலி, உழை கண் சீறூர் |
||
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல; |
||
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த |
||
கானலொடு அழியுநர் போலாம்-பானாள், |
||
10 |
முனி படர் களையினும் களைப; |
|
நனி பேர் அன்பினர் காதலோரே. | உரை | |
இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
395. நெய்தல் |
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு |
||
யாரையும் அல்லை; நொதுமலாளனை; |
||
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; |
||
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் |
||
5 |
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
|
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் |
||
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த |
||
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் |
||
கடல் கெழு மாந்தை அன்ன, எம் |
||
10 |
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. | உரை |
'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.-அம்மூவனார்
|
398. நெய்தல் |
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே; |
||
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே; |
||
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் |
||
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து, |
||
5 |
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே; |
|
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன், |
||
சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர் |
||
சொல்லாள் மெல்லியல், சிலவே-நல் அகத்து |
||
யாணர் இள முலை நனைய, |
||
10 |
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. | உரை |
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.- உலோச்சனார்
|