தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • மோட்டூர்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    மோட்டூர் ஒரு பெருங்கற்கால/இரும்புக்கால ஊராகும். மோட்டூரில் மனித உருவில் அமைந்த கல், பெருங்கற்காலச் சின்னத்தின் பகுதியாகக் காணப்படுகின்றது. இது போன்ற சிறப்பு வாய்ந்த பெருங்கற்காலச் சின்னங்கள் இந்தியாவில் மிக அரிதாகவே காணப்படுகின்றன.

    அமைவிடம்

    மோட்டூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது.

    அமைப்பு

    மனித உருவில் செதுக்கப்பட்ட ஒரு கல் சுமார் 3.25 மீ உயரத்தில் ஒரு கல்வட்டத்தின் பகுதியாகக் காணப்படுகின்றது. இது ஸ்ரீ வத்ஸத்தின் அமைப்பையும் ஒத்துள்ளது.

    அகழாய்வுகள்

    இங்கு நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் ஈமப் பேழைகளும் பிற தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இந்திய அரசுத் தொல்லியல் துறையின் பி.நரசிம்மையா அவர்களால் இவ்வூர் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

    ஈமச்சின்ன வகைகள்

    இங்கு கற்பதுக்கைகள் அமைந்த கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்தச் சிறப்பான வடிவம் உள்ள கல், சமூகத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபருக்கு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் வடிவம், அளவு, அவற்றிலுள்ள பொருள்களின் வகை, எண்ணிக்கை இறந்தவரின் சமூக நிலையைக் காட்டும் குறியீடாக அமைகின்றன.

    மேற்கோள் நூல்

    Narasimhaiah, B. 1980. Neolithic and Megalithic Culturess in Tamil Nadu. Sundeep Prakashan, New Delhi.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:01:49(இந்திய நேரம்)