முகப்பு |
தோழி |
4. நெய்தல் |
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் |
||
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ, |
||
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, |
||
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, |
||
5 |
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின், |
||
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர் |
||
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
||
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் |
||
10 |
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் |
|
கருங் கால் வெண் குருகு வெரூஉம் |
||
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே? |
உரை | |
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்
|
5. குறிஞ்சி |
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, |
||
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, |
||
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் |
||
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப, |
||
5 |
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி |
|
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும், |
||
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல் |
||
இளையர்த் தரூஉம் வாடையொடு |
||
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே. |
உரை | |
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்
|
7. பாலை |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, |
||
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் |
||
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, |
||
5 |
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
|
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி! |
||
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை |
||
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் |
||
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்
|
10. பாலை |
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், |
||
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த |
||
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், |
||
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர! |
||
5 |
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் |
|
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர், |
||
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் |
||
பழையன் வேல் வாய்த்தன்ன நின் |
||
பிழையா நல் மொழி தேறிய இவட்கே. |
உரை | |
உடன்போக்கும் தோழி கையடுத்தது.
|
11. நெய்தல் |
பெய்யாது வைகிய கோதை போல |
||
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; |
||
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் |
||
வாரார் என்னும் புலவி உட்கொளல் |
||
5 |
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
|
புணரி பொருத பூ மணல் அடைகரை, |
||
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, |
||
வலவன் வள்பு ஆய்ந்து ஊர, |
||
நிலவு விரிந்தன்றால் கானலானே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்
|
12. பாலை |
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் |
||
பாசம் தின்ற தேய் கால் மத்தம் |
||
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் |
||
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் |
||
5 |
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
|
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், |
||
'இவை காண்தோறும் நோவர்மாதோ; |
||
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என |
||
நும்மொடு வரவு தான் அயரவும், |
||
10 |
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. |
உரை |
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்
|
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. |
உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
15. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள |
||
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! |
||
பூவின் அன்ன நலம் புதிது உண்டு, |
||
5 |
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே |
|
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி, |
||
மாசு இல் கற்பின் மடவோள் குழவி |
||
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு, |
||
சேணும் எம்மொடு வந்த |
||
10 |
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! |
உரை |
வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.-அறிவுடைநம்பி
|
18. பாலை |
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல |
||
வருவர் வாழி-தோழி!-மூவன் |
||
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், |
||
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் |
||
5 |
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
|
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் |
||
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, |
||
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் |
||
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, |
||
10 |
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. |
உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்
|
19. நெய்தல் |
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
||
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
||
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
||
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
||
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
||
செலீஇய சேறிஆயின், இவளே |
||
வருவை ஆகிய சில் நாள் |
||
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! |
உரை | |
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
23. குறிஞ்சி |
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே; |
||
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின், |
||
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள |
||
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய, |
||
5 |
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் |
|
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் |
||
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் |
||
தெண் நீர் மலரின் தொலைந்த |
||
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே! |
உரை | |
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்
|
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! |
உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
26. பாலை |
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- |
||
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை |
||
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் |
||
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, |
||
5 |
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
|
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று, |
||
பொன் பொதிந்தன்ன சுணங்கின், |
||
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. |
உரை | |
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்
|
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
28. பாலை |
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், |
||
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். |
||
அன்னை போல இனிய கூறியும், |
||
கள்வர் போலக் கொடியன்மாதோ- |
||
5 |
மணி என இழிதரும் அருவி, பொன் என |
|
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, |
||
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் |
||
ஓடு மழை கிழிக்கும் சென்னி, |
||
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! |
உரை | |
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்
|
30. மருதம் |
கண்டனென்-மகிழ்ந!-கண்டு எவன்செய்கோ?- |
||
பாணன் கையது பண்புடைச் சீறியாழ் |
||
யாணர் வண்டின் இம்மென இமிரும், |
||
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் |
||
5 |
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் |
|
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி- |
||
கால் ஏமுற்ற பைதரு காலை, |
||
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு, |
||
பலர் கொள் பலகை போல- |
||
10 |
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. |
உரை |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.-கொற்றனார்
|
32. குறிஞ்சி |
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன், |
||
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி |
||
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும் |
||
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்; |
||
5 |
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, |
|
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு |
||
அரிய-வாழி, தோழி!-பெரியோர் |
||
நாடி நட்பின் அல்லது, |
||
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே. |
உரை | |
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்
|
33. பாலை |
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை, |
||
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை, |
||
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து, |
||
கல்லுடைப் படுவில் கலுழி தந்து, |
||
5 |
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், |
|
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர் |
||
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை, |
||
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் |
||
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என |
||
10 |
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, |
|
நல் அக வன முலைக் கரை சேர்பு |
||
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே. |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.- இளவேட்டனார்
|
34. குறிஞ்சி |
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த |
||
பறியாக் குவளை மலரொடு காந்தள் |
||
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, |
||
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் |
||
5 |
அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
|
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் |
||
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, |
||
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, |
||
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! |
||
10 |
கடவுள் ஆயினும் ஆக, |
|
மடவை மன்ற, வாழிய முருகே! |
உரை | |
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி
|
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! |
உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
36. குறிஞ்சி |
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, |
||
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, |
||
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் |
||
கல்லக வெற்பன் சொல்லின் தேறி, |
||
5 |
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, |
||
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, |
||
ஆனாக் கௌவைத்துஆக, |
||
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? |
உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்
|
37. பாலை |
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
||
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
||
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
||
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
||
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
||
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
||
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
||
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
||
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. |
உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
41. பாலை |
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த |
||
வெண் புறக் களரி விடு நீறு ஆடி, |
||
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் |
||
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் |
||
5 |
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- |
|
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, |
||
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட |
||
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி, |
||
சிறு நுண் பல் வியர் பொறித்த |
||
10 |
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. |
உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்
|
43. பாலை |
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் |
||
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், |
||
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
||
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு |
||
5 |
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
|
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே |
||
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, |
||
அஞ்சல் என்ற இறை கைவிட்டென, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், |
||
10 |
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
|
ஓர் எயின் மன்னன் போல, |
||
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்
|
45. நெய்தல் |
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, |
|
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு |
|
மீன் எறி பரதவர் மகளே; நீயே, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் |
|
5 |
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: |
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, |
|
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? |
|
புலவு நாறுதும்; செல நின்றீமோ! |
|
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை |
|
10 |
நும்மொடு புரைவதோ அன்றே; |
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! |
align="right">
உரை
|
குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.
|
46. பாலை |
வைகல்தோறும் இன்பமும் இளமையும் |
||
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; |
||
காணீர் என்றலோ அரிதே; அது நனி |
||
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி |
||
5 |
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் |
|
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, |
||
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர, |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, |
||
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து, |
||
10 |
நன் வாய் அல்லா வாழ்க்கை |
|
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே. |
உரை | |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.
|
47. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி |
||
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, |
||
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் |
||
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென |
||
5 |
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
|
கானக நாடற்கு, 'இது என' யான் அது |
||
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து, |
||
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, |
||
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, |
||
10 |
அன்னை அயரும் முருகு நின் |
|
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்
|
48. பாலை |
அன்றை அனைய ஆகி, இன்றும், எம் |
||
கண் உளபோலச் சுழலும்மாதோ- |
||
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ |
||
வைகுறு மீனின் நினையத் தோன்றி, |
||
5 |
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, |
|
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் |
||
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது |
||
அமரிடை உறுதர, நீக்கி, நீர் |
||
எமரிடை உறுதர ஒளித்த காடே. |
உரை | |
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
49. நெய்தல் |
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
||
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
||
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
||
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
||
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் |
||
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
||
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
||
முன்றில் தாழையொடு கமழும் |
||
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? |
உரை |
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|
50. மருதம் |
அறியாமையின், அன்னை! அஞ்சி, |
||
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் |
||
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல, |
||
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை |
||
5 |
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், |
|
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என, |
||
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர், |
||
'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே- |
||
செறுநரும் விழையும் செம்மலோன் என, |
||
10 |
நறு நுதல் அரிவை! போற்றேன், |
|
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே. |
உரை | |
தோழி பாணற்கு வாயில்மறுத்தது.-மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
53. குறிஞ்சி |
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது |
||
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ? |
||
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?- |
||
'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன், |
||
5 |
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் |
|
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று |
||
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் |
||
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்; |
||
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி, |
||
10 |
முனியாது ஆடப் பெறின், இவள் |
|
பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே! |
உரை | |
வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்
|
55. குறிஞ்சி |
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை |
||
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி, |
||
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள் |
||
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு |
||
5 |
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், |
|
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும் |
||
இனையையோ?' என வினவினள், யாயே; |
||
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து, |
||
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!- |
||
10 |
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த |
|
சாந்த ஞெகிழி காட்டி- |
||
ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே. |
உரை | |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி
|
57. குறிஞ்சி |
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
||
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
||
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
||
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
||
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
||
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
||
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
||
கொய் பதம் குறுகும்காலை, எம் |
||
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! |
உரை |
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|
58. நெய்தல் |
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் |
||
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் |
||
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, |
||
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- |
||
5 |
வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
|
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் |
||
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, |
||
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, |
||
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை |
||
10 |
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் |
|
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! |
உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்
|
60. மருதம் |
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் |
||
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! |
||
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், |
||
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு |
||
5 |
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு |
|
கவர் படு கையை கழும மாந்தி, |
||
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின் |
||
நடுநரொடு சேறிஆயின், அவண் |
||
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் |
||
10 |
மா இருங் கூந்தல் மடந்தை |
|
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. |
உரை | |
சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது.-தூங்கலோரியார்
|
61. குறிஞ்சி |
கேளாய், எல்ல தோழி! அல்கல் |
||
வேணவா நலிய, வெய்ய உயிரா, |
||
ஏ மான் பிணையின் வருந்தினெனாக, |
||
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, |
||
5 |
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், |
|
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், |
||
'படு மழை பொழிந்த பாறை மருங்கில் |
||
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், |
||
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் |
||
10 |
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. |
உரை |
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்
|
63. நெய்தல் |
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
||
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
||
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
||
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
||
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
||
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
||
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
||
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
||
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை | |
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|
65. குறிஞ்சி |
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- |
||
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் |
||
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, |
||
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, |
||
5 |
புலியொடு பொருத புண் கூர் யானை |
|
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
||
விற் சுழிப்பட்ட நாமப் பூசல் |
||
உருமிடைக் கடி இடி கரையும் |
||
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே. |
உரை | |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்
|
67. நெய்தல் |
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் |
||
மால் வரை மறைய, துறை புலம்பின்றே; |
||
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு |
||
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய |
||
5 |
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
|
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் |
||
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, |
||
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, |
||
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், |
||
10 |
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர் |
|
முழவு இசைப் புணரி எழுதரும் |
||
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? |
உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்
|
68. குறிஞ்சி |
'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, |
||
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் |
||
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என- |
||
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி, |
||
5 |
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், |
|
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே; |
||
'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து, |
||
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள், |
||
கொடி நுடங்கு இலங்கின மின்னி, |
||
10 |
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. |
உரை |
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்
|
71. பாலை |
மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை |
||
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப் |
||
பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என, |
||
விடுநள் ஆதலும் உரியள்; விடினே, |
||
5 |
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, |
|
பிரிதல் வல்லிரோ-ஐய! செல்வர் |
||
வகை அமர் நல் இல் அக இறை உறையும் |
||
வண்ணப் புறவின் செங் காற் சேவல் |
||
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் |
||
10 |
நும் இலள் புலம்பக் கேட்டொறும் |
|
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே? |
உரை | |
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.-வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
72. நெய்தல் |
'பேணுப பேணார் பெரியோர்' என்பது |
||
நாணு தக்கன்று அது காணுங்காலை; |
||
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் |
||
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது |
||
5 |
அழிதக்கன்றால் தானே; கொண்கன், |
|
'யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற் |
||
பிரிதல் சூழான்மன்னே; இனியே |
||
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது, |
||
அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால், |
||
10 |
'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா |
|
அஞ்சுவல்-தோழி!-என் நெஞ்சத்தானே! |
உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளம்போதியார்
|
78. நெய்தல் |
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி |
||
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, |
||
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், |
||
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், |
||
5 |
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
|
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; |
||
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி |
||
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், |
||
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா |
||
10 |
வலவன் கோல் உற அறியா, |
|
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! |
உரை | |
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்
|
83. குறிஞ்சி |
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய |
||
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய, |
||
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர், |
||
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! |
||
5 |
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், |
|
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; |
||
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் |
||
துஞ்சாது அலமரு பொழுதின், |
||
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. |
உரை | |
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்
|
85. குறிஞ்சி |
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
||
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
||
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
||
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
||
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
||
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
||
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! |
உரை | |
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
86. பாலை |
அறவர், வாழி-தோழி! மறவர் |
||
வேல் என விரிந்த கதுப்பின் தோல |
||
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் |
||
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் |
||
5 |
கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
|
சுரிதக உருவின ஆகிப் பெரிய |
||
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை |
||
நல் தளிர் நயவர நுடங்கும் |
||
முற்றா வேனில் முன்னி வந்தோரே! |
உரை | |
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்
|
88. குறிஞ்சி |
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை? |
||
வருந்தல்; வாழி!-தோழி!-யாம் சென்று |
||
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக் |
||
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு |
||
5 |
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- |
|
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி, |
||
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது, |
||
கண்ணீர் அருவியாக |
||
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்லந்துவனார்
|
89. முல்லை |
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர், |
||
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, |
||
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை |
||
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள், |
||
5 |
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் |
|
அகல் இலை அகல வீசி, அகலாது |
||
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, |
||
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு, |
||
இன்னும் வருமே-தோழி!-வாரா |
||
10 |
வன்கணாளரோடு இயைந்த |
|
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே! |
உரை | |
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி
|
90. மருதம் |
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், |
||
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா, |
||
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த |
||
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு |
||
5 |
வாடா மாலை துயல்வர, ஓடி, |
|
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் |
||
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், |
||
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, |
||
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் |
||
10 |
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா |
|
நயன் இல் மாக்களொடு கெழீஇ, |
||
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! |
உரை | |
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.-அஞ்சில் அஞ்சியார்
|
91. நெய்தல் |
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப் |
||
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் |
||
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு |
||
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை |
||
5 |
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
|
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, |
||
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் |
||
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, |
||
10 |
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
|
கடு மாப் பூண்ட நெடுந் தேர் |
||
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? |
உரை | |
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்
|
92. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
||
வேனில் ஓதி பாடு நடை வழலை |
||
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
||
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
||
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
||
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
||
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
||
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! |
உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|
93. குறிஞ்சி |
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர, |
||
வரை வெள் அருவி மாலையின் இழிதர, |
||
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும் |
||
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப் |
||
5 |
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! |
|
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி! |
||
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள், |
||
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள் |
||
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய |
||
10 |
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் |
|
மயிர்க் கண் முரசினோரும் முன் |
||
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே. |
உரை | |
வரைவு கடாயது.-மலையனார்
|
98. குறிஞ்சி |
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் |
||
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி |
||
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி |
||
நூழை நுழையும் பொழுதில், தாழாது |
||
5 |
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
|
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் |
||
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! |
||
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் |
||
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, |
||
10 |
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
|
வைகலும் பொருந்தல் ஒல்லாக் |
||
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி
|
99. முல்லை |
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
||
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
||
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
||
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
||
5 |
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
||
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
||
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
||
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. |
உரை |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|
108. குறிஞ்சி |
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
||
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
||
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
||
கணையர், கிணையர், கை புனை கவணர், |
||
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
||
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
||
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
||
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! |
உரை | |
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|
111. நெய்தல் |
அத்த இருப்பைப் பூவின் அன்ன |
||
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், |
||
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், |
||
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் |
||
5 |
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
|
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, |
||
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, |
||
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் |
||
பெருங் கழிப் பாக்கம் கல்லென |
||
10 |
வருமே-தோழி!-கொண்கன் தேரே. |
உரை |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
|
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? |
உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|
114. குறிஞ்சி |
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும், |
||
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும், |
||
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம் |
||
வைகிக் கேட்டுப் பையாந்திசினே; |
||
5 |
அளிதோ தானே-தோழி!-அல்கல் |
|
வந்தோன்மன்ற குன்ற நாடன்; |
||
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை |
||
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்; |
||
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு |
||
10 |
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, |
|
மையல் மடப் பிடி இனைய, |
||
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே. |
உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது.- தொல்கபிலர்
|
115. முல்லை |
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
||
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
||
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் |
||
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, |
||
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
||
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
||
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
||
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
||
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
122. குறிஞ்சி |
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
||
கருங் கால் செந்தினை கடியுமுண்டென; |
||
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி |
||
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; |
||
5 |
'நரை உரும் உரறும் நாம நள் இருள் |
|
வரையக நாடன் வரூஉம் என்பது |
||
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என |
||
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, |
||
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு |
||
10 |
நீயே சூழ்தல் வேண்டும்- |
|
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே. |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்
|
123. நெய்தல் |
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
||
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
||
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
||
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
||
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
||
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
||
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
||
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
||
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
||
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. |
உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
124. நெய்தல் |
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
||
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
||
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
||
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
||
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
||
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் |
||
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
||
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
125.குறிஞ்சி |
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
||
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, |
||
நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
||
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
||
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
||
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
||
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
||
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
||
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
||
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. |
உரை | |
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|
127. நெய்தல் |
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை |
||
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, |
||
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த |
||
5 |
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
|
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய |
||
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், |
||
'மெல்லம் புலம்பன் அன்றியும், |
||
செல்வாம்' என்னும், 'கானலானே'. |
உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்
|
129. குறிஞ்சி |
பெரு நகை கேளாய், தோழி! காதலர் |
||
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் |
||
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் |
||
செல்ப என்ப, தாமே; சென்று, |
||
5 |
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை |
|
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை- |
||
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப, |
||
படு மழை உருமின் உரற்று குரல் |
||
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே. |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்
|
131. நெய்தல் |
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், |
||
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
||
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப! |
||
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் |
||
5 |
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
|
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், |
||
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், |
||
கள் கமழ், பொறையாறு அன்ன என் |
||
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? |
உரை | |
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்
|
132. நெய்தல் |
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; |
||
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் |
||
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி |
||
போர் அமை கதவப் புரை தொறும் தூவ, |
||
5 |
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் |
|
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை |
||
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை, |
||
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும் |
||
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி |
||
10 |
ஒன்று எறி பாணியின் இரட்டும்; |
|
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? |
உரை | |
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
|
134. குறிஞ்சி |
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது |
||
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர் |
||
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் |
||
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி! |
||
5 |
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, |
|
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர், |
||
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! |
||
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது |
||
10 |
ஒல்லேன் போல உரையாடுவலே! |
உரை |
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
|
135. நெய்தல் |
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை |
||
மா அரை புதைத்த மணல் மலி முன்றில், |
||
வரையாத் தாரம் வரு விருந்து அயரும் |
||
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் |
||
5 |
இனிது மன்றம்ம தானே-பனி படு |
|
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, |
||
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், |
||
வால் உளைப் பொலிந்த, புரவித் |
||
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. |
உரை | |
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
|
136. குறிஞ்சி |
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும், |
||
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது, |
||
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, |
||
என்னை-வாழிய, பலவே!-பன்னிய |
||
5 |
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய |
|
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல, |
||
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து, |
||
தோள் பழி மறைக்கும் உதவிப் |
||
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே. |
உரை | |
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்
|
138. நெய்தல் |
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை |
||
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, |
||
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
||
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் |
||
5 |
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
|
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் |
||
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, |
||
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை |
||
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் |
||
10 |
முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
|
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. |
உரை | |
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்
|
145. நெய்தல் |
இருங் கழி பொருத ஈர வெண் மணல் |
||
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி |
||
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் |
||
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை |
||
5 |
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
|
புணர்ந்தனன் போல உணரக் கூறி, |
||
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை; |
||
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் |
||
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, |
||
10 |
நள்ளென் கங்குலும், வருமரோ- |
|
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே! |
உரை | |
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்
|
147. குறிஞ்சி |
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்! |
||
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் |
||
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று |
||
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி, |
||
5 |
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, |
|
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை |
||
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; |
||
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, |
||
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை |
||
10 |
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, |
|
தலை இறைஞ்சினளே அன்னை; |
||
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? |
உரை | |
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்
|
148. பாலை |
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், |
||
'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம் |
||
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, |
||
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, |
||
5 |
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
|
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் |
||
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, |
||
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை |
||
10 |
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
|
அருஞ் சுரம் இறப்ப என்ப; |
||
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே! |
உரை | |
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்
|
149. நெய்தல் |
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, |
||
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, |
||
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, |
||
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, |
||
5 |
அலந்தனென் வாழி-தோழி!-கானல் |
|
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் |
||
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, |
||
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு |
||
செலவு அயர்ந்திசினால், யானே; |
||
10 |
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! |
உரை |
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! |
உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
154. குறிஞ்சி |
கானமும் கம்மென்றன்றே; வானமும் |
||
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி, |
||
பல் குரல் எழிலி பாடு ஓவாதே; |
||
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த |
||
5 |
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை |
|
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது |
||
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!- |
||
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் |
||
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் |
||
10 |
வாரார் ஆயினோ நன்றே; சாரல் |
|
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும், |
||
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே? |
உரை | |
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்
|
158. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! நம்வயின், |
||
யானோ காணேன்-அதுதான் கரந்தே, |
||
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே; |
||
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே- |
||
5 |
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி |
|
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி, |
||
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் |
||
வேங்கை முதலொடு துடைக்கும் |
||
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே. |
உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
159. நெய்தல் |
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் |
||
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை, |
||
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை, |
||
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி, |
||
5 |
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல |
|
வளி சீத்து வரித்த புன்னை முன்றில், |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய, |
||
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும், |
||
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து, |
||
10 |
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் |
|
சில் குடிப் பாக்கம் கல்லென |
||
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே! |
உரை | |
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்
|
163. நெய்தல் |
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்- |
||
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு |
||
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் |
||
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப, |
||
5 |
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, |
|
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி |
||
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல் |
||
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, |
||
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் |
||
10 |
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று |
|
வைகுறு வனப்பின், தோன்றும் |
||
கைதைஅம் கானல் துறைவன் மாவே! |
உரை | |
வரைவு மலிந்து சொல்லியது.
|
164. பாலை |
'உறை துறந்திருந்த புறவில், தனாது |
||
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, |
||
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் |
||
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச் |
||
5 |
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்- |
|
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் |
||
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, |
||
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, |
||
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது |
||
10 |
மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
|
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. |
உரை | |
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
|
165. குறிஞ்சி |
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது |
||
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன், |
||
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக் |
||
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து, |
||
5 |
கிளையொடு மகிழும் குன்ற நாடன் |
|
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப, |
||
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு |
||
அன்ன ஆகுக' என்னான்; |
||
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே. |
உரை | |
நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
|
167. நெய்தல் |
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
||
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
||
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
||
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
||
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
||
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
||
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
||
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
||
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. |
உரை | |
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? |
உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
170. மருதம் |
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், |
||
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், |
||
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் |
||
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; |
||
5 |
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
|
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், |
||
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது |
||
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் |
||
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? |
உரை | |
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
|
171. பாலை |
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
||
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் |
||
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி |
||
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
||
5 |
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
|
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, |
||
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க |
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |
|
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், |
||
10 |
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
|
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
|
172. நெய்தல் |
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, |
||
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, |
||
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; |
||
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று, |
||
5 |
அன்னை கூறினள், புன்னையது நலனே- |
|
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; |
||
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, |
||
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் |
||
துறை கெழு கொண்க!-நீ நல்கின், |
||
10 |
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. |
உரை |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.
|
173. குறிஞ்சி |
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், |
||
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், |
||
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, |
||
வெறி என உணர்ந்த அரிய அன்னையை, |
||
5 |
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் |
|
என்னினும் வாராது; மணியின் தோன்றும் |
||
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின், |
||
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் |
||
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- |
||
10 |
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. |
உரை |
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
|
175. நெய்தல் |
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் |
||
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, |
||
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய |
||
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் |
||
5 |
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை |
|
தான் அறிந்தன்றோ இலளே; பானாள் |
||
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி, |
||
சுடுவான் போல நோக்கும், |
||
அடு பால் அன்ன என் பசலை மெய்யே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
|
178. நெய்தல் |
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன |
||
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை |
||
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை |
||
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது, |
||
5 |
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் |
|
தண்ணம் துறைவன் தேரே கண்ணின் |
||
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி |
||
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்; |
||
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப, |
||
10 |
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
உரை |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
|
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. |
உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. |
உரை | |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
182. குறிஞ்சி |
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; |
||
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், |
||
பாவை அன்ன நிற் புறங்காக்கும் |
||
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; |
||
5 |
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
|
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, |
||
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!- |
||
கீழும் மேலும் காப்போர் நீத்த |
||
வறுந் தலைப் பெருங் களிறு போல, |
||
10 |
தமியன் வந்தோன், பனியலை நீயே! |
உரை |
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
|
183. நெய்தல் |
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, |
||
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, |
||
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, |
||
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, |
||
5 |
உமணர் போகலும் இன்னாதாகும்- |
|
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு |
||
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் |
||
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; |
||
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த |
||
10 |
வறு நீர் நெய்தல் போல, |
|
வாழாள் ஆதல் சூழாதோயே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
|
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. |
உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
189. பாலை |
தம் அலது இல்லா நம் நயந்து அருளி |
||
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், |
||
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் |
||
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் |
||
5 |
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
|
எவ் வினை செய்வர்கொல் தாமே?-வெவ் வினைக் |
||
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய |
||
கானப் புறவின் சேவல் வாய் நூல் |
||
சிலம்பி அம் சினை வெரூஉம், |
||
10 |
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
|
191. நெய்தல் |
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் |
||
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த |
||
வண்டற் பாவை வன முலை முற்றத்து, |
||
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் |
||
5 |
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
|
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி, |
||
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் |
||
என் நோக்கினளே அன்னை; நாளை |
||
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், |
||
10 |
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
|
நறும் பூங் கானல் வந்து, அவர் |
||
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. |
உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்
|
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? |
உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
195. நெய்தல் |
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
||
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
||
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
||
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
||
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
||
நீர் அலைத் தோற்றம் போல, |
||
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. |
உரை | |
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|
197. பாலை |
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே |
||
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; |
||
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! |
||
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என, |
||
5 |
ஆழல், வாழி-தோழி!-நீ; நின் |
|
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, |
||
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, |
||
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் |
||
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் |
||
10 |
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
|
எயில் ஊர் பல் தோல் போலச் |
||
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. |
உரை | |
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்
|
200. மருதம் |
கண்ணி கட்டிய கதிர அன்ன |
||
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
||
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ! |
||
5 |
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- |
|
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் |
||
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, |
||
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன் |
||
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, |
||
10 |
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் |
|
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே. |
உரை | |
தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்
|
203. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு |
||
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங் |
||
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை |
||
5 |
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, |
|
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் |
||
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை |
||
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, |
||
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் |
||
10 |
செய்த தன் தப்பல் அன்றியும், |
|
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்
|
206. குறிஞ்சி |
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி, |
||
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று, |
||
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ, |
||
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த் |
||
5 |
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என |
|
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும், |
||
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என |
||
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!- |
||
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்? |
||
10 |
கல் கெழு நாடன் கேண்மை |
|
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே! |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்
|
207. நெய்தல் |
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை |
||
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
||
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, |
||
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; |
||
5 |
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
|
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், |
||
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
||
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் |
||
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், |
||
10 |
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
|
திரை எழு பௌவம் முன்னிய |
||
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. |
உரை | |
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
|
208. பாலை |
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, |
||
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப, |
||
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, |
||
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!- |
||
5 |
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், |
|
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர் |
||
கொன்னும் நம்புங் குரையர் தாமே; |
||
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; |
||
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள் |
||
10 |
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, |
|
இன் துணைப் பிரிந்தோர் நாடித் |
||
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே? |
உரை | |
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்
|
210. மருதம் |
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் |
||
மறு கால் உழுத ஈரச் செறுவின், |
||
வித்தொடு சென்ற வட்டி பற்பல |
||
மீனொடு பெயரும் யாணர் ஊர! |
||
5 |
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் |
|
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே; |
||
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் |
||
புன்கண் அஞ்சும் பண்பின் |
||
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே. |
உரை | |
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்
|
211. நெய்தல் |
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல் |
||
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், |
||
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த |
||
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய |
||
5 |
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, |
|
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் |
||
துறு கடற் தலைய தோடு பொதி தாழை |
||
வண்டு படு வான் போது வெரூஉம் |
||
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? |
உரை | |
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்
|
212. பாலை |
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, |
||
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் |
||
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் |
||
5 |
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் |
|
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின் |
||
வந்தனர்; வாழி-தோழி!-கையதை |
||
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன் |
||
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும், |
||
10 |
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. |
உரை |
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது.-குடவாயிற் கீரத்தனார்
|
215. நெய்தல் |
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி, |
||
பகல் கெழு செல்வன் குடமலை மறைய, |
||
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை, |
||
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர, |
||
5 |
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் |
|
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப; |
||
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து, |
||
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு |
||
தங்கின் எவனோதெய்ய? செங்கால் |
||
10 |
கொடு முடி அவ் வலை பரியப் போகிய |
|
கோட் சுறாக் குறித்த முன்பொடு |
||
வேட்டம் வாயாது எமர் வாரலரே. |
உரை | |
பகற் குறி வந்து மீள்வானை 'அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.-மதுரைச் சுள்ளம் போதனார்
|
220. குறிஞ்சி |
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ, |
||
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி, |
||
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன் |
||
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள், |
||
5 |
பெரிதும் சான்றோர்மன்ற-விசிபிணி |
|
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண், |
||
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர் |
||
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக் |
||
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு |
||
10 |
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! |
உரை |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.-குண்டுகட்பாலியாதனார்
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
||
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? |
உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
223. நெய்தல் |
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின் |
||
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி, |
||
பகலும் வருதி, பல் பூங் கானல்; |
||
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள் |
||
5 |
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் |
|
எல்லி வம்மோ!-மெல்லம் புலம்ப! |
||
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் |
||
துறையினும் துஞ்சாக் கண்ணர் |
||
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே. |
உரை | |
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.-உலோச்சனார்
|
227. நெய்தல் |
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த |
||
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே; |
||
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த |
||
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ! |
||
5 |
படு மணி யானைப் பசும்பூட் சோழர் |
|
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், |
||
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத் |
||
தேர் வழங்கு தெருவின் அன்ன, |
||
கௌவை ஆகின்றது-ஐய!-நின் அருளே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.-தேவனார்
|
228. குறிஞ்சி |
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு |
||
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர, |
||
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள், |
||
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து |
||
5 |
அருளான்கொல்லோ தானே-கானவன் |
|
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம், |
||
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ, |
||
அழுந்துபட விடரகத்து இயம்பும் |
||
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே? |
உரை | |
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்
|
229. பாலை |
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து, |
||
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே; |
||
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர் |
||
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே; |
||
5 |
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, |
|
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து, |
||
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி, |
||
உழையீராகவும் பனிப்போள் தமியே |
||
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென, |
||
10 |
ஆடிய இள மழைப் பின்றை, |
|
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே? |
உரை | |
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
|
230. மருதம் |
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை, |
||
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை, |
||
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும் |
||
5 |
கயற்கணம் கலித்த பொய்கை ஊர! |
|
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்; |
||
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க, |
||
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென |
||
மலி புனல் பரத்தந்தாஅங்கு, |
||
10 |
இனிதே தெய்ய, நின் காணுங்காலே. |
உரை |
தோழி வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
231. நெய்தல் |
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் |
||
கைதொழும் மரபின் எழு மீன் போல, |
||
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, |
||
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் |
||
5 |
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும், |
|
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, |
||
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் |
||
கானல்அம் கொண்கன் தந்த |
||
காதல் நம்மொடு நீங்காமாறே. |
உரை | |
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. |
உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
233. குறிஞ்சி |
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று |
||
மட மா மந்தி மாணா வன் பறழ், |
||
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும் |
||
பெருங் கல் நாடனை அருளினை ஆயின், |
||
5 |
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று |
|
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற |
||
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி, |
||
ஆன்றோர் செல் நெறி வழாஅச் |
||
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்
|
235. நெய்தல் |
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், |
||
அரவு வாள் வாய முள் இலைத் தாழை |
||
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் |
||
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் |
||
5 |
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
|
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, |
||
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!- |
||
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, |
||
படு மணிக் கலி மாக் கடைஇ, |
||
10 |
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. |
உரை |
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
|
237. பாலை |
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், |
||
பனி மலி கண்ணும் பண்டு போலா; |
||
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் |
||
நீத்து நீடினர் என்னும் புலவி |
||
5 |
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?-மடந்தை!- |
|
உவக்காண் தோன்றுவ, ஓங்கி-வியப்புடை |
||
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் |
||
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, |
||
உலகம் உவப்ப, ஓது அரும் |
||
10 |
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! |
உரை |
தோழி உரை மாறுபட்டது.-காரிக்கண்ணனார்
|
239. நெய்தல் |
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
||
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
||
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
||
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
||
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
||
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
||
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
||
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை |
||
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
||
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? |
உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|
245. நெய்தல் |
நகையாகின்றே-தோழி!-'தகைய |
||
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை |
||
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, |
||
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, |
||
5 |
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
|
தெளி தீம் கிளவி! யாரையோ, என் |
||
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என, |
||
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, |
||
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் |
||
10 |
தான் அணங்குற்றமை கூறி, கானல் |
|
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, |
||
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே |
உரை | |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்
|
246. பாலை |
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
||
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
||
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
||
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
||
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, | ||
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
||
வருவர் வாழி-தோழி!-புறவின் |
||
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
||
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
||
10 |
'வருதும்' என்ற பருவமோ இதுவே? |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|
247. குறிஞ்சி |
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
||
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, |
||
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, |
||
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் |
||
5 |
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
|
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், |
||
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் |
||
விருந்து இறைகூடிய பசலைக்கு |
||
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! |
உரை | |
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.-பரணர்
|
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! |
உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
251. குறிஞ்சி |
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண், |
||
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக் |
||
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் |
||
நல் மலை நாடனை நயவா, யாம், அவன் |
||
5 |
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, |
|
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என் |
||
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய, |
||
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து, |
||
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்; |
||
10 |
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, |
|
நீடினை விளைமோ! வாழிய, தினையே! |
உரை | |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்
|
252. பாலை |
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி, |
||
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், |
||
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது, |
||
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என, |
||
5 |
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த |
|
வினை இடை விலங்கல போலும்-புனை சுவர்ப் |
||
பாவை அன்ன பழிதீர் காட்சி, |
||
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
10 |
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் |
|
நல் நாப் புரையும் சீறடி, |
||
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே! |
உரை | |
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.-அம்மெய்யன் நாகனார்
|
253. குறிஞ்சி |
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், |
||
பள்ளி யானையின் வெய்ய உயிரினை, |
||
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து |
||
எனவ கேளாய், நினையினை, நீ நனி: |
||
5 |
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள், |
|
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, |
||
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, |
||
பலவு உறு குன்றம் போல, |
||
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. |
உரை | |
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
254. நெய்தல் |
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
||
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
||
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
||
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
||
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
||
அயினி மா இன்று அருந்த, நீலக் |
||
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
||
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
||
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
வானம் வேண்டா உழவின் எம் |
||
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே |
உரை | |
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|
257. குறிஞ்சி |
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ, |
||
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின், |
||
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு |
||
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்- |
||
5 |
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் |
|
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் |
||
நல் மலை நாட!-நயந்தனை அருளாய், |
||
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் |
||
கடு மா வழங்குதல் அறிந்தும், |
||
10 |
நடு நாள் வருதி; நோகோ யானே. |
உரை |
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்
|
258. நெய்தல் |
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ |
||
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே- |
||
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் |
||
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார், |
||
5 |
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
|
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, |
||
அகல் அங்காடி அசை நிழல் குவித்த |
||
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை |
||
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் |
||
10 |
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் |
|
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே. |
உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்
|
259. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ |
||
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், |
||
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, |
||
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் |
||
5 |
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
சாரல் ஆரம் வண்டு பட நீவி, |
||
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி |
||
அரிய போலக் காண்பேன்-விரி திரைக் |
||
கடல் பெயர்ந்தனைய ஆகி, |
||
10 |
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? |
உரை |
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்
|
261. குறிஞ்சி |
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு |
||
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு |
||
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம், |
||
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி, |
||
5 |
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, |
|
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் |
||
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் |
||
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை, |
||
எருவை நறும் பூ நீடிய |
||
10 |
பெரு வரைச் சிறு நெறி வருதலானே. |
உரை |
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.-சேந்தன் பூதனார்
|
263. நெய்தல் |
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின் |
||
இறை வரை நில்லா வளையும், மறையாது |
||
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு |
||
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு, |
||
5 |
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, |
|
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு, |
||
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் |
||
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக் |
||
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு, |
||
10 |
உரைத்த-தோழி!-உண்கண் நீரே. |
உரை |
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.-இளவெயினனார்
|
266. முல்லை |
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த |
||
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ |
||
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
||
அகலுள் ஆங்கண் சீறூரேமே; |
||
5 |
அதுவே சாலும் காமம்; அன்றியும், |
|
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று |
||
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு |
||
இரீஇய காலை இரியின், |
||
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? |
உரை | |
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
|
267. நெய்தல் |
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, |
||
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் |
||
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் |
||
5 |
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
|
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், |
||
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, |
||
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; |
||
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, |
||
10 |
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
|
'இவை மகன்' என்னா அளவை, |
||
வய மான் தோன்றல் வந்து நின்றனனே. |
உரை | |
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்
|
268. குறிஞ்சி |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து, |
||
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ, |
||
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த |
||
5 |
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் |
|
காதல் செய்தவும் காதலன்மை |
||
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம், |
||
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு |
||
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. |
உரை | |
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம்.-வெறி பாடிய காமக்கண்ணியார்
|
269. பாலை |
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் |
||
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன், |
||
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, |
||
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் |
||
5 |
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி |
|
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், |
||
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார், |
||
சிறு பல் குன்றம் இறப்போர்; |
||
அறிவார் யார், அவர் முன்னியவ்வே? |
உரை | |
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.- எயினந்தை மகன் இளங்கீரனார்.
|
270. நெய்தல் |
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத் |
||
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து |
||
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, |
||
உருள் பொறி போல எம் முனை வருதல், |
||
5 |
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் |
|
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!- |
||
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை |
||
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் |
||
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் |
||
10 |
கூந்தல் முரற்சியின் கொடிதே; |
|
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. |
உரை | |
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்
|
273. குறிஞ்சி |
இஃது எவன்கொல்லோ- தோழி!-மெய் பரந்து |
||
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் |
||
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின் |
||
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என, |
||
5 |
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், |
|
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை |
||
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என் |
||
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் |
||
குன்ற நாடனை உள்ளுதொறும், |
||
10 |
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? |
உரை |
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
|
274. பாலை |
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ, |
||
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, |
||
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள் |
||
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் |
||
5 |
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், |
|
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக் |
||
கூறின்றும் உடையரோ மற்றே-வேறுபட்டு |
||
இரும் புலி வழங்கும் சோலை, |
||
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? |
உரை | |
தோழி பருவம் மாறுபட்டது.-காவன் முல்லைப் பூதனார்
|
276. குறிஞ்சி |
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு |
||
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு |
||
வயவர் மகளிர்' என்றிஆயின், |
||
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்; |
||
5 |
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் |
|
கான மஞ்ஞை கட்சி சேக்கும் |
||
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது |
||
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை |
||
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, |
||
10 |
வேங்கை முன்றில் குரவையும் கண்டே. |
உரை |
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்
|
278. நெய்தல் |
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, |
||
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, |
||
பொன்னின் அன்ன தாது படு பல் மலர் |
||
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
||
5 |
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
|
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- |
||
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி |
||
குளம்பினும் சேயிறா ஒடுங்கின; |
||
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. |
உரை | |
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்
|
282. குறிஞ்சி |
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ, |
||
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட, |
||
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய் |
||
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த, |
||
5 |
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் |
|
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல் |
||
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை, |
||
ஆடு மழை மங்குலின், மறைக்கும் |
||
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே? |
உரை | |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-நல்லூர்ச் சிறு மேதாவியார்
|
283. நெய்தல் |
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற |
||
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் |
||
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!- |
||
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, |
||
5 |
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை |
|
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, |
||
ஏமுற விளங்கிய சுடரினும், |
||
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே? |
உரை | |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
285. குறிஞ்சி |
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள் |
||
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை |
||
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி, |
||
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு, |
||
5 |
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, |
|
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட |
||
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் |
||
குன்ற நாடன் கேண்மை நமக்கே |
||
நன்றால் வாழி-தோழி!-என்றும், |
||
10 |
அயலோர் அம்பலின் அகலான், |
|
பகலின் வரூஉம், எறி புனத்தானே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, 'அம்ப லும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
|
286. பாலை |
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன, |
||
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி |
||
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் |
||
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என, |
||
5 |
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து |
|
இனைதல் ஆன்றிசின்-ஆயிழை!-நினையின் |
||
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய |
||
நின் தோள் அணி பெற வரற்கும் |
||
அன்றோ-தோழி!-அவர் சென்ற திறமே? |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்
|
288. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு |
||
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் |
||
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் |
||
குன்ற நாடன் பிரிவின் சென்று, |
||
5 |
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
|
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, |
||
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் |
||
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் |
||
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந் |
||
10 |
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? |
உரை |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்
|
291. நெய்தல் |
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் |
||
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு |
||
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் |
||
5 |
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
|
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!- |
||
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, |
||
எல்லித் தரீஇய இன நிரைப் |
||
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? |
உரை | |
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்
|
292. குறிஞ்சி |
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த |
||
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் |
||
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், |
||
யாணர் வைப்பின், கானம் என்னாய்; |
||
5 |
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
|
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் |
||
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் |
||
கராஅம் பேணாய்; இரவரின், |
||
வாழேன்-ஐய!-மை கூர் பனியே! |
உரை | |
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்
|
294. குறிஞ்சி |
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
||
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
||
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
||
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
||
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
||
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
||
சிலம்புடன் கமழும் சாரல் |
||
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! |
உரை | |
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|
295. நெய்தல் |
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், |
||
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல் |
||
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள், |
||
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை, |
||
5 |
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, |
|
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, |
||
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் |
||
இள நலம் இற்கடை ஒழியச் |
||
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே. |
உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம்.- ஒளவையார்
|
297. குறிஞ்சி |
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப, |
||
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்; |
||
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ, |
||
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; |
||
5 |
'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை; |
|
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே; |
||
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் |
||
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் |
||
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை |
||
10 |
மையல் உறுகுவள், அன்னை; |
|
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
299. நெய்தல் |
உரு கெழு யானை உடை கோடு அன்ன, |
||
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, |
||
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது |
||
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் |
||
5 |
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: |
|
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ- |
||
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை |
||
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் |
||
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
300. மருதம் |
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
||
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
||
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
||
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
||
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
||
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
||
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
||
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
||
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
||
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. |
உரை | |
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
301. குறிஞ்சி |
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
||
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
||
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்' என, |
||
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
||
யாய் மறப்பு அறியா மடந்தை- |
||
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. |
உரை | |
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|
306. குறிஞ்சி |
தந்தை வித்திய மென் தினை பைபயச் |
||
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- |
||
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என, |
||
நல்ல இனிய கூறி, மெல்லக் |
||
5 |
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் |
|
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி |
||
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர, |
||
பைதல் ஒரு நிலை காண வைகல் |
||
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல் |
||
10 |
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் |
|
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே? |
உரை | |
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்
|
307. நெய்தல் |
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; |
||
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; |
||
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த |
||
திதலை அல்குல் நலம் பாராட்டிய |
||
5 |
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்: |
|
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை |
||
மா அரை மறைகம் வம்மதி-பானாள், |
||
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் |
||
மெல் இணர் நறும் பொழில் காணா |
||
10 |
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. |
உரை |
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்
|
311. நெய்தல் |
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, |
||
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: |
||
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, |
||
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், |
||
5 |
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
|
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, |
||
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
||
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே: |
||
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, |
||
10 |
இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. |
உரை | |
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்
|
313. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, |
||
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, |
||
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, |
||
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, |
||
5 |
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
|
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள் |
||
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
||
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் |
||
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து |
||
10 |
அருவியின் ஒலித்தல் ஆனா, |
|
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
316. முல்லை |
மடவது அம்ம, மணி நிற எழிலி- |
||
'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி, |
||
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின் |
||
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என, |
||
5 |
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் |
|
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை |
||
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் |
||
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
||
தளி தரு தண் கார் தலைஇ, |
||
10 |
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்
|
317. குறிஞ்சி |
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த |
||
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப, |
||
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை, | ||
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும் |
||
5 |
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை |
|
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து |
||
என் ஆகுவகொல்தானே-எந்தை |
||
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி, |
||
ஆயமொடு குற்ற குவளை |
||
10 |
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? |
உரை |
தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
|
318. பாலை |
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம் |
||
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த |
||
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, |
||
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, |
||
5 |
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
|
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் |
||
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, |
||
என்றூழ் விடர் அகம் சிலம்ப, |
||
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. |
உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
325. பாலை |
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை |
||
இரை தேர் வேட்கையின் இரவில் போகி, |
||
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த |
||
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென |
||
5 |
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், |
|
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று-இவள் |
||
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, |
||
வீங்கு நீர் வாரக் கண்டும், |
||
தகுமோ?-பெரும!-தவிர்க நும் செலவே. |
உரை | |
தோழி செலவு அழுங்குவித்தது.-மதுரைக் காருலவியங் கூத்தனார்
|
326. குறிஞ்சி |
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
||
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
||
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
||
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
||
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
||
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
||
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
||
வண்டு எனும் உணராவாகி, |
||
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. |
உரை |
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
328. குறிஞ்சி |
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, |
||
சிற்சில வித்திப் பற்பல விளைந்து, |
||
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் |
||
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், |
||
5 |
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள், |
|
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, |
||
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே, |
||
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது |
||
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், |
||
10 |
விலங்கு மலை அடுக்கத்தானும், |
|
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. |
உரை | |
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்
|
329. பாலை |
வரையா நயவினர் நிரையம் பேணார், |
||
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் |
||
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, |
||
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு |
||
5 |
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி |
|
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் |
||
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும், |
||
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து |
||
அல்கலர் வாழி-தோழி!-உதுக் காண்: |
||
10 |
இரு விசும்பு அதிர மின்னி, |
|
கருவி மா மழை கடல் முகந்தனவே! |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|
330. மருதம் |
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
||
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
||
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
||
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை |
||
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
||
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
||
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
||
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
||
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. |
உரை | |
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
331. நெய்தல் |
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் |
||
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, |
||
கானல் இட்ட காவற் குப்பை, |
||
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி, |
||
5 |
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, |
|
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என |
||
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் |
||
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப! |
||
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; |
||
10 |
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் |
|
பிறர் பிறர் அறிதல் யாவது- |
||
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே. |
உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்
|
333. பாலை |
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
||
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
||
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
||
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
||
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
||
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
||
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
||
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
||
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
||
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. |
உரை | |
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? |
உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|
336. குறிஞ்சி |
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
||
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
||
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
||
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
||
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
||
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
||
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
||
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
||
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! |
உரை | |
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|
337. பாலை |
உலகம் படைத்த காலை-தலைவ!- |
||
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- |
||
முதிரா வேனில் எதிரிய அதிரல், |
||
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், |
||
5 |
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய |
|
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், |
||
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் |
||
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, |
||
10 |
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. |
உரை |
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
339. குறிஞ்சி |
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்; |
||
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும் |
||
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, |
||
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
||
5 |
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த |
|
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி, |
||
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் |
||
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ, |
||
மின் நேர் ஓதி இவளொடு, நாளை, |
||
10 |
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் |
|
தெண் நீர் மணிச் சுனை ஆடின், |
||
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே? |
உரை | |
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்
|
342. நெய்தல் |
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு |
||
மதில் என மதித்து வெண் தேர் ஏறி, |
||
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின் |
||
சேரி சேரா வருவோர்க்கு, என்றும் |
||
5 |
அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என, |
|
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்: |
||
யானே-எல்வளை!-யாத்த கானல் |
||
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த |
||
சென்னிச் சேவடி சேர்த்தின், |
||
10 |
'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே. |
உரை |
குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொல் கேளாது விடலின், இறப்ப ஆற்றான் ஆயினான் என உணர்ந்து, ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது; தலைமக னுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்றாது தன்னுள்ளே ெ
|
344. குறிஞ்சி |
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட |
||
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் |
||
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் |
||
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!- |
||
5 |
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை |
|
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் |
||
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப, |
||
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப் |
||
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி |
||
10 |
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, |
|
செந் தினை உணங்கல் தொகுக்கும், |
||
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே? |
உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
|
345. நெய்தல் |
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் |
||
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, |
||
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், |
||
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, |
||
5 |
வெளிய விரியும் துறைவ! என்றும், |
|
அளிய பெரிய கேண்மை நும் போல், |
||
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் |
||
தேறா நெஞ்சம் கையறுபு வாட, |
||
நீடின்று விரும்பார் ஆயின், |
||
10 |
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! |
உரை |
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்
|
347. குறிஞ்சி |
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
மாதிர நனந் தலை புதையப் பாஅய், |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு, |
||
வான் புகு தலைய குன்றம் முற்றி, |
||
5 |
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் |
|
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன, |
||
அருவி இழிதரும் பெரு வரை நாடன், |
||
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப் |
||
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி |
||
10 |
வேனில் தேரையின் அளிய, |
|
காண வீடுமோ-தோழி!-என் நலனே? |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.-பெருங்குன்றூர் கிழார்
|
351. குறிஞ்சி |
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை |
||
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள் |
||
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள் |
||
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி |
||
5 |
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள் |
|
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த |
||
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து, |
||
சிறு தினை வியன் புனம் காப்பின், |
||
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே. |
உரை | |
தோழி அருகு அடுத்தது.-மதுரைக் கண்ணத்தனார்
|
353. குறிஞ்சி |
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
||
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
||
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
||
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
||
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
||
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
||
காமம் கனிவதுஆயினும், யாமத்து |
||
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
||
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. |
உரை | |
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|
354. நெய்தல் |
தான் அது பொறுத்தல் யாவது-கானல் |
||
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை |
||
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த |
||
கானல் நண்ணிய வார் மணல் முன்றில், |
||
5 |
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை |
|
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த |
||
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், |
||
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு |
||
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் |
||
10 |
அளம் போகு ஆகுலம் கடுப்ப, |
|
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே? |
உரை | |
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! |
உரை | |
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|
359. குறிஞ்சி |
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா |
||
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, |
||
கன்று தாய் மருளும் குன்ற நாடன் |
||
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது |
||
5 |
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
|
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை |
||
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் |
||
போருடை வருடையும் பாயா, |
||
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? |
உரை | |
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்
|
360. மருதம் |
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய |
||
விழவு ஒழி களத்த பாவை போல, |
||
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி, |
||
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், |
||
5 |
சென்றீ-பெரும!-சிறக்க, நின் பரத்தை! |
|
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே |
||
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, |
||
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும் |
||
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது |
||
10 |
உற்ற நின் விழுமம் உவப்பென்; |
|
மற்றும் கூடும், மனை மடி துயிலே. |
உரை | |
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்
|
361. முல்லை |
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி |
||
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; |
||
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, |
||
படு மழை பொழிந்த தண் நறும் புறவில், |
||
5 |
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
|
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் |
||
தந்தன நெடுந்தகை தேரே; என்றும் |
||
அரும் படர் அகல நீக்கி, |
||
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. |
உரை | |
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
|
363. நெய்தல் |
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் |
||
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என |
||
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம் |
||
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் |
||
5 |
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு |
|
வம்மோ-தோழி!-மலி நீர்ச் சேர்ப்ப- |
||
பைந் தழை சிதைய, கோதை வாட, |
||
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு |
||
சில விளங்கு எல் வளை ஞெகிழ, |
||
10 |
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. |
உரை |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத
|
365. குறிஞ்சி |
அருங் கடி அன்னை காவல் நீவி, |
||
பெருங் கடை இறந்து, மன்றம் போகி, |
||
பகலே, பலரும் காண, வாய் விட்டு |
||
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி, |
||
5 |
சென்மோ வாழி-தோழி!-பல் நாள் |
|
கருவி வானம் பெய்யாதுஆயினும், |
||
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
||
வான் தோய் மா மலைக் கிழவனை, |
||
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே. |
உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது.-கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. |
உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|
368. குறிஞ்சி |
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, |
||
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, |
||
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு |
||
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? |
||
5 |
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த |
|
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய |
||
பசலை பாய்தரு நுதலும், நோக்கி, |
||
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி, |
||
வெய்ய உயிர்த்தனள் யாயே- |
||
10 |
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே! |
உரை |
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்
|
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. |
உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? |
உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
375. நெய்தல் |
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர, |
||
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் |
||
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப! |
||
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த |
||
5 |
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, |
|
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல் |
||
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை |
||
எறிவன போல வரூஉம் |
||
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? |
உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
378. நெய்தல் |
யாமமும் நெடிய கழியும்; காமமும் |
||
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல் |
||
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய, |
||
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்; |
||
5 |
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், |
|
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் |
||
அயல் இற் பெண்டிர் பசலை பாட, |
||
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல் |
||
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, |
||
10 |
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, |
|
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு |
||
நாடாது இயைந்த நண்பினது அளவே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
|
379. குறிஞ்சி |
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
||
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
||
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
||
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
||
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
||
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
||
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
||
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
||
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
||
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
||
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. |
உரை | |
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|
380. மருதம் |
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு |
||
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், |
||
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, |
||
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; |
||
5 |
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
|
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் |
||
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் |
||
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; |
||
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை, |
||
10 |
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
|
புரவியும் பூண் நிலை முனிகுவ; |
||
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! |
உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்
|
382. நெய்தல் |
கானல் மாலைக் கழி நீர் மல்க, |
||
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த, |
||
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி, |
||
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் |
||
5 |
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, |
|
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை!- |
||
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த் |
||
தண்ணம் துறைவன் நாண, |
||
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. |
உரை | |
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
|
383. குறிஞ்சி |
கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை |
||
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி |
||
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு, |
||
5 |
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள், |
|
அருளினை போலினும், அருளாய் அன்றே- |
||
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் |
||
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு, |
||
ஓங்கு வரை நாட! நீ வருதலானே. |
உரை | |
தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.-கோளியூர்கிழார் மகனார் செழியனார்
|
386. குறிஞ்சி |
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல், |
||
துறுகட் கண்ணிக் கானவர் உழுத |
||
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர், |
||
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது, |
||
5 |
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். |
|
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ, |
||
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என, |
||
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம் |
||
கல் கெழு சிறுகுடிப் பொலிய, |
||
10 |
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. |
உரை |
பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப
|
387. பாலை |
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், |
||
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, |
||
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் |
||
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
||
5 |
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் |
|
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து |
||
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த |
||
வேல் கெழு தானைச் செழியன் பாசறை |
||
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண், |
||
10 |
நெடும் பெருங் குன்றம் முற்றி, |
|
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்
|
391. பாலை |
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே- |
||
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் |
||
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் |
||
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை |
||
5 |
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், |
|
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு |
||
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் |
||
யாரோ பிரிகிற்பவரே-குவளை |
||
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் |
||
10 |
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? |
உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
392. நெய்தல் |
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை |
||
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, |
||
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் |
||
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் |
||
5 |
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், |
|
பெண்ணை வேலி, உழை கண் சீறூர் |
||
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல; |
||
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த |
||
கானலொடு அழியுநர் போலாம்-பானாள், |
||
10 |
முனி படர் களையினும் களைப; |
|
நனி பேர் அன்பினர் காதலோரே. |
உரை | |
இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
393. குறிஞ்சி |
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் |
||
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, |
||
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, |
||
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், |
||
5 |
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
|
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, |
||
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் |
||
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, |
||
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, |
||
10 |
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
|
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர் |
||
புதுவர் ஆகிய வரவும், நின் |
||
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? |
உரை | |
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்
|
395. நெய்தல் |
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு |
||
யாரையும் அல்லை; நொதுமலாளனை; |
||
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; |
||
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் |
||
5 |
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
|
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் |
||
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த |
||
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் |
||
கடல் கெழு மாந்தை அன்ன, எம் |
||
10 |
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. |
உரை |
'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.-அம்மூவனார்
|
396. குறிஞ்சி |
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, |
||
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, |
||
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், |
||
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, |
||
5 |
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
|
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று |
||
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! |
||
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் |
||
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள் |
||
10 |
காமர் நனி சொல் சொல்லி, |
|
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? |
உரை | |
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
|
398. நெய்தல் |
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே; |
||
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே; |
||
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் |
||
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து, |
||
5 |
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே; |
|
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன், |
||
சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர் |
||
சொல்லாள் மெல்லியல், சிலவே-நல் அகத்து |
||
யாணர் இள முலை நனைய, |
||
10 |
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. |
உரை |
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.- உலோச்சனார்
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? |
உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|