தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • நெடுங்கல்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    பெருங்கற்கால ஈமச்சின்னம்

    நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகின்றது. இதன் கீழே தாழி காணப்படலாம் அல்லது நினைவுச் சின்னமாக எந்தவித ஈமப்பொருட்கள் இல்லாமலும் அமைந்திருக்கும். இது ஆங்கிலத்தில் Menhir எனப்படும்.

    அமைப்பு்

    நெடுங்கல்லின் தோற்றம்

    இக் கல் சில இடங்களில் மேற்புறம் கூர்முனையுடன் காணப்படுகின்றது.

    சில இடங்களில் பல நெடுங்கற்கள் ஒரு கல் வட்டத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளன.

    காணப்படும் இடங்கள்

    இவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், மலைகள் மற்றும் பாறைகள் கிடைக்கும் இடங்களில் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல், மதுரை மாவட்டத்தில் ச.பாப்பாநாயக்கன்பட்டி உட்பட பல ஊர்களில் இவை காணப்படுகின்றன.

    இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. இது நாட்டுக் கல் என்றும் அழைக்கப்படுகின்றது. நடுகல் என்பது நெடுங்கல்லின் வளர்ச்சியடைந்த வகையாகும். நடுகல் பொதுவாக வரலாற்றுத் துவக்கக்கால, இடைக்காலப் போர் வீரர்கள் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

    மேற்கோள் நூல்

    Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:02:38(இந்திய நேரம்)